Pages

28/07/2014

சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் இளைய தளபதியே போதும்


அனைவருக்கும் வணக்கம் நான் பதிவு எழுதி பல  ஆகிவிட்டது. வேலை காரணமாக இணையத்தின் பக்கமே வரமுடியவில்லை இப்பொழுது தான் நேரம் கிடைத்துள்ளது அதனால் தான் இந்த  முடிவு. நீ பதிவு எழுதாததால் என்ன இப்போது மூழ்கிவிட்டது என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக புரிகிறது. நான் பதிவு எழுதாததால் என் வாசகர்கள்(???) ஆழ்ந்த சந்தோஷத்தில் மன்னிக்கவும் வருத்தத்தில் இருப்பதாக கேள்விபட்டேன் அதனால் இப்போதே அவர்களுக்கு இன்பம் அளிக்கவே இந்த பதிவு. மொக்கை போட்டது பொது எதையாவது ஆரம்பின்னுலாம் திட்ட கூடாது இதோ உங்களுக்காக இந்த படைப்பு(???)....



வழக்கம் போல இளைய தளபதி விஜய் பற்றி தான் இந்த பதிவு. பிடித்தவர்கள் மேலும் தொடரலாம் பிடிக்காதவர்கள் நிறுத்திகொள்ளுங்கள். பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள் தான் ஆர்வமாக படிப்பீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் ஏன் என்றால் நீங்கள் எதிர்த்து தானே விஜயை இந்த அளவுக்கு வளர வைத்துள்ளீர்கள். பிடிகாதவரையும் வளரச்செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அல்லவா நீங்கள் உங்களுக்காகவும் விஜய்யின் ரசிகர்களுக்காகவும் தான் இந்த பதிவு இனி பதிவுக்கு செல்லலாம்...

வேலைகள் காரணமாக பதிவு எழுதமுடியாவிட்டாலும் விஜய் பற்றிய செய்திகளை அவ்வப்போது தெரிந்து வந்துள்ளேன். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது பற்றி குமுதம் நடத்திய மெகா சர்வேயில் விஜய் வென்றதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைதேன். அதன் பிறகு அரசியலில் தோல்வியடைந்த தலைவர்கள் எந்த பட்டனை அழுத்தினாலும் அவர்களுக்கே ஒட்டு பதிவு ஆவது போல எந்திரத்தை அமைத்துவிட்டார்கள் அல்லது கள்ள ஒட்டு போட்டு வென்றுவிட்டார்கள் என்று தோல்விக்கு ஆறுதலாக எதாவது நொண்டி சாக்கை சொல்வது போல விஜய் ஜெயிக்கவில்லை தவறாக அறிவித்துவிட்டார்கள் என்று வயித்தெரிச்சலில் தோல்வி அடைந்தவர்கள் கிளப்பிவிட்டதை கேள்விப்பட்டு இன்னும் அதிகமாக சந்தோஷமடைந்தேன்.
ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜயை அறிவிப்பதற்கு வேலைகள் நடக்கிறது என்றும் அதற்கு விஜய் நடிகர்களை அழைகிறார் என்றும் செய்திகள் வளம் வந்தன. வழக்கம் போல விஜயை உயர்த்துவதாக எது நடந்தாலும் வாலண்டியராக ஆஜராகும் ஜெயலலிதாவும் விழா நடக்க கூடாது என்று தடை போட்டது. ஜெயா விஜய்க்கு எதிராக நடப்பதாக நினைத்து செய்யும் செயல்கள் எதோ ஒரு விதத்தில் விஜய்க்கு நன்றாக ஆதரவாக அமைந்துவிடும் அவற்றில் இதுவும்  ஒன்று. விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பதே என் கருத்து. விஜயும் தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பது போல தான் விஜய் விருதுகள் வழங்கும் விழாவில்   பேசினார். விஜயின் அன்றைய பேச்சு மிக தெளிவாக இருந்தது என்பது அனைவரும் அவரது பேச்சுக்கு கொடுத்த கைதட்டல்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். விஜய் இதுவரை இவ்வளவு தெளிவாக  பேசியது இல்லை.

எனவே நான் முதலிலே சொல்லியது போல இந்த பதிவு விஜய் ரசிகர்களுக்கு தான். விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற வேண்டும் என்று பல விஜய் ரசிகர்களும் நினைகிறார்கள். அதில் என்ன தவறு தனக்கு பிடித்த நடிகன் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு தானே என நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை தான்  அனால் அந்த முதல் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுவதில் தான் இருக்கிறது  என்று நினைப்பது தான் தவறு. ரசிகர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் பட்டம் என்பது வேறு அடையாளம் என்பது வேறு. பட்டம் என்பது ஒரு மனிதனை சிறப்பிப்பது அடையாளம் என்பது ஒரு மனிதனால் தன் சிறப்பாக உருவாக்கபடுவது. சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு அளிக்கப்பட்ட பட்டம் இல்லை அது ரஜினியால் உருவாக்கப்பட்ட சிறப்பு அடையாளம் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சூப்பர் ஸ்டார் பட்டதினால் ரஜினிக்கு பெறுமை இல்லை ரஜினியால் தான் அந்த பட்டத்துக்கு பெருமை அதனால் தான் இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுகொண்டவர் யாராக இருந்தாலும் அவர் ரஜினியின் சிறப்புகள் அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள் இல்லை.



இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் என மக்களால் எதிர்பார்க்கப்படும் இருவர் விஜயும் அஜித்தும் தான். ஆனால் நான் இங்கு விஜயை பற்றி மட்டும் தான் எழுதபோகிறேன் ஏன் என்றால் நான் அஜித்தை பற்றி உண்மையை எழுதினாலும் நான் விஜய் ரசிகன் என்ற ஒரே காரணத்திற்காக என்னிடம் சண்டை போட ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. எனவே நான் இங்கு எழுதபோவது விஜய் பற்றி மட்டும் தான். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த போது அவருடைய பட்டம் அவ்வளவு மதிப்பு மிக்கதாக இல்லை. ஏன் என்றால் அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் இருந்தனர் அதை போல ரஜினி தமிழகத்தின்   சூப்பர் ஸ்டார் அவ்வளவு தான் ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் என்றாலே இந்தியாவில் ரஜினி மட்டும் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் உயர்ந்துள்ளார். அதனால் தான் இன்று பலர் ரஜினியின் அடையாளத்தை பெற விரும்புகின்றனர். ரஜினியின் அடையலாம் என்பது அவரது சூப்பர் ஸ்டார் பட்டமோ அல்லது அவரது நடிப்பு ஸ்டைலோ இல்லை அவரின் திரையுலக சாதனை தான். சினிமாவை தவிர்த்து ரஜினி தனி மனித வாழ்கை பற்றி நிறைய பேசுக்கள் இருந்தாலும் சினிமாவில் அவர் ஒரு ஜாம்பவான் என்பது அனைவரும் ஒத்துகொள்ளும் உண்மை. ரஜினிக்கு முன்னால் சினிமாவில் ஒரு ஜாம்பவான் இருந்தார் அவர் எம்.ஜி.ஆர். ரஜினி எம்.ஜி.ஆர் போல நடிக்க வேண்டும் என்றோ அவரின் மக்கள் திலகம் என்ற பட்டதை அடைய வேண்டும் என்றோ நினைக்கவில்லை. தனக்கென ஒரு அடையாளத்தை எற்ப்படுதினார். தனக்கென ஒரு பாதை வகுத்தார் வெற்றியும் பெற்றார் சிகரத்தை அடைந்தார். எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியை ரஜினியும் பெற்றார் ஆனால் எம்.ஜி.ஆர் சென்ற அதே பாதையில் சென்று அல்ல வேறு பாதையில் சென்று பெற்றார். ஆனால் இன்று ரஜினி அடைந்த உயரத்தை அடைய விரும்பும் நடிகர்களும் சரி அந்த நடிகர்களின் ரசிகர்களும் சரி ரஜினி சென்ற அதே பாதையில் சென்றால் தான் அந்த வெற்றியை பெற முடியும் என்று நினைகிறார்கள் அது தவறு என்பதை நடிகர்களும் சரி அவர்களின் ரசிகர்களும் சரி புரிந்து கொள்ளவேண்டும். மற்ற நடிகர்களை பற்றி எனக்கு கவலை இல்லை நான் குறிப்பாக சொல்வது விஜய்க்கும் அவரின் ரசிகர்களுக்கும் தான்.

அன்று ரஜினி தனக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்   பட்டதை பல சாதனைகள் மூலம் தனக்கான சிறப்பு அடையாளமாக மாற்றினார். அதனால் தான் இன்று பலரும் அவரை போன்று வரவேண்டும் என்று நினைக்கவைக்கும் அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார் . அதே போல நேற்று ரசிகர்கள் உங்களுக்கு கொடுத்த இளைய தளபதி என்ற பட்டதை உங்களுக்காக தனி சிறப்பு அடையாளமாக மாற்றுங்கள் அடுத்த இளைய தளபதி யார் என்று மக்கள் நினைக்க வைக்கும் அளவிற்கு திரையுலகில் உங்கள் சாதனை அமைய வேண்டும். ரஜினி அடைந்த அந்த சிகரத்தை நீங்கள் அடைவதற்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவை இல்லை  ரஜினியை போன்றே நடிக்க தேவை இல்லை அவரின் பாதையிலேயே நீங்கள் செல்ல தேவை இல்லை உங்களுக்கென ஒரு தனி பாதை அமைத்து முன்னேறுங்கள் நிச்சயம் சிகரத்தை அடைவீர்கள் இதை விஜய் மற்றும் அவரின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

07/04/2014

என்ன நடக்குது இளைய தளபதி?


நான் இளையதளபதி விஜயின் தீவிர ரசிகன் அவரது ஒவ்வொரு படம் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது தெரிந்து வைத்துகொள்வேன். ஏற்கனவே துப்பாக்கி என்ற மிக பெரிய 100 கோடி வசூல் செய்த ஹிட் படம் கொடுத்த விஜய்-முருகதாஸ் கூட்டணியில் கத்தி என்று மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. இது என்னை போன்ற அணைத்து விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துவந்தது. அதனால் கத்தி படத்தின் ஒவ்வொரு தகவல்களையும் ஆவலாக படித்து வந்தேன். ஆனால் சமீபத்தில் அதை பற்றி வந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அது உங்கள் கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர் இலங்கையில் பல தமிழ் மக்களை கொன்றுகுவித்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதாகும். இது விஜய்க்கு  தெரிந்தோ தெரியாலமலோ நடந்திருக்கலாம் அது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் இப்போது ஈழத்தமிழர்களால் அவர் இலங்கை அரசுக்கு நெருங்கியவர் என்பதற்கு ஆதாரம் தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. இப்போதும் விஜய் அமைதியாக இருப்பது நல்லது இல்லை.




விஜய் அண்ணா...

உங்களை ரசிக்கும் பல தமிழ் மக்களில் நானும் ஒருவன் என்னை போன்று உங்களுக்காக பல தமிழ் மக்கள் உங்களுக்காகவும் உங்கள் வெற்றிக்காகவும் உழைதிருகிறார்கள் அத்தகைய நல்ல உள்ளங்களை நீங்கள் புண் படுத்தலாமா? இந்த படத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஒரு வெற்றி தான் உங்களை இந்த சினிமா உலகில் உயர்த்தி விட போகிறதா? தொடர்ந்து 5 தோல்விகள் கொடுத்தும் உங்களை ஆதரித்திருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். இன்னும் உங்களிடம் அவர்கள் தொடர்ந்து வெற்றியை மட்டுமே எதிர்பார்கவில்லை நீங்கள் படம் நடித்தால் மட்டுமே அதை பார்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது அத்தகைய அன்பு ;உள்ளங்களை ஒரு வெற்றி படத்திற்காக நீங்கள் புண்படுத்துவது நியாயம் ஆகாது? இணையங்களில் வரும்  உண்மை தான் என்றால் உடனடியாக நீங்கள் அந்த படத்தின் தயாரிப்பை வேறு ஒருவரின் கைக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் அப்படி முடியவில்லை என்றால் படத்தை விட்டு விலகுங்கள். உங்களுக்கு இழப்பு ஒரு படம் மட்டுமே ஆனால் நீங்கள் அப்படி செய்தால் கோடிகணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களை நீங்கள் அடைவீர்கள் இத்தனை நாள் உங்களை தவறாக பேசிய உங்கள் எதிர்பாளர்களும் உங்களை நேசிக்க இது வழி வகுக்கும். ஒரு படத்தை இழந்து இவை அனைத்தையும் அடையலாம்.





அப்படி இல்லாமல் ஒரு வெற்றி படம் தான் உங்களுக்கு முக்கியம் என்றால் பல தமிழ் ரசிகர்களை இழக்க நேரிடும். அந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தொடர்ந்து அந்த படத்தில் நடிப்பது எங்களின் மனதை புண் படுத்துவதற்கு சமம். சிந்தியுங்கள் உங்கள் மனைவி ஒரு இலங்கை தமிழச்சி என்பதை தெரிந்தபோது நான் மகிழ்ச்சியடைதேன். நான் ஏன் இலங்கை தமிழருக்கு அதரவாக பேச வேண்டும் என்று அஜித் போன்ற சில நடிகர்கள் கேட்டதற்கு மத்தியில் நீங்கள் தமிழருக்காக கூட்டம் போட்டு இலங்கை அரசை பார்த்து சவால் விட்டபோது நான் பெருமையடைந்தேன். ஆனால் இன்று என்னவாயிற்று ஏன் இந்த தயக்கம் முருகதாசின் ஒரு படத்தை மட்டும் நம்பி நீங்கள் இல்லை. உங்களுக்காக கோடிகணக்கான ரசிகர்கள் இருகிறார்கள். அவர்களின் மனதை புரிந்து செயல்படுங்கள். அமைதியாக இருந்து எதிர்கொள்வதற்கு உங்களின் எதிரிகள் உங்களை எதிர்கவில்லை மாறாக உங்கள் ரசிகர்கள் உங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்கிறார்கள். இப்போதும் அமைதி காப்பது ரசிகர்களை அவமானபடுத்தும் செயல். உங்களை நாங்கள் இலங்கைக்கு எதிராக போராட சொல்லவில்லை தமிழரின் உணர்வுக்கு எதிராக செயல் படாதீர்கள் என்று தான் சொல்கிறோம். இது என்னை போன்ற பல ரசிகர்களின் ஆசை.

நிறைவேற்றுங்கள் அண்ணா இல்லையெனில் உங்களின் ஒரு ரசிகனை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று நினைத்துகொள்ளுங்கள். நான் ஒருவன் உங்களை எதிர்த்தால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வரபோவது இல்லை ஆனால் என்னை போன்ற பல ரசிகர்கள் உங்களுக்கு இருகிறார்கள் அவர்கள் அனைவரும் இதே முடிவை எடுத்தால் உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனை சிந்தித்து பாருங்கள் இது உங்களை மிரட்டி அடிபணியவைக்கும் முயற்சி இல்லை உங்கள் ரசிகர்களின் அன்பு வேண்டுகோள் நிறைவேற்றுங்கள் அண்ணா...

உங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்...



முருகதாஸ் சார் ஏழாம் அறிவில் நீங்கள் காட்டிய தமிழ் உணர்வுகள், தமிழ் உணர்ச்சி வசனங்கள், ஈழத்தமிழருக்கு ஆதரவான வசனங்கள் அனைத்தும் அந்த படம் ஓட வேண்டும் என்பதற்காக என்று  நிருபித்துவிடீர்களே. உங்களின் என்னதிர்காகவே தான் அந்த படம் நீங்கள் நினைத்தது போல சரியாக போகவில்லை.

30/03/2014

மாணவனின் உயிரை பலி வாங்கிய கல்வி



செல்வங்களில் அழிக்க முடியாத செல்வம் கல்விச்செல்வம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. என்று கல்வியின் முக்கியத்துவத்தை பலரும் பலவிதமாக சொல்லியிருகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியரை வைத்து போற்ற வேண்டும் என்று சொல்லியிருகிறார்கள். இத்தகைய சிறப்புகளை கொண்ட கல்வியும், அதனை கற்றுத்தரும் ஆசிரியர்களும் இன்று உதவுவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அல்ல அவர்களின் இறப்புக்கு தான். கடந்த சில வருடங்களில் கல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்களில் எனது நண்பனும் ஒருவன். அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ஆனால் அவன் நம்பிய சிவனோ முருகனோ அவனை காப்பாற்றவில்லை. அவன் நம்பிய கடவுளே அவனை கைவிட்டபோது நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று இயேசுவும் அல்லாவும் நினைத்துவிட்டார்கள் போல கடவுளர்களுக்குள் காப்பாற்றாமல் விடுவதில் போட்டி நடந்திருகிறது வென்றது யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சென்றது ஒரு உயிர்.

தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளுக்காக யார் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் சிலர். ஆம் அவன் கோழை தான் தான் செய்த தவறுக்காக பிறருக்கு தண்டனை கொடுக்கும் பிறர் உயிரை கொல்லும்  வீரர்களுக்கு மத்தியில் பிறர் செய்த தவறுக்காக தனக்கு தண்டனை கொடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட அவன் கோழை தான். பாவம் மற்றவருக்கு தீங்கு செய்ய தெரியாதவன் அவன் ஒருவேளை தனக்கு மன உளைச்சலை உண்டாக்கிய அந்த ஆசிரியரை அவன் கொலை செய்திருந்தால் அவனை வீரன் என்று சொல்லியிருப்பார்களோ??? அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை அப்போது அவனுக்கு கிடைத்திருக்கும் பெயர் கொலைகாரன் கற்று கொடுத்த ஆசிரியரை கொன்ற பாவி மகா கொடூரன் என்ற பெயர்கள் அவனுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவன் தன்னையே கொலை செய்து நல்லவன் ஆகிவிட்டான். கொலை செய்பவரை  விட அதற்க்கு காரணமாக இருப்பவருக்கு தான் தண்டனை அதிகம் என்று சொல்கிறது நம் நாட்டு சட்டம். எனது நண்பன் தன்னையே கொலை செய்துகொண்டதற்கு காரணமாக அமைந்த அந்த மதிற்பிற்குரிய ஆசிரியருக்கு தண்டனை தருமா இந்த சட்டம்.? நீதியும் சட்டமும் ஏழைகளுக்கு இல்லை என்பது போல மாணவர்களுக்கும் இல்லை என்றாகிவிட்டது.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்கிறார்கள் ஆனால் இளைஞர்களின் எதிர்காலம் இன்று ஆசிரியர்களின் கையில் இருக்கிறது. கையில் இருக்கிறது என்பதை விட அவர்களின் கால்களில் உதை  படும் பந்தாக இருக்கிறது அதை வைத்து அவர்கள் கால்பந்து விளையாடிகொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கோல் என்று நினைப்பது எதிர்காலத்தை வளமாக்குவது அல்ல மாறாக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது தான். தான் காலில் இருக்கும் பந்தை இத்தனை தடவை கோல் அடித்திருக்கிறேன் என்று ஒரு விளையாட்டு வீரன் பெருமை கொள்வது போல தன் காலில் இருக்கும் இத்தனை பேரின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளேன் என்று எண்ணி பெருமை கொள்கிறார்கள் ஆசிரியர்கள். அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை அப்பாவி மக்களிடம் காட்டி பெருமை கொள்வது போல ஆசிரியர்கள் தங்களின் அதிகாரத்தை மாணவர்களின் மீது காட்டி பெருமை கொள்கின்றனர்.

ஒரு பரிட்சையில் தோல்வி என்பதற்காக தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைகிறார்கள் சிலர். மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளை காண்கிறான் ஆனால் கல்வியில் தோல்வி என்பதனால் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அளவுக்கு உள்ளது இன்று மாணவர்களின் மனநிலை என்பது இன்று தற்கொலை செய்துகொள்பவர்களில் அதிகபடியானவர்கள் மாணவர்கள் என்ற புள்ளிவிவரத்தை பார்க்கும் போது தெரிகிறது. ஏன் அவர்கள் அப்படி நினைகிறார்கள் அவர்களை அப்படி நினைக்க வைத்தது யார் என்று பார்த்தல் இந்த சமுதாயம் தான். இந்த சமுதாயம் தான் படிக்கவில்லை என்றால் வாழ்கையில் முன்னேற முடியாது உயிர் வாழ்வதற்கே படிப்பு அவசியம் என்ற என்னத்தை பெற்றோருக்கும் மாணவருக்கும் விதைத்துள்ளது. சமுதாயமும் பெற்றோரும் ஆசிரியரும் விதைத்த வினையை இன்று மாணவர்கள் அறுத்துக்கொண்டு இருகிறார்கள். ஆம் அவர்களின் எதிர்காலம் தூக்கு கயிறுகளில் அறுபட்டு கொண்டிருகிறது. படிக்காத மேதைகளான காமராஜர்களை அதிகம் பார்த்த இந்த இந்தியாவில் இத்தகைய நிலை இருப்பது அவமானத்திற்குரியது. நன்றாக வாழ்வதற்கு அனைவருக்கும் தேவை தன்னம்பிக்கையும் விடா  முயற்சியும் ஆனால் இன்றைய கல்வி சமூகம் அதை பிஞ்சிலேயே சிதைத்து கொண்டிருகிறது.

எட்டு கல்வி கறிக்குதவாது என்பது பொன்மொழி எட்டுகல்வி சாவுக்கு உதவும் அன்று ஒரு புது மொழியை எழுதுங்கள். ஆம் புதிதாக சிந்திப்பவர்களுக்கும் ஆக்கபூர்வமான எண்ணம் உள்ளவர்ககுக்கு இல்லை இன்றைய கல்வி மனப்பாடம் செய்யும் திறமை படைத்தவருக்கு மட்டுமே இன்றைய கல்வி. சிறு வயதிலேயே பள்ளிகூடங்களில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை முடக்குகிறார்கள். நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்யவேண்டும் என்று கட்டளைக்கு அடிபணியும் அடிமை போலவும் கமெண்டுகளுக்கு கீழ்படிந்து வேலை செய்யும் ரோபா போலவும் இருக்க சொல்கிறார்கள். இன்று பள்ளிகூடங்கள் கல்லறைகலாகவும் சிறை சாலையாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு மாணவனின் தற்கொலையின் போதும் இந்த குற்ற சாட்டு எழுகிறது ஆனால் பெற்றவருக்கு உறைப்பதில்லை  மீண்டும் அந்த சிறை சாலையை தேடி தான் போகிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே நகல் (copy) எடுத்து தேர்வி விடைத்தாளில் ஒட்ட(paste)  வேண்டும். அத்தகைய சிறந்த ஜெராக்ஸ் இயந்திர வேலைய செய்பவன் தான் சிறந்த பிள்ளையாக பெற்றோராலும் சிறந்த மாணவனாக ஆசிரியராலும் பார்க்கபடுகிறான். அவர்களை பொறுத்தவரையில் மாணவன் திருக்குறளை படிக்க வேண்டும் என்று தன நினைகிறார்களே தவிர புதிய திருக்குறளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

இன்றைய கல்வி முறையும் வாழ்கையின் வெற்றிக்கு தேவை என்ன என்பதையும் இந்த சமுதாயம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சரியான முறையில் தெளிவான சிந்தனையுடன் அணுகும் அவரை இப்படியான தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்துகொண்டே தான் இருக்கும். அதுவரை பாதிக்கப்படபோவது எனது நண்பனை போன்ற அப்பாவி மாணவர்கள்  தான்.

21/03/2014

அஜித் படங்களும் நானும்


நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித் என்ற பெயர் தான் என் காதுகளில் முதலில் ஒலித்த பெயர் அதற்கு பின்னர் தான் விஜய் என்ற பெயர் ஒலித்தது. அதற்கு காரணம் உண்டு எனது மாமா தீவிர அஜித் ரசிகர் அதனால் அவரது வீட்டில் அடிகடி அஜித் பாடல்கள் கேட்கும். அமர்க்களம் பாடல்களை நான் சிறு வயதில் பல தடவை கேட்டிருக்கிறேன். அதிலும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் இப்போதும் எனக்கு பிடித்த ஒன்று அந்த பாடலில் எஸ்.பி.பி குரலை விடவும் இன்னொரு ஸ்பெஷல் எனக்கு என்னவென்றால் அந்த பாடல் படமாக்கப்பட்டது எங்கள் ஊர் செஞ்சியில் உள்ள ராஜா கோட்டையில் தான். அது செஞ்சிகோட்டை  என்றும் அழைக்கப்படும்.

 இப்படியாக அஜித்தின் புது படம் எது வந்தாலும் நான் பார்க்கும் வாய்ப்பு என் மாமா மூலம் ஏற்ப்படும். அது ஏனோ எனக்கு அஜித்தின் படங்கள் பெரும்பாலும் பிடிக்காமல் போயவிட்டன அதற்கு காரணம் நான் முதலில் பார்த்த அஜித் படங்கள் ஜனா, ஜி, ராஜா, ஆஞ்சநேயா போன்ற மொக்கை படங்களை தான். பிறகு தான் காதல் கோட்டை வாலி போன்ற படங்களை பார்க்க முடிந்தது ஆனால் என்னுடைய முதல் அஜித் பட அனுபவங்கள் அவற்றை அஜித் பக்கம் சாயாமல் வைத்திருந்தது. நான் விஜய் ரசிகனாக மாறியதற்கு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களை முதலில் பார்த்ததனால் கூட இருக்கலாம்.

நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித்தின் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.





நான் பார்த்த முதல் அஜித் படம்: அமர்க்களம்

எனக்கு பிடித்த அஜித் படம்: பில்லா

எனக்கு பிடிக்காத அஜித் படம்: ரெட்

முதன் முதலில் தியேட்டரில் பார்த்த அஜித் படம்: பில்லா

கடைசியாக பார்த்த அஜித் படம்: வீரம்

இந்த படம் ஏன் ஓடவில்லை என்று நினைத்த அஜித் படம்: கிரீடம்

இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த அஜித்  படம்: ஆரம்பம்

அஜித் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: ஏகன்

அஜித்  ஏன் இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: கஜினி

அஜித்தின் ஸ்டைலை ரசித்த படம்: பில்லா

அஜித் படத்தில் பிடித்த பாடல்: ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்.

18/03/2014

விஜய் படங்களும் நானும்


முதலில் ரஜினி ரசிகனாக இருந்த எனக்கு காதலுக்கு மரியாதை பார்த்த பின் விஜய் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. முதலில் விஜய் பாடல்களின் ரசிகனாக பின் விஜயின் படங்களுக்கு ரசிகனாக அதன் பின்னர் விஜயின் ரசிகனாக படிப்படியாக மாற்றம் அடைந்தேன். என் காதல் வாழ்கையில் விஜயின் பாடல்கள் முக்கிய பங்கு வகித்தன. கில்லி படத்தின் மூலம் அவரின் தீவிர ரசிகனாக மாறினேன். கில்லி படம் வந்தபோது தான் எங்கள் பள்ளியில் கபடி விளையாட்டு மிக பிரபலம் அடைந்தது. எனக்கும் படம் பார்த்த பின் கபடி மீது ஆர்வம் வந்தாலும் அதற்கு என் உடல் அனுமதிக்காததால் விளையாடவில்லை. போக்கிரிக்கு பின் கையில் கர்சிப் கட்டிக்கொண்டு சுற்றியவனில் நானும் ஒருவன்.

பள்ளியில் விஜய் படம் போட்டிருந்த கைகடிகாரத்தை கையில் கட்டியிருந்தேன். அதை பார்த்த ஒரு ஆசிரியர் இவர் காசுக்காக நடிக்கிறார் அதை நீ காசு கொடுத்து பார்ப்பது மட்டுமில்லாமல் அவர் படம் போட்ட கை கடிகாரத்தை வேறு அணிந்திருக்கிறாய் நாளை அதை கழட்டி விட வேண்டும் என்றார். அவர் படத்துக்கு கொடுக்கும் காசை நான் உங்களுக்கு தருகிறேன் உங்களால் அவரை போல 3 மணி நேரம் என்னை எல்லாவற்றையும் மறக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா என்று கேட்க தோன்றியது அனால் அப்போது எனக்கு ஆசிரியர் மீதுள்ள பயத்தால் கேட்க முடியவில்லை மனதோடு வைத்துகொண்டு வீட்டில் இருகொம்போது மட்டும் வாட்சை கட்டிகொண்டேன் பள்ளி செல்லும்போது கழட்டி விடுவேன்.

இப்படியாக என வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் விஜய் அவர் படங்களை பற்றிய என எண்ணங்களை பதிவு செய்யவே இந்த பதிவு. பதிவுக்கு செல்லலாம்.



முதலில் நான் பார்த்த விஜய் படம்: பூவே உனக்காக

முதன் முதலில் தியேட்டரில் பார்த்த விஜய்  படம்: போக்கிரி

கடைசியாக பார்த்த விஜய் படம்: ஜில்லா

எனக்கு பிடித்த விஜய் படம்: நண்பன்

எனக்கு பிடிக்காத விஜய் படம்: சுறா

இந்த படம்  இன்னும் ஓடியிருக்கலமே என்று நினைத்த விஜய் படம்: சச்சின்

இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த விஜய் படம்: சிவகாசி

விஜய்க்காக மட்டுமே பார்த்த படம்: ஜில்லா

விஜய் இருந்தும் பார்க்க முடியாத படம்:  நெஞ்சினிலே

விஜய் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: குருவி 

விஜய் ஏன் இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்:
சிங்கம்,முதல்வன்

நல்லவேளை இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: ராஜபாட்டை

விஜயின் ஸ்டைலை ரசித்த படம்: போக்கிரி

விஜய் படத்தில் பிடித்த வசனம்: வாழ்க்கை ஒரு வட்டம்...

விஜய் படத்தில் பிடித்த பாடல்: மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்...

விஜய் பாடியதில் பிடித்த பாடல்: கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு

15/03/2014

ரஜினி படங்களும் நானும்


நான் இப்போது விஜய் ரசிகனாக இருந்தாலும் எனக்கு முதலில் அறிமுகமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். நான் சிறு வயதாக இருக்கும்போது நான் அடிகடி வீட்டில் இல்லாமல் வெளியே சென்றுவிடுவேன். அதனால் என் அம்மா என்னை வீட்டில் இருக்க வைப்பதற்காக ரஜினி படம் ஓடுகிறது பார் என்று சொல்லி எதாவது படத்தை காட்டுவார்கள் நானும் பார்த்துகொண்டு இருப்பேன். என்னம்மா ரஜினி இன்னும் வரலன்னு கேட்டால் இப்போ வருவார் பாருடான்னு சொல்வாங்க நானும் இப்ப வருவார் அப்ப வருவார்னு பார்த்து பார்த்து முழு படத்தையும் பார்த்துவிடுவேன். என்னம்மா படமே முடிந்துவிட்டது இன்னும் வரலன்னு கேட்டால் நீ ரஜினி படம்னு சொன்னால் தான் வீட்டில் இருப்பாய் அதனால் சொல்லி பார்க்க வைத்தேனு சொல்வாங்க அப்போது எனக்கு அவர்கள் மீது கோபம் வரும் ஆனால் ஒன்றும் பண்ண முடியாது அம்மா அல்லவா அவர்கள்....

அப்படிப்பட்ட ரஜினியின் படங்களை பற்றிய என்னுடைய எண்ணங்களை பதிவு செய்ய நினைத்தான் விளைவு தான் இது. இனி பதிவுக்கு போகலாம்...





முதன் முதலில் நான் பார்த்த ரஜினி படம்: மனிதன் 

முதன் முதலில் நான் தியேட்டரில் பார்த்த ரஜினி படம்: அருணாச்சலம் 

எனக்கு பிடித்த ரஜினி படம்: பாட்ஷா

எனக்கு பிடிக்காத ரஜினி படம்: ஸ்ரீ ராகவேந்திரா

ரஜினிக்காக மட்டுமே பார்த்த படம்: தளபதி

ரஜினி இருந்தும் பார்க்க முடியாத படம்: பாபா

ரஜினி ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: குசேலன் 

ரஜினி இந்த படத்தை ஏன் நிராகரித்தார் என்று நினைத்த படம்: முதல்வன்

நல்லவேளை இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: வரலாறு

ரஜினி இந்த படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த படம்:  இந்தியன்

ரஜினியின் ஸ்டைலை அதிகம் ரசித்த படம்: படையப்பா 

ரஜினி படத்தில் பிடித்த பாடல்: காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே

எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத முதல் ரஜினி படம்: கோச்சடையான்




அடுத்த பதிவில் விஜய் படங்களை பற்றி பார்க்கலாம்.

21/02/2014

அஜித்=காமெடி


இங்கு நான் எழுத இருப்பவை எனக்கு அஜித் பற்றி எஸ்.எம்.எஸ்-ல் வந்த ஜோக்குகள் ஒரு சிலவை எனக்கே தோன்றியவை இதோ உங்களுக்காக எழுதுகிறேன் இதை நகைச்சுவையாக மட்டும் பார்க்கவும். தீவிர அஜித் ரசிகர்கள் இதை படிக்க வேண்டாம். பின் படித்துவிட்டு தலடா,வாலுடா, காலுடா... நு கத்த கூடாது.



அஜித்: நீ வன்னியனு நெனச்சா  நான் வன்னியன் தலித்துன்னு நெனச்சா  தலித்....( வீரம்)

கவுண்டமணி: அப்ப நாங்க ஆம்பளைன்னு நெனச்சா ஆம்பள பொம்பலனு நெனச்சா பொம்பள அலினு நெனச்சா அலியா???... வசனத்த பாரு வெள்ள தலையா.....
 

அஜித்:  money... money...money...(மங்காத்தா)

கவுண்டமணி: நாயே  எடுக்கறது பிச்ச இதுல இங்கலிசு வேறயா?.... பேசுவியா... பேசுவியா...



அஜித்: என்ன தாஆஆண்டி  போகணும்...(வீரம்)

கவுண்டமணி: நாயே  நீ என்ன சாக்கடையா உன்ன தாண்டி போறதுக்கு???





அஜித்: எவ்வளவு டெக்னாலாஜி முன்னேறனாலும் கடைசில கை நாட்டு தானா?(ஆரம்பம்)

கவுண்டமணி: பின்னா  2-வது பெயில் ஆன கை நாட்டு தான் வைக்க சொல்லுவாங்க... வச்சிட்டு போ நாய  வசனம் பேசாத....




விதார்த்: அண்ணன்( அஜித்) மொத தடவ கன்னடிய பார்த்து தலவாருதுடா...(வீரம்)

சந்தானம்: அதெல்லாம்  என்ன மூஞ்சினு அவன்  அத கண்ணாடில பாக்க போறான்...



அஜித்: சார் என்னோட வீரம் படத்த பத்தி சொல்லுங்க?

மோகன்லால்: உங்க படத்துக்கு  வந்தா ஒன்னு ரணமாகி போகணும் இல்ல பொணமாகி போகணும்...

அஜித்:  ???



மோகன்லால்: டேய்... டேய்... நீ நூறு படம் பாத்துருக்கலாம் ஆயிரம் படம் பாத்துருக்கலாம் ஆனா என்கிட்டே ஒரே படம் தான் இருக்கு... அஜித்தோட வீரம் பாருடா பாக்கலாம்....

ரவுடி: ???







அஜித்: வீரம் படத்துல என்னோட டேன்ஸ் நல்ல இருந்துச்சு இல்ல...

விஜய்: ???



கேள்வி: அஜித் நல்லா  நடிச்ச படம் எது?

சிட்டி ரோபோ: hypothetical question...












14/02/2014

இது கதிர்வேலன் காதல்- காதலர் தின சிறப்பு


காதலர் தினத்தன்று அணைத்து காதலர்களுக்கும் பரிசளிக்கும் விதமாக ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு படமாக வந்திருகிறது கதிர் வேலன் காதல்.


மதுரையில் காதல் என்றாலே எதிர்ப்பு தெரிவிக்கும் பெரிய மனிதன். அவர் பெண்ணே காதல் செய்து திருமணம் செய்துகொள்ள அவரே அவரை அந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்துகொள்கிறார். அவருடைய மகன் தான் உதயநிதி ஸ்டாலின். காதலே வேண்டாம் என்று ஆஞ்சநேயர் பக்தனாக வாழ்கிறார். ஒரு நாள் காதலித்து வீட்டைவிட்டு சென்ற தனது அக்கா மீண்டும் வீட்டிற்கு வர என்ன பிரச்சனை என்று தனது அக்காவின் கணவரை கேட்க மதுரையில் இருந்து கோயம்பத்தூர் செல்கிறார். அங்கு அவரது நண்பரான சந்தானத்தை காண்கிறார். தனது மாமா வீட்டில் தங்கி என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். அப்போது மாமாவின் எதிர் வீட்டில் இருக்கும் நயன்தாராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சந்தானத்தின் உதவியுடன் அவரை பின் தொடர்கிறார். நயன்தாரா தவறான ஒருவருடன் பழகுவது தெரிந்து அவருக்கு தெரியபடுதுகிறார் பின் நயனுக்கும் இவர் மீது காதல் வருகிறது. உதயநிதி மாமாவிற்கும் நயன்தார குடும்பத்திற்கும் ஏற்கனவே பகை இருக்கிறது. இந்த பகையை மீறி இவர்களின் காதல் ஜெயித்ததா காதலை எதிர்க்கும் இவரது தந்தை சமாதானம் ஆனாரா என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருகிறார்கள். 

இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் காதலை எதிர்க்கும் பெற்றோருக்கும் காதலருக்கும் காதலின் உண்மையை நகைச்சுவையாக விளக்கும் விதத்திலும் அதை காதலர் தினத்தன்று ரிலிஸ் செய்தவகையிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.



உதயநிதி ஸ்டாலின் தனது முந்தைய படத்தை விட சற்று சிறப்பாக செய்துள்ளார். தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து கதை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் இவரின் பலம். நடிக்க வராத சில காட்சிகளில் கண்ணாடி போட்டு சமாளித்துள்ளார் அதையும் இந்த படத்திலேயே  சந்தானம் சொல்லி கலாய்ப்பது ரீலில் காமெடி.

நயன்தாராவுக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளார். ஆனாலும் முகத்திலும் உடல் தோற்றத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. சில காட்சிகளில் பார்பதற்கு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார். அவரது சொந்த வாழ்கையில் சிலரை நம்பி ஏமாந்ததையே இயக்குனர் கதையாக வைத்துள்ளதால் நடிக்க ஒப்புகொண்டார் என்று நினைக்கிறேன்.

சந்தானம் வழக்கம் போல படத்தின் வெற்றிக்கு பெருமளவு துணையாக உள்ளார். ஹீரோ ஹீரோயின் ஒபெநிங்  கட்சியை விட இவரது ஒபெநிங் காட்சிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பும் கைதட்டலும் கிடைத்தது. கண்ணாடியை அடிக்கடி சரி செய்யும் அவரது மேனரிசம் நன்றாக உள்ளது.

உதயின் மாமாவாக நடித்த நபர் அவரது காதலி கல்யாணத்திற்கு முன் இருந்தது கல்யாணத்திற்கு பின் இருந்தது பற்றி கூறும்போதும் தனக்கும் எதிர் வீட்டிலிருக்கும் தனது சித்தப்பாவுக்கும் உள்ள பகையை கூறும் காட்சியிலும் ஈர்கிரார். மயில் சாமி சில காட்சிகள் வந்தாலும் நன்றாக சிரிப்பூட்டுகிறார். 

ஹாரிஸ் வழக்கம்போல தன் வேலையை செய்திருக்கிறார். பாடல்கள் சில நன்றாக  இருந்தாலும் படம் பார்பதற்கு இடையூறாக உள்ளது போல தோன்றியது. 

மொத்தத்தில் காதலர் தினத்தில் காதலர்களுக்கு பரசாக வந்துள்ள காதலர் தின சிறப்பு இந்த கதிர்வேலன் காதல்...

எனது மதிப்பெண்: 55/100

அண்ணா பல்கலை மாணவர்களால் கௌரவிக்கப்பட்ட இளையதளபதி விஜய்


சென்னை அண்ணா பல்கலைககழகத்தில்  நடந்த Techofes’2014 விழாவில், தலைவா படத்தில் சிறப்பாக நடித்த விஜய்க்கு சிறப்பு விருது கொடுத்து கெளரவிகப்பட்டது. இந்த விருதை பெறுவதற்காக  அண்ணா பல்கலைகழக வந்த விஜய்க்கு மிகச்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


231dbe659fad9400bd39c768a55cba33


பல்கலைக்கழக வளாகத்திற்குள் விஜய் வந்தவுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர். மிகப்பெரிய ரோஜா மாலையை மாணவர்கள் விஜய்க்கு வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் பேசிய விஜய், தலைவா படத்தினால் எனக்கு ஏற்பட்ட பயங்கர மனக்காயத்துக்கு இங்கே மருந்து கிடைத்ததாக கூறினார். ‘தலைவா’ படம் வசூலில் தோல்வி அடைந்தாலும், அந்த படத்திற்காக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் என்னை கெளரவித்தது எப்படி இருக்கிறது என்றால் கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும், மேன் ஆப் த மேட்ச் கிடைத்தது போல எண்ணுகிறேன் என்று கூறினார்.


thanks to http://www.tamizhtv.com

13/02/2014

காதல் தவறா?


அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்...



காதல் தமிழரின் பாரம்பரியமாக இருந்துவரும் ஒன்று இதனை  அகநானூறு பாடல்கள் மூலம் அறியலாம். அப்போது காதலிக்கும் ஆன் மகனை காவியதலைவனாகவும் பெண்ணை காவியதலைவியாகவும் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்று காதலிப்பவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது அவர்கள் வாழ்வதற்கே வழி இல்லை. சமீபத்தில் நடந்த இளவரசன் மரணம், வட   இந்தியாவில் காதல் செய்த ஒரு பெண்ணை அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் கற்பழிக்குமாறு தீர்ப்பு விதித்தது போன்றவை அதற்கு சான்று. ஒரு பெண்ணை 13 பேர் சேர்ந்து கற்பழிக்குமாறு தீர்ப்பு சொன்ன அவர்களெல்லாம் ஊர் தலைவர்கள் அல்ல மனிதர்கள் என்றே சொல்லமுடியாது. மிருகத்திற்கு கூட அறிவு என்று ஒன்று இருந்தால் இதை செய்யாது அவர்கள் எல்லாம் மிருகத்தை விட கேவலமானவர்கள். இவர்கள் செய்த இந்த கேவலமான செயலுக்கு மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும்  காலாசாரம் என்ற பெயராலும் நியாயம் சொல்லும் சிலைரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

காதல் நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என்று சில விஷமிகள் சொல்லித்திரிகிறார்கள். பழைய நூல்களிலேயே சிலாகித்து எழுதப்பாட்டிருக்கும் ஒன்று எப்படி திடிரென்று ஏற்புடையது அல்ல என்று மாறிவிடும். இவர்களுக்கு பிடித்திருக்கும் சாதி வெறியும் மத வெறியும் காதல் என்ற ஒன்றரை தவறாக சொல்கிறது. காதல் திருமணங்கள் இவர்களின் போலியான சாதி என்ற கட்டமைப்பை உடைக்க கூடும் அதனாலேயே இவர்கள் காதலை தவாரானது என்று பெற்றோர்களுக்கும் சமுதாயத்தினருக்கும் காட்ட நினைகிறார்கள். அதற்கு சான்றாக மேலும் அவர்கள் சொல்வது காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அப்படியானால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் விவாகரத்து அடைவது இல்லையா? அதற்க்கு யாரை காரணமாக சொல்வது. அடுத்ததாக சொல்வது காதல் என்றாலே பொய்யாக தான் இருக்கிறது எல்லாம் காமத்திற்காக காதலித்து அது முடிந்தவுடன் விட்டுசெல்கின்ரனர். இதில் அடிப்படை ஒன்றை கவனிக்க வேண்டும் ஒரு பெண்ணின் உடல் அழகை பார்த்து ஆசைப்பட்டு அவளை அடைவதற்காக அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றுமே காதல் ஆகாது அது காதல் என்ற பெயரை சொல்லி அவர்கள் செய்யும் நாடகம் அதற்க்கு காதல்பொறுப்பாக  முடியாது அதனால் காதல் தவறு என்று சொல்லமுடியாது. தவறான நோக்கில் ஒரு பெண்ணை மணந்து அவளை காசுக்காக விற்கின்றனர் சிலர் அவர்களின் அந்த கேவல செயலுக்கு திருமணம் என்ற பந்தத்தை  பயன்படுத்துகின்றனர். இதற்காக திருமணம் பொய் தவறானது என்று சொல்லிவிட முடியுமா?


 காதலர் தினத்தன்று காதலர்களை கஷ்டபடுதுவதர்காகவே ஒரு கும்பல் மதத்தின் பெயரையும் கலாச்சாரத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இவர்களின் நோக்கம் தான் என்ன காதலர்களை பார்த்தல் தாலி காட்டுங்கள் என்று சொல்லி வற்புறுத்துகின்றனர். கட்டவில்லை என்றால் அவர்கள் உண்மையான காதல் இல்லையாம். காதலிக்கும் தம்பதிகள் கல்யாணம் எப்போது செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று பல கனவுகளோடு இருப்பார்கள். அதையெல்லாம் விடுத்தது இவர்கள் சொன்ன உடனே தாலி கட்டிக்கொள்ள முடியுமா என்ன? பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்ட இருவர் நிச்சயதார்த்தற்கு அடுத்து வெளியுள் செல்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்களிடம் இவர்கள் நீங்கள் இப்போதே கல்யாணம் செய்துகொள்ளுங்கள் அப்படி செய்தால்  தான் நீங்கள் பழகுவது உண்மை இல்லையென்றால் நீங்கள் போலியாக பழகுகிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னால் அவர்கள் தாலி கட்டுவார்களா கண்டிப்பாக கட்டமாட்டார்கள். அதற்காக நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் பழகுவது போலியாக தான் அவர்கள் திருமணம் செய்யமாட்டார்கள் என்று அர்த்தமா?

பணத்தை பார்த்து தான் காதலிக்கிறார்கள் அது எப்படி உண்மை காதல் ஆகும் என்று சிலர் சொல்கின்றனர். ஒரு பெற்றோர் தன் மகளுக்கு பெண் பார்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்கள் என்ன பணமே இல்லாத ஒரு ஏழை மாபிள்ளையை பார்த்தா திருமணம் செய்து வைகிறார்கள்? ஓரளவு பணம் உள்ளவனா தன மகளை வைத்து காப்பாத்துவான என்று பார்த்து தான் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெற்றர்கள் இதை செய்தால் அது பெண் மீதுள்ள அக்கறை அதையே காதலிக்கும் பெண் செய்தால் அது பொய்யான காதல் என்று அர்த்தமா?

ஒரு மணி நேரத்தில் பெண்ணையோ அல்லது ஆணையோ பார்த்து பிடிகிறதா என்று கேட்டு கல்யாணம் செய்துவைக்கும் இவர்களின் கல்யாண முறை சிறந்தது ஆனால் தன் மனதுக்கு பிடித்த ஒருவருடன் பழகி புரிந்தகொண்டு கல்யாணம் செய்ய நினைக்கும் காதல் தவறானதா? சிறிய வயதில் இருந்து பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்கள் கல்யாணம் மட்டும் தவறாகவா செய்து வைத்துவிட போகிறார்கள் என்று சொல்கிறார்கள். சிறுவயதில் இருந்து உடைகள் படிக்கும் ஸ்கூல் என்று பலவற்றை பெற்றோர் பிள்ளையாய் கேட்காமலேயே செய்யலாம் அது அவனுக்கு சிறந்ததாக இருக்கும் என நினைக்கலாம் ஆனால் அந்த பிள்ளை பள்ளி படிப்பை முடித்து கல்லூரி சேரும்போது கணிதமே சுத்தமாக வராத ஒருவனை நீ கணிதம் எடுத்து படி அப்போது தான் நீ நல்ல நிலைமைக்கு வருவாய் என்று அக்கறையாக சொன்னால் அந்த பிள்ளைகளால் என்ன செய்ய முடியும் பெற்றோருக்காக கணிதம் எடுத்துவிட்டு தோல்வி மேல் தோல்வியை சந்தித்து 3 வருடம் முடிக்கும் கல்லூரி படிப்பை 6 வருடம் படிதுகொண்டிருப்பர்கள். இதே போல தான் என்ன தான் பெற்றோர் நல்ல மணமகன் ம்,மணமகள் என்று பார்த்து கல்யாணம் செய்துவைத்தாலும் வாழப்போவது பிள்ளைகள் தான் அவர்களுக்கு தன் வருங்காலம் பற்றிய கனவு இருக்கும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் அவர்களின் வாழ்கை அமைய வேண்டும்.

என் மகள் ஒருவனை காதலிக்கிறாள் அவன் தவறானவன் அவள் காதலிக்கிறாள் என்பதற்காக அவளை அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக முடியாது தான் அதை உங்கள் பிள்ளைக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்தது அவர்களை கண்டித்து மனம் புண் படும்படி செய்து  உங்களின் நல்ல உள்ளம் அவர்களுக்கு தவறாக தெரிவது போல   நடந்துகொண்டால் தவறான காதலன் நல்லவனாக தெரிவான். அவனை நம்பி உங்கள் பெண்ணின் வாழ்கை சீரழியும் இதில் நீங்கள் பெரும்பங்கு வகிக்கிறீர்கள்.

உலகில் உள்ள அணைத்து நல்ல விஷயங்களிலும் சில தவறுகள் உள்ளன அதனால் அவை தவறானது என்று அர்த்தம் இல்லை. அதே போல தான் காதலும் சிலர் அதன் பெயரை சொல்லி செய்யும் தவறுக்கு காதல் பொறுப்பாகாது. மனிதன் என்றுமே தான் செய்யும் தவறுக்கு மற்றவற்றை குற்றம் சொல்லி பழக்கப்பட்டவன் அதே போல தான் சில நபர்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு காதலை பயன்படுத்தி காதல் மீது பழி சுமத்துகிறார்கள். ஒரு பெண்ணுடம் பலவந்தமாக உறவு கொள்வது கற்பழிப்பு அதே போல ஒரு பெண்ணை ஆசை காட்டி அனுபவித்து விட்டு செல்லும் செயல் காதல் இல்லை கற்பழிப்பு தான் அதற்கும் காதல் என்று அர்த்தம் கர்ப்பித்து ஆண்களின் இச்சையை நியாயபடுத்தி காதல் மீது பழி சுமத்தி பார்க்கிறது ஆணாதிக்க சாதிய மத வெறி பிடித்த சமூகம்.

பெற்றோர்களே  மாற்றார்கள் தங்கள் குடும்பத்தை என்ன நினைப்பார்கள் என்ற போலி கவுரவத்திற்காக உங்கள் பிள்ளைகளின் மனதை சாகடிக்காதீர்கள்.

 காதல் ஆக்கத்தின் அடையாளம் அன்பின் மறுவுருவம் பாசத்தின் பரிமாணம் இனிய வாழ்கையின் வாசல் அதனுள் சென்று அன்போடு வாழ்வோம்.  

 

10/02/2014

இளையதளபதிக்கு கிடைத்த பெருமை

இன்றைய இளைஞர்களுக்கு மிக பிடித்தமான ஒன்று பேஸ்புக் இணையதளம். உலக அளவில் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இத்தகைய பேஸ்புக்கில் நம் இளையதளபதி விஜய் அவர்களுக்கு சிறப்பான  அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 சினிமா பிரபலங்கள் எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தால் நன்றாகவா இருக்கும்..? கூடிய சீக்கிரமே ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வமான கணக்கை (official page) விஜய்யும் துவங்கி விடுவார் என்றுதான் தோன்றுகிறது.

ஆதாரம் இல்லாமல் சும்மா செய்திக்காக சொல்லவில்லை. இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக்கின் வருடாந்திர நிறைவு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொண்டிருக்கிறார் விஜய்.

எத்தனையோ முன்னணி சினிமா பிரபலங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்தாலும், தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக ஃபேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் பெருமை பேஸ்புக் வரை தெரிந்திருப்பது மகிழ்ச்சிதான். 


புகைப்படங்கள் உங்களுக்காக...







08/02/2014

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?



தமிழ் சினிமாவில் இன்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான். ரஜினி ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு மட்டும் உரிய பட்டம் இல்லை எனக்கு அடுத்து இன்னொருவர் வருவார் என்று சொன்னதிலிருந்து அடுத்த இடத்தில இருக்கும் நடிகர்களுக்கு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. எத்தனை நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று நினைத்தாலும் ரசிகர்கள் மனதில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நினைப்பது இரு நடிகர்களை தான். அந்த நடிகர்கள் யார் என்று நான் சொல்ல தேவையில்லை உங்களுக்கே தெரியும். விஜய் மற்றும் அஜித் தான் அந்த நடிகர்கள்.



அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்றால் முந்தய சூப்பர் ஸ்டாரிடம் இருக்கும் சில நற்பண்புகள் திறமைகள் இருக்க வேண்டும் மற்றும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன அவைகளும் இருக்க வேண்டும். அந்த நற்பண்புகள், திறமைகள் மற்றும் விதிமுறைகள் விஜய் மற்றும் அஜித்திடம் இருக்கிறதா என்று பாப்போம்.

முதல் தகுதி:

தான் நடிக்கும் படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் மறந்தும் கூட நடிக்க முயற்சி செய்யகூடாது.

இந்த தகுதி விஜய் மற்றும் அஜித்திடம் நூறு சதவிதம் உள்ளது. 

விஜய் தன படங்களில் பறந்து காட்டுவார். அஜித் தன படங்களில் நடந்து காட்டுவார். ஆனால் நடிப்பு என்பது இருவருக்கும் ஒவ்வாமை தான்.

இரண்டாவது தகுதி:

தான் என்ன பேசினாலும் செய்தாலும் அது சரி தான் என்று பிறரிடம் சண்டையிடும்   பெருமளவு ரசிகர்களை கொண்டிருக்க வேண்டும்.


இந்த விஷயத்தில் விஜயும் அஜித்தும் ரஜினியை விட கொடுத்து வைத்தவர்கள். இவர்களுக்காக உழைபதற்கு என்று பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஒரு கூட்டமே இருக்கிறது. தமிழர் பண்பாடு என்ன என்பதை விஜய் அஜித் ரசிகர்கள் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் போடும் ஸ்டேட்டஸ் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மூன்றாவது தகுதி:   

அரசியலுக்கு வருகிறேன் என்றும் சொல்லகூடாது வர மாட்டேன் என்றும் சொல்ல கூடாது. கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் ஆனால் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் என்று ரசிகர்களை குழப்ப நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய்க்கு வெகு நாட்களாகவே உள்ளது. நான் அரசியலுக்கு வரவில்லை ஆனால் அரசியலில் ஆர்வம் உள்ளது என்று ரசிகர்களை உசுபேத்துவது விஜயின் வழக்கம். அஜித்தும் வீரம் படத்தில் ஆசையில் வரல ஆத்திரத்தில் வந்திருக்கேன் என்று தன் பங்குக்கு கொளுத்திபோட்டுவிட்டார். 

நான்காவது தகுதி:

தனக்கு விளம்பரம் பிடிக்காது எளிமையாக இருப்பது தான் பிடிக்கும் என்பது போல் இரண்டு நாள் கழுவாத முகத்தோடும் ஒரு வரம் துவைக்காத துணி ஒன்றையும் அணிந்து அணைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவேண்டும். ஆனால் இமைய மலை செல்லும்போது மட்டும் தன்னுடன் ஒரு புகைப்படகாரரை கூட்டிசென்று அங்கு தான் குகையில் இறங்குவது ஏறுவது என்று பல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட வேண்டும்.

இந்த தகுதி விஜய் அஜித் இருவருக்கும் கிடையாது. விஜய் தனக்கு விளம்பரம் வேண்டும் என்பது போலவே அனைத்தையும் செய்வார். அஜித் தனக்கு விளம்பரமே வேண்டாம் என்று எந்த நிகழ்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். ஆனால் அம்மா அழைக்கும் விழா மட்டும் அஜித்திற்கு விழாவாக தெரியாது போல தவறாமல் கலந்துகொள்வார்.

ஐந்தாவது தகுதி:

தனது படம் ரிலிஸ் ஆகும்போது மட்டும் அரசியலுக்கு வருவேன் என்று எதாவது பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்து படத்தை விளம்பர படுத்த வேண்டும். மற்ற நாட்களில் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கவேண்டும். கேட்டால் எளிமை என்று சொல்லிகொள்ளவேண்டும்.

இந்த விஷயத்தில் விஜய்யை விட அஜித் அதிக தகுதி உடையவர் மற்ற நாட்களில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது ஆனால் படம் ரிலிஸ் ஆகும் சமயம் வந்துவிட்டால் பைக்கை எடுத்துக்கொண்டு வெளிவந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுப்பது அல்லது மொட்டை அடித்துக்கொண்டு போஸ் கொடுப்பது போன்று சில பப்ளிசிட்டி ஸ்டன்ட் களை செய்வார்.

ஆறாவது தகுதி:

நிஜ வாழ்வில் தான் ரொம்ப நல்லவன் போல காட்டிகொள்ள வேண்டும் ஆனால் சினிமாவில் தவாறன பாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு குடி, சிகரட், போன்ற மிக நல்ல பழக்கங்களை கற்று தர வேண்டும்.

இந்த தகுதி அஜித்திற்கு மட்டும் தான் உள்ளது என்பதை தனது மங்காத்த மூலம் உலகறிய எடுத்து சொல்லிவிட்டார் வெங்கட் பிரபு.

ஏழாவது தகுதி:

தனக்கு இணையாக உள்ள போட்டி நடிகர் தனக்கு நெருக்கமான நண்பர் என்பது போல காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் அவருக்கு சிறந்த விருது அல்லது அவரை பெருமை படுத்தும் விதமாக எதாவது நடந்தால் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய் அஜித்திற்கு சுத்தமாக கிடையாது. இருவரும் மோதிகொள்ளும்போது வசனங்கள் மூலம் நேரடியாக எதிரி என்று காட்டிகொண்டார்கள் இணைந்த போது இருவரும் பரஸ்பர அன்பு காட்டிவருகிறார்கள்.

எட்டாவது தகுதி:

தான் நடிக்கும் படங்களில் லாஜிக் என்று ஒன்றை எதிர்பார்கவே கூடாது என்ற அளவுக்கு ரசிகர்கள் முதல் படம் பார்க்கவரும் அனைவரையும் பழக்கபடுத்தி வைத்திருக்க வேண்டும்.

இந்த தகுதி விஜய்க்கு அதிகமாகவே உள்ளது தனது பெரும்பாலன படங்களில் இதை அவர் மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறார். அஜித் எப்போதாவது இந்த வேலையை தனது ஒரு சில படங்களில் செய்வார்.

ஒன்பதாவது தகுதி:

சினிமாவில் நன்றாக நடிப்பதற்கு விருது என்று ஒன்று உள்ளது ஆனால் அப்படி ஒன்று உள்ளதா என்று கேட்கும் அளவிற்கு நல்ல மட்டமான மசாலா படங்களை தரவேண்டும். விருது எல்லாம் எவனுக்கு வேண்டும் எனக்கு என் பாதாம் ஹிட் ஆகி காசு வந்தால் போதும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் நான் நல்ல கமெர்சியல் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்று மறைமுகமாக சொல்லவேண்டும்.

இந்த விஷயத்தில் விஜய் இதை வெளிப்படையாக சொல்லிவிட்டு மசாலா படங்களை தருவார் ஆனால் அஜித் தனது பேட்டிகளில் நான் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு அதே மசாலா படங்களை தான் தருவார். ஆனால் இருவரின் ரசிகர்களும் அந்த மொக்கையை சூப்பர்  என்று சொல்லும் அளவிற்கு ஹிட் படமாக மாற்றுவார்கள்.

பத்தாவது தகுதி:

ஒவ்வொரு பட வெற்றியின் போதும் இந்த வெற்றிக்கு என் ரசிகர்கள் தான் காரணம் அவர்கள் தான் என் உயிர் ரசிகர்களுக்காக நான் எதையும் செய்வேன் என்று சொல்லி ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு கடைசிவரை ஒன்றுமே செய்யகூடாது.

இந்த தகுதி விஜய் அஜித் இருவருக்கும் கிடையாது. விஜய் ரசிகர்களை கவரும் வண்ணம் எனக்கு எல்லாமே ரசிகர்கள் தான் என்று சொன்னாலும் அதனை நிருபிக்கும் வண்ணமாக அவ்வப்போது ரசிகர்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அஜித் அப்படியே மாறுபட்டவர் என் படம் பிடித்தால் பாருங்கள் மற்றபடி எனக்காக நீங்கள் உங்கள் வாழ்கலையை வீணாக்கி என் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள் என்று சொல்லிபார்த்தார் கடைசியில் ரசிகர்கள் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் ரசிகர் மன்றத்தை கலைத்தேவிட்டார்.

எப்படி பார்த்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி விஜய் அஜித் இருவருக்கும் சொல்லும் அளவில் இல்லை. இவர்களுக்கு மட்டும் இல்லை மற்ற நடிகர்களுக்கும் கூட மேற்கூறிய நல்ல??? தகுதிகள் இருபதாக தெரியவில்லை எனவே இந்த அணைத்து சிறப்பு??? தகுதிகளையும் கொண்டிருக்கும் ஒரே நபர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பதை மிக பணிவுடன் தெரிவித்துகொள்வதில் மகிழிச்சியடைகிறேன்.



18/01/2014

விஜய் அஜித் ரசிகர்களுக்கு


சமீபத்தில் விஜய் டிவிட்டரில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்துகொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஒரு அஜித் ரசிகர் விஜயிடம் அவதூறாக பேசியிருக்கிறார். அதை கண்ட அவரது ரசிகர்கள் ஆத்திரத்துக்கு உள்ளாயினர். உடனடியாக மக்கள் இயக்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நபரின் வீடு முற்றுகையிடப்பட்டது அவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார் அவரது பெற்றோர்கள் தங்கள் மகனை விட்டுவிடும்படி கெஞ்சினர். பின் தகவல் அறிந்த விஜய் அந்த நபரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று சொல்லியபின்னர் அந்த நபர் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து விஜய் அந்த நபரை மன்னித்தாலும் விஜய் ரசிகர்கள் மன்னிப்பதாக இல்லை அந்த நபரின் புகைப்படம் மற்றும் அவரது வீட்டு முகவரி போன்றவற்றை சமூக வலை தளங்களில் வெளியிட்டு அவதூறாக திட்டி வருகிறார்கள். அந்த நபரை மட்டும் அல்லாமல் அஜித் தன் ரசிகர்களுக்கு இததகைய நாகரீகத்தை தான் சொல்லிதந்திருகிரார். தன்  திரைப்படங்களில் நெகடிவ் ரோலில் நடித்து கெட்டவார்த்தைகள் பேசி நாம நல்ல இருந்த போதும் எத்தனை பேரை வேணுன்னாலும் கொள்ளலாம் போன்ற தவறான வசனம் பேசி நடித்து அதையே தன் ரசிகர்களும் பின்பற்ற செய்கிறார் என்று அஜித்தையும் தவறாக பேசி வெளியிட்டு இருகிறார்கள்.

இதை அறிந்த விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த நபர் செய்த தவறை மன்னித்துவிடுங்கள் அவர் புகைப்படத்தை பகிர்ந்து திட்டுவதையும் குறிப்பிட்ட நடிகரை( அஜித் ) பற்றி தவறாக பேசுவதையும் நிருந்துங்கல் என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட நடிகர்( அஜித்) எனக்கு போன் செய்தார்  தன் ரசிகர் நடந்துகொண்டது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார் நாங்கள் இருவரும் வெகுநேரம் பேசினோம் நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் இருக்கிறோம் எனவே அஜித் ரசிகர்களுடன் மோதுவதை நிருந்துங்கல் என்று விஜய் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதில் சிலவற்றை நாம் கவனிக்கலாம். ஒருவர் ஆன்லைனில் இருக்கும்போது அவரிடம் நேரடியாக தவறாக பேசுவது நாகரீகமற்ற செயல் இதற்க்கு முழு பொறுப்பும் அந்த நபர் தான் என்று சொல்லமுடியாவிட்டாலும் அதிக பொறுப்பெர்க்ககூடியவர் அந்த நபர் தான். அந்த தவற்றுக்கான மீதி பொறுப்பை விஜய்,அஜித்,விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் ஆகியவர்களிடம் பகிர்ந்து அளிக்கலாம். ஆம் இந்த நாகாரீகமற்ற செயலுக்கு காரணமாக இவர்கள் அனைவருமே உள்ளனர். விஜய் அஜித் இருவருமே ஆரம்பத்தில் தங்கள் ரசிகர்கள் போட்டி பொட்டுகொள்வதை விரும்பினர். அவர்களது பேட்டிகளும் ரசிகர்கள் போட்டிபோட்டுகொள்வதர்க்கு ஆதரவாக தான் இருந்தன ஏனென்றால் அப்போது தான் தங்களது படங்கள் ஹிட் ஆகும் தாங்கள் வளர முடியும் என்று நம்பினார். அவர்கள் நிணைதார்போலவே இருவரும் இன்று முன்னனி ஸ்டார்களாக மாறியிருகிறார்கள். அதே போல அவரது ரசிகர்களின் போட்டியும் வளர்ந்துவிட்டது. போட்டியாக இருந்தது இன்று ரசிகர்களிடம் பகைமையாக மாறிவிட்டது. தெருக்களில் சண்டையிடும் அளவிற்கும் தன் நண்பர்களை இழக்கும் அளவிற்கும் எல்லாவற்றிற்கும் உச்சமாக தன் தாய் மற்றும் அக்கா தங்கைகளை இழிவுபடுத்தும் அளவிருக்கும் மாறியுள்ளது.
இன்று சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் விஜயையும் விஜய் ரசிகர்கள் அஜித்தையும் திட்டுவதை தவிர்த்து அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் குடும்பத்தை திட்டுவதையும் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் குடும்பத்தை திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் ரசிகர்களின் போட்டியை ஆதரித்த விஜயும் அஜித்தும் இன்று அதை எதிர்த்து சண்டையிடாதீர்கள் என்று சொல்லிவருகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களின் சண்டையை தங்கள் வளர்சிக்காக பயன்படுத்திய விஜயும் அஜித்தும் இன்று நிறுத்த சொல்வதனால் என்ன பயன் அல்லது இப்போது ரசிகர்கள் இவர்களின் பேச்சை கேட்டு நிறுத்திவிடுவார்களா?... ஆபத்தை ஆரம்பத்தில் தங்கள் சுயலாபத்துக்காக வளரவிட்டு இப்போது ரசிகர்களின் செயலால் தங்களுக்கு கெட்டபெயர் வருபோது மட்டும் கைவிட சொல்வது ஏற்புடையது அல்ல.

இனிமேல் சிந்திக்க வேண்டியது ரசிகர்கள் தான் ஆரம்பத்தில் உங்கள் அபிமான நடிகரின் வளர்சிக்காக பாடுபட்டீர்கள் இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். எந்த அளவிற்கு வளந்துள்ளார்கள் என்பது ஜில்லா வீரம் இரண்டு படத்திற்கும் கிடைத்த பிரம்மாண்ட ஒபெநிங்கை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் இனிமேலாவது உங்கள் வளர்ச்சியை பாருங்கள். அந்த நபர் செய்தது தவறு அதற்காக அவர் கைது செய்யப்பட்டார் ஆனால் அவருக்காக விஜய் மக்கள் இயக்கத்திடம் கேஞ்சினார்களே அந்த நபரின் பெற்றோர் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஒரு பிள்ளையை பெத்து படிக்க வைத்து ட்விட்டரில் இது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடும் அளவிற்கு சுதந்திரமாக பாசத்துடன் வளர்த்தது தான் அவர்கள் செய்த தவறா? தன்னை வளர்த்த பெற்றோருக்கு அந்த நபர் தேடித்தந்த பெருமை மற்றவர்களிடம் தன் பெற்றோரை கெஞ்சவைத்தது தான். இதை தானே விரும்புகிறீர்கள் விஜய் அஜித் ரசிகர்களே. இன்று விஜய் ஆன்லைன் வந்தார் அவருக்கு இது நடந்தது இதனால் ஒரு அஜித் ரசிகரின் பெற்றோர் பாதிக்கப்பட்டனர். என்றாவது அஜித் ஆன்லைன் வந்தால் அவருக்கு இது நடக்காலம் அதனால் ஒரு விஜய் ரசிகரின் பெற்றோர்கள் பாதிக்கப்படலாம். கண்டிப்பாக இதனால் விஜயோ அஜித்தோ பாதிக்கபடபோவது இல்லை கேவலமான ரசிகர்களும் அவர்களின் அப்பாவி பெற்றோர்களும் தான் பாதிக்கப்பட போகிறார்கள்.

ரசிகர்களே உங்கள் அபிமான நடிகருக்காக அவரின் படம் பார்ப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் அதை விடுத்தது நடிகருக்காக உழைத்து உங்கள் பெற்றோரை அக்கா தங்கைகளை அசிங்கபடுதாதீர்கள் உங்கள் நண்பரை இழக்காதீர்கள்.

17/01/2014

ஜில்லா வீரம் விமர்சனம்


பல வருடங்களுக்கு பிறகு விஜயும் அஜித்தும் இந்த பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதியுள்ளனர். விஜயின் ஜில்லாவும் அஜித்தின் வீரமும் 10 ஆம் தேதியன்று ஒன்றாக ரிலிஸ் ஆகியது. வழக்கமாக விஜய் அஜித் மொதும்பொதெல்லம் விஜய் வென்று விடுவார் போக்கிரி-ஆழ்வார், திருமலை-ஆஞ்சநேயா என விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது ஆனால் இந்ததடவை சற்று மாறியிருக்கிறது. வழக்கமாக விஜய் அஜித் மோதும்போது அஜித் படம் மொக்கையாக தோல்வி அடையும் இந்ததடவை விஜய் படம் மொக்கையாக தோல்வி அடையவில்லை ஆனால் அஜித்தின் வீரத்துடன் விஜய்யின் ஜில்லா சற்று பின் தங்கி இருக்கிறது. பொங்கல் ரேசில் விஜயை அஜித் சற்று முந்தியுள்ளார். என்னுடன் சேர்த்து விஜய் ரசிகர்கள் சிலருக்கு ஜில்லாவை விட வீரம் மிகவும் பிடித்துள்ளது.

இப்போது விமர்சங்களை ஒப்பீட்டளவில் பார்ப்போம்.

ஜில்லா 



மதுரையில் ஏற்கனவே தாதாவாக இருக்கும் ஒருவரை போட்டுத்தள்ளிவிட்டு மதுரையின் ஒரே தாதாவாக மாறுகிறார் மோகன்லால். அவர் மனைவியின்  காப்பாற்றிய விஜயை தத்துப்பிள்ளையாக ஏற்றுகொள்கிறார் மோகன்லால். மோகன்லால் மனைவியை காப்பாற்றும்போது தன் தந்தையை போலிஸ் ஒருவர் கொன்றதால் போலிசை வெறுக்கிறார் விஜய். மோகன்லாலுடன் சேர்ந்து அடிதடிகளை செய்கிறார். ஒருகட்டத்தில் போலிசால் மோகன்லாலுக்கு பிரச்சனை வர விஜயை போலிசாக மாற்றுகிறார். அதுவரை தன் அப்பா செய்பவை எல்லாம் நல்லது என்று நினைத்த விஜய் போலிசாக மாறியவுடன் ஒரு விபத்தின் பொது தன தந்தை செய்வது தவறு என உணர்ந்து அவரை திருத்த முயல்கிறார். நடுவில் டுவிஸ்ட் என்று ஒன்று வைத்திருகிறார்கள் அது ஒன்றும் அவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இல்லை. வேகமான திரைக்கதையுடன் முதல் பாதியும் சற்று மெதுவான திரைக்கதையுடன் இரண்டாம் பாதியுமாக ஒரு முறை பார்க்கும் அளவில் வந்திருகிறது ஜில்லா.

வீரம் 



தன் தம்பிகளுடன் கலகலப்பாக கல்யாணமே வேண்டாம் என்று வாழ்ந்து வரும் அஜித். தன் அண்ணனுக்கு எப்படியாவது கல்யாணம் செய்துவைகவேண்டும் என்று அவரது தம்பிகள் நினைத்து சந்தானத்தின் உதவியுடன் தமன்னாவை தங்கள் வீட்டின் பக்கத்தில் தங்கவைகிரார்கள்.
இதற்கு இடையில் லோக்கல் ரௌடி ஒருவனுடன் மோதுகிறார் அஜித். ஒருகட்டத்தில் அஜித்தும் தமன்னாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். தமன்னாவின் அப்பா அஜித்தை பார்க்கவேண்டும் என்று கூற அஜித் தமன்னா வீட்டில் தங்குகிறார் அப்போது தான் தெரிகிறது தமன்னாவின் குடும்பத்துக்கு ஒருவனால் ஆபத்து இருக்கிறதென்று. தமன்னாவின் குடும்பத்தை அஜித் காப்பாற்றுவது தான் வீரம் படத்தின் கதை. முதல் பாதி முழுக்க சந்தானத்தின் காமெடி இரண்டாவது பாதி வேகமான திரைகதை என்று நல்ல பொழுதுபோக்கு படமாக வந்திருகிறது வீரம்.

நேசன்   

ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனரின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் நேசன் இந்த படத்தின் வெற்றிக்கு முழுக்க விஜயை மட்டுமே நம்பியிருக்கிறார் என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. மோகன்லால்,காஜல்,பூர்ணிமா,சூரி, தம்பிராமையா என நட்சத்திர பட்டாளத்தையே புக் செய்த இயக்குனர் விஜயை மட்டுமே படம் முழுக்க பயன்படுதிருகிரார். விஜயை வைத்தே காமெடி சீன் எடுப்பதற்கு சூரியை ஏன் புக் செய்யவேண்டும்?... நான்கு சீன்களிலும் பாடலுக்கும் மட்டும் வருவதற்கு ஹீரோயினுக்கு எதற்கு தேவையே இல்லாமல் சம்பளம் கொடுக்கவேண்டும்?... எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுக்க கத்திக்கொண்டு மட்டுமே இருப்பதற்கு மோகன்லால் எதற்கு?... இந்த படம் பாக்ஸ் ஆபிசில் தப்பித்து தயாரிப்பாளர் கையை கடிக்காமல் விட்டதற்கு முழு காரணம் விஜய் மட்டுமே. விஜய் இல்லையென்றால் முதல் வாரத்தில் இவ்வளவு வசூல்(44 கோடி) கண்டிப்பாக வந்திருக்காது.இயக்குனர் தனக்கு கொடுத்த வாய்ப்பை வீனடிதிருகிரார்.

சிவா

ஏற்கனவே சிறுத்தை என்ற சுமார் படத்தை கொடுத்த இயக்குனர் அஜித்தை வைத்து சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். முதல் பாதி முழுக்க சந்தானத்தின் காமெடியை காட்டி நடுநடுவே அஜித்தை காட்டியுள்ளார். இரண்டாம் பாதி முழுக்க அஜித்தை நன்றாக பயன்படுத்தி உள்ளார். முன் பாதி மெதுவாக சென்றாலும் காமெடியை வைத்து மேனஜ் செய்துள்ளார். இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் அதிரடி கலந்த இவரது திரைகதை பிரம்மிக்க வைக்கிறது. அஜித் படங்களில் வழக்கமாக இல்லாத காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளை சேர்த்து வெற்றிப்படமாக மாற்றியுள்ளார் சிவா.

விஜய்  




உன்ன மாதிரி ஊருக்கு ஒருவன் இருந்தால் தப்பே நடக்காது என்று சொல்லும் ஒருவரிடம் தப்பு நடக்க கூடாதுன்னு அடிகல தப்பு நடக்கணும் அத நாங்க மட்டும் தான் பண்ணும்னு அடிக்கிறேன்னு சொல்வதில் ஆரம்பித்து படம் முழுக்க தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கட்சிதமாக செய்துள்ளார். சண்டை காட்சிகளில் விஜய்யின் முகபாவனைகள் அபாரம். மோகன்லாலிடம் அடங்கிபோகும் இடங்களிலும் எதிரிகளை துவைத்து இடக்கும் இடங்களிலும் விஜய்யின் நடிப்பு நன்றாக உள்ளது. படத்திற்கு படம் இளமையான தோற்றமாக காட்சியளிப்பது இவரின் கூடுதல் பிளஸ். ஒரு காட்சியில் தோள்பட்டையை ஒரு பக்கமாக தூக்கிக்கொண்டு நடக்கும் காட்சி பார்பதற்கு கேவலமாக உள்ளது. இது போன்ற காட்சிகள் தேவையற்றது. மேலும் சில இடங்களில் மீண்டும் குரலை இழுத்து பேசும் பழைய ஸ்டைலை பின் பற்றியுள்ளார் தயவுசெய்து அதை விட்டுவிடுங்கள் சுத்தமாக நன்றாக இல்லை.

அஜித்


 

இந்த மாதிரியான நடிப்பை அஜித் இவ்வளவு நாளாக எங்கு வைத்திருந்தார் என்று தெரியவில்லை. வழக்கமாக இவர் படம் முழுவது உம்மென்று எதோ தனிப்பட்ட மனிதரை போன்றும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் இவருக்கும் பெரிய ஒரு இடைவெளி இருப்பது போன்று தோன்றும். அதானால் தான் அஜித்திற்கு குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் இதில் எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இறங்கி அடித்திருக்கிறார். குழந்தையிடம் அஜித் பேசும் காட்சி மற்றும் தமன்னாவிடம் பேசும் காட்சிகள் அஜித் ரசிகர் அல்லாதோரையும் கவர்ந்த காட்சிகளாகும். கோட் சூட் போட்டு எப்போதுமே உம்மென்று நடிப்பதை விடுத்தது இம்மாதிரியான கலகலப்பான வேடங்களில் நடித்தால் இதுவரை இல்லாத சிறுவயது ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அஜித்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இம்மாதிரியான கலகலப்பான வேடங்களில் நடிப்பதை தொடருங்கள் அஜித். சால்ட் அண்ட் பேப்பர் லுக் இந்த படத்திற்கு தேவையே இல்லாதது. தமன்னாவுடன் ஆடும் பாடல் காட்சிகளில் தாத்தா பேத்தி மாதிரி இருக்கிறது. தயவுசெய்து இந்த கெட்டப்பை மாற்றுங்கள்.

வசூல்

ஜில்லா படத்தின் முதல் நாள் வசூல் 11.25 கோடி

வீரம் படத்தின் முதல் நாள் வசூல் 9.35 கோடி 

எனது மதிப்பெண்

 ஜில்லா :   50/100

 வீரம்      :   60/100