Pages

22/09/2013

விஜய்க்கு அவமரியாதை.... எங்கே செல்கிறது தமிழ் சினிமா?

தென்னிந்தியா சினிமா நூற்றாண்டு விழா நேரு அரங்கில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவின் முன்னனணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு நடந்த அவமானம் தமிழ் சினிமா எந்த நிலையில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.



தலைவா படத்தால் ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் நூற்றாண்டு விழாவிற்கு அழைக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்டது கடைசி நேரத்தில் விஜய் விழாவில் கலந்துகொண்டார். விழாவில் தமிழ் சினிமா பற்றி திரையிடப்பட்ட ட்ரைலரில் முன்னணி நடிகராகிய விஜய் பற்றிய காட்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன.

தமிழ் சினிமாவின் சாதனை படங்களில் விஜயின் துப்பாக்கி படம் மட்டுமே காட்டப்பட்டது மற்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டன. மற்ற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களுக்கு வி ஐ பி வரிசையில் முன் வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த முன்னணி நடிகர் விஜய்க்கு கடைசி வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து பேச தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாருக்கும் தைரியமில்லை அனைவரும் வாயை மூடிகொண்டிருக்கும் பொது இளம் நடிகர்கள் பலர் விஜயை முன் வரிசையில் வந்து அமருமாறு அழைத்தனர் ஆனால் விஜய் தான் இங்கயே அமர்ந்து கொள்வதாக சைகையின் மூலம் தெரிவித்தார். விக்ரம் மட்டும் இவை எதையும் பொருட்படுத்தாமல் விஜயின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார். விஜயும் விக்ரமும் நெடு நேரம் பேசிகொண்டிருன்தனர்.



விஜயை அவர்கள் ஒதுக்கிய போதும் இன்று 100வது விழா பற்றி வெளியான அணைத்து நாளிதழ்களிலும் விஜய் முன்னிலை பெற்று இருந்தார். ட்விட்டரில் விஜய் இன் 100 தமிழ்சினிமா என்பது உலக அளவில் ட்ரண்டில் இருந்தது. விஜயை திட்டமிட்டு அவமானப்படுத்த முயன்றவர்கள் இதை பார்த்து விஜயின் தகுதியை தெரிந்து கொள்ளட்டும்.

இதை நான் எழுதுவதற்கு காரணம் விஜய் அவமானப்படுத்தப்பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. முன்னால் ஆட்சியில் அஜித் தன்  மனதில் பட்டதை கூறியதற்காக அவரும் இதே நிலைக்கு தள்ளப்பட்டார். கோபால புறம் சென்று மன்னிப்பு கேட்டார் இருப்பினும் கோவை செம்மொழி மாநாட்டில் அவர்க்கும் ஷாலினிக்கும் கடைசி வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது  அப்போது விஜய் மாதிரியே அவரும் அமைதியாக அமர்ந்து சென்று விட்டார். கமலுக்கு விஸ்வரூபம் பிரச்சனையில் பல முன்னணி நடிகர்களும் இதே போன்று அமைதி காத்தனர் ஆனால் விஷால் மட்டுமே தைரியமாக நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு ராதாரவியும் சரத்குமாரும் தாங்கள் என்னவோ பிற நடிகர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்பது போல விஷாலிடம் பல கேள்விகளை கேட்டனர். ஆனால் பின்னர் ஏற்பட்ட தலைவா பிரச்சனையில் விஷால் கூறியது சரியானதே என்று தெளிவாக தெரிந்தது.

தமிழ் நாட்டில் இனிமேல் படம் எடுத்தால் முதலில் முதலமைச்சர் பின்பு அணைத்து மத தலைவர்கள் அப்படி அனைவருக்கும் போட்டு காண்பித்து அவர்கள் அனுமதி பெற்ற பின் தான் படம் வெளியிட வேண்டும் போல் இருக்கிறது அப்படி ஒரு நடிகன் தன் விருப்பம் போல வெளியிட்டால் விஜய்க்கு ஏற்ப்பட்ட நிலை தான் போல இந்த லட்சணத்தில் தமிழ் சினிமா சுதந்திரமாக செயல் படுகிறது என்று வாய்கூசாமல் பொய் வேறு சொலிக்கொண்டு திரிகிறார்கள். இது அஜித் விஜயோடு நின்று விட  போவது இல்லை மற்ற நடிகர்களுக்கும் தொடரும் அன்று அஜித்துக்கு இந்த நிலை ஏற்ப்பட்ட பொது அவர் ரசிகர்கள் மட்டுமே போராடினர் இன்று விஜய்க்கு ஏற்பட்ட பொது விஜயின் ரசிகர்கள் மட்டுமே போராடுகின்றனர்.

இந்த நிலை மற்ற நடிகர்களுக்கு வரும் போதும் இதே தான் நடக்க போகின்றது இதனால் தமிழ் சினிமாவின் நிலை என்ன ஆகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகிய கமல், விஜய் , அஜிதுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற இளம் நடிகர்களின் நிலை என்ன என்று தமிழ் சினிமாவை சேர்ந்த அனைவரும் யோசித்து பார்க்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தாள் அரசியல் வாதிகளுக்கு அடிமைகளாக தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்ப்படும்.

07/09/2013

இருதலை காதல் - சிறுகதை


" என்ன அஜய் உனக்கு பிரச்சனை ஏன் இப்படி பண்ற? "
 .
" எனக்கு பிரச்சனை ஏதும் இல்ல லீலா... நான் உன்ன என்ன பண்றேன்? "

" செல்வாகிட்ட என்ன பத்தி என்ன சொன்ன? "

"நான் உன்ன பத்தி ஏதும் சொல்லல அவன் எனக்கு அவ்வளவு க்ளோஸ் ஃபிரன்ட் கிடையாது அவ்ளோ அவன்கிட்ட பேசமாட்டேன் அப்படியே பேசினாலும் நான் ஏன் உன்ன பத்தி அவன்கிட்ட பேச போறேன்?"

"நீ என்கிட்டே பேசி 1 வருஷம் ஆகுது. இப்பவும் நீயா பேசல நன் வந்து பேசறதால தான் பேசற ஆனா நான் மத்தவங்க கிட்ட பேசினா உனக்கு ஏன்டா பிடிக்கல?"

'' லீலா  நீ ஏன் இப்படி என்கிட்ட கேக்ரனு எனக்கு புரியல நீ யார்கிட்ட பேசினா எனக்கு என்ன நான் ஏன் அதுக்காக கவலைப்பட போறேன் சொல்லு... "

" நீ சொல்லாம அவன் எப்படி என்கிட்ட வந்து நீ அஜய்ய லவ் பண்ணியமே இப்ப பிரிஞ்சிட்டிங்கலாம் என்ன ப்ரொப்லெம் அப்படின்னு கேக்றான்? "






"நம்ம லவ் பண்ண விஷயம் எனக்கும் உனக்கும் மட்டும் தான் தெரியுமா ஏன் வேற யாரும் சொல்லிருக்க மாட்டாங்களா? "

" நான் சூர்யாகிட்ட கேட்டுட்டேன் அவன் இல்லன்னு சொல்லிட்டான்..."

" நான் செல்வாகிட்ட அப்படி ஏதும் சொல்லல சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல எனக்கு...."

"அப்படின்னா வேற யாருடா சொல்லிருப்பாங்க?..."

" அது எனக்கு தெரியல சரி அவனுக்கு இது தெரியிறதுல உனக்கு என்ன பிரச்சனை, நீ அவன லவ் பண்றியா??? "

" ஏன்டா இப்படி தப்பா பேசற அவன் என் ஃ பிரன்ட்   அவ்ளோ தான்... "

"அப்படினா நாம முன்னாடி லவ் பண்ணது யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைக்கிற அப்படி தான??"

"முன்னாடி லவ் பண்ணாத அப்படினா இப்ப நீ என்ன லவ் பண்ல மறந்துட்ட அப்படி தான???..."

" நான் மறக்கல நீ தான் என்ன நம்ம லவ்வ எல்லாத்தையும் மறந்துட்ட
கேர்ல்ஸ் ஒன்லி ஹாவ் தட் கேரக்ட்டர்"

" ஆமா  பொண்ணுங்கள நீங்க குறை சொல்லி தான ஆம்பளைங்க நீங்க நல்லவனா ஆகிடுரிங்க ஏன்ன பசங்களுக்கு மட்டும் தான் உண்மையான லவ் வரும் பொண்ணுங்களுக்கு வராது எங்களுக்குலாம் மனசே கிடையாது "

" நான் மத்த பசங்க மாதிரி கிடையாது லீலா மத்த பசங்கலாம் லவ் பண்ற பொண்ணு ஒரு மாசம் பேசலானா வேற ஒரு பொண்ண பாத்துட்டு போய்டுவாங்க ஆனா நான் இன்னும் தனியா தான் இருக்கேன்"

" ஆனா உன் மனசுல நான் இல்லையே அஜய்..."

" இல்லன்னு நீ என் மனசுல வந்து பாத்தியா லீலா?... உன் மனசுல மட்டும் இப்ப நான் இருக்கனா?"

" நீ என் மனசுல இல்லன நன் இந்நேரம் வேற ஒரு பையன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டு இருப்பனே!!..."

"யாருக்கு தெரியும் லீலா நான் என்ன உன் கூடவா இருக்கேன் உன் வாழ்க்கைல வேற ஒருத்தன் இருக்கான இல்லையானு வந்து பாக்றதுக்கு.."

" நான் மட்டும் உன் கூடவா இருக்கேன் அஜய் நீ வேற எந்த பொன்னையும் இன்னும் லவ் பண்லன்னு சொன்னத நான் நம்பலையா காதலுக்கு நம்பிக்கை முக்கியம் அஜய் உனக்கு அது துளி கூட கிடையாது "

" நீ ஆதாரம் இல்லாம நான் சொல்ற எதையும் நம்ப தேவை இல்ல லீலா என் மொபைல் பாரு அதுல ஏதாவது அப்படி இருக்கணு, இல்ல என்ன பத்தி யாரவது உன்கிட்ட அவன் வேற ஒரு பொண்ணுகூட இருந்தான்னு சொல்லிருக்காங்களா ஆனா நானே உன்ன நேரடியா பாத்திருக்கனே!!!..."




"என்ன அப்படி  பாத்துட்ட?"

"அன்னைக்கு ஒருத்தன் கூட பைக்ல போனியே அது யாரு லீலா?"

" அவர் என் அங்கள் அன்னைக்கு என்ன பாக்க வந்திருந்தாரு அவரு கூட பைக்ல வீட்டுக்கு வந்தேன் உன்ன லவ் பண்ண நான் என் ரிலேட்டிவ் கிட்ட கூட பேச கூடாத? "

" உங்க அம்மாவுக்கு 3 தம்பிங்க தான் லீலா அவங்க 3 பேரும் எப்படி இருப்பாங்கனு எனக்கு தெரியும் ஆனா அவன் அப்படி இல்லையே பாக்றதுக்கு வேற மாதிரி இருந்தான்..."

" அம்மா கூட பிறந்தவங்க மட்டும் தான் மாமாவா அஜய் வேற யாருமே இருக்க முடியாத இப்ப அதனால என்ன சொல்லவர நான் அவர லவ் பண்றனு சொல்றியா?"

" நீ யாரையாவது லவ் பண்றிய இல்லையானு  எனக்கு தேவை இல்ல லீலா இப்போ உன் மனசுல நான் இல்ல அது மட்டும் உண்மை தான் "

" உன் மனசுல நன் இருந்திருந்தா நீ  இவ்ளோ நாள் பேசியிருப்படா இப்ப கூட நான் தான் முதல்ல பேசுனேன் இதனை நாள் என்கிட்டே பேசணும்னு கூட உனக்கு தோணல..."

" இப்ப நீ  ஒன்னும் என் மேல ஆசைப்பட்டு பேசலையே லீலா உனக்கு ஒரு பிரச்சனை அதுக்காக என்கிட்டே இப்ப பேசுற உண்மைல உனக்கு என் மேல அன்பு இருந்திருந்தா இவ்ளோ நாள் பேசியிருக்கலாமே!!!.."

" நல்ல யோசிச்சு பாருடா நம்ம காதலிக்கிற விஷயம் என் வீட்ல தெரிஞ்சதுக்கு அப்பறம் நீ தான் என்கிட்டே பேசல... எங்க அம்மா என்கிட்டே
உன்ன பத்தி கேட்டாங்க நான் அவன் ரொம்ப நல்ல பையன் என்ன உண்மையா காதலிக்கிறான் என்ன கைவிட மாட்டான்னு உன்ன பத்தி எவ்ளோ நல்ல விதமா சொன்னேன் தெரியுமா எங்க அம்மா என்ன ஒன்னும் சொல்லலனாலும் எங்க மாமா என்ன எப்படி திட்னாறு தெரியுமா அவ்வளவு கஷ்டத்துலயும் நான் உன்ன தான் லவ் பண்ணுவேன்னு உறுதியா சொன்னேன் ஆனா நீ  எங்க வீட்ல தெரிஞ்சிடுசுனு தெரிஞ்சதுமே ஒரு வாரம் என்ன பாக்க கூட வரல நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ஒரு நாள் அழுதுட்டு இருக்கும் போது எங்க அம்மா பாத்துட்டாங்க அவங்ககிட்ட இத பத்தி சொன்னேன் அவங்க என்ன தான் திட்னாங்க ஒரு சின்ன பிரச்சனை வந்ததுக்கு பயந்து உன்ன பாக்க கூட வராத அவன எதை நம்பி நீ லவ் பண்றனு கேட்டாங்க அப்பவும் அவனுக்கு அதாவது படிக்கிற வேல இருக்கும் நு சொல்லி உனக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசினேன் ஆனா நீ  என்ன பத்தி இவ்ளோ கேவலமா நினைச்சிட்ட இல்ல...."

" என்ன என்னப்பன்ன சொல்ற லீலா நாம இப்ப படிச்சிட்டு இருக்கோம் உங்க வீட்ட எதிர்த்து நாம கல்யாணம் பண்ணிக்க முடியுமா இந்த வயசுல இல்ல உங்க வீட்டு முன்னாடி வந்து நின்னு சினிமால வரமாதிரி சண்ட போட முடியுமா நான் உன்ன பாக்க வரலான்னு தான் நெனச்சேன் ஆனா மழை வந்திட்டு இருந்தது நீயும் வெளிய வர முடியாது ஸ்கூல் இருந்திருந்தா கூட பரவாயில்ல அங்கேயாவது மீட் பண்ணியிருக்கலாம் ஆனா மழையால ஸ்கூலும் லீவ் விட்டுடாங்க அந்த சூழ்நிலைல என்னால என்ன பண்ண முடியும் அதனால தான் ஸ்கூல் ஆரம்பிக்கடும் என்ன ஆச்சுனு விசாரிப்போம்னு கொஞ்சம் பொறுமையா இருந்தேன் ஒரு வாரம் கழிச்சி ஸ்கூல்ல உன்ன பாக்க எவ்ளோ ஆவலா வந்தேன் தெரியுமா நீ என்ன கண்டுக்காம போய்ட்ட எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு அப்போ சரி எதோ மூட் அவுட்ல இருந்திருப்பா அப்பறமா வந்து பேசுவானு நெனச்சேன் ஆனா நீ அதுக்கப்பறம் பேசவே இல்ல..."

" மழை வந்ததுலாம் ஒரு காரணமா நான் நீ வருவ பாக்கலாம்னு மழைல நனைஞ்சிட்டு வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அதனால எனக்கு காய்ச்சல் வந்தது தான் மிச்சம்  நான் உன்கிட்ட ஹீரோயிசத்த எதிர்பாகலடா அந்த கஷ்டத்துல ஆறுதலா கொஞ்சம் பேசுவனு நெனச்சேன் ஆனா நீ வரவே இல்ல அந்த கோபத்துல தான் நீ என்ன முதல் நாள் ஸ்கூல பாக்கும்போது பேசாம போயிட்டேன் அப்பா மனசு எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா அதுக்கப்பறம் ஈவ்னிங் நீ  வெயிட் பன்னுவனு நெனச்சேன் எப்பவும் எனக்கு  ஸ்பெஷல் கிளாஸ் முடியிற வரைக்கும் வெயிட் பண்ற நீ அன்னைக்கு மட்டும் வெயிட் பண்ணாமலே போயிட்டே அன்னைக்கே நான் பாதி செத்துட்டேன் அதுக்கப்பறம் உன்கிட்ட பேசாத ஒவ்வொரு நாளும் செத்துட்டு தான்டா இருந்தேன் இன்னைக்கு நீ  இப்படிலாம் பேசி என்ன முழுசா சாகடிச்சிட்ட..."

 "இப்போ இவ்வளவு பேசற நீ அப்பவே இதெல்லம் சொல்லிருந்தா இவ்ளோ பிரச்னை இருந்திருக்காதே லீலா இவ்வளவு நாள் இதெல்லாம் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன நாம ஏன் பேசணும் அவனே வந்து பேசட்டும்னு உனக்குள்ள இருந்த ஈகோ தான உன்ன பேச விடாம தடுத்துடுச்சு அந்த ஈகோ எனக்க இருக்காத நீ பேசமாட்ட நான் மட்டும் வந்து பேசணும்னு எதிர்பாத்திருக்க காதல் உன்  மனசுலயும் தான இருக்கு அப்பறம் ஏன் விட்டுகொடுத்து  போக முடியல உன்னால?..."

" ஏன் அஜய் அட்ல்லீஸ்ட் இப்பவாது நான் இதெல்லாம் சொல்றேன் ஆனா நீ இதெல்லம் நான் கேட்டதுக்கு அப்பறம் தான் சொல்ற அப்படின்னா  உன் மனசுல காதல விட ஈகோ தான அதிகமா இருக்குனு அர்த்தம்..."

" சரி லீலா உன் மனசுல லவ் இருக்குனா நாம லவ் பத்தி மத்தவங்களுக்கு தெரியிறது உனக்கு ஏன் பிடிக்கல அதுக்கு என்ன அர்த்தம்?..."

" ஏன்னா நான் பொண்ணு இதனால எனக்கு தான் பாதிப்பு அதிகம் ஒருவேல நீயும் என்ன லவ் பண்ணி இப்போ நம்ம ரெண்டு பேரும் ஒன்ன இருந்திருந்தா நம்ம லவ் யாருக்கு தெரிஞ்சாலும் என்னனு கவலை படாம இருப்பேன் ஆனா நீ என்கிட்டே பேசறது கூட கிடையாது இந்த நிலமையில என்ன பன்ன முடியும் இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிஞ்சு பின்னாடி நீயும் என்ன விட்டுட்டா  நான் என்ன பண்றது அப்பறம் நான் பண்ண தப்புக்கு எங்க அம்மா தான் கஷ்டபடுவாங்க எங்க அப்பா இல்லாம எங்கள அவங்க வளத்தாங்க அவங்களுக்கு நான் பெருமை தேடி தரலனாலும் அசிங்கத்த தேடி தரக்கூடாது நன் இவ்வளவு யோசிக்ரதுக்கு காரணம் நீ தான் நீ ஒழுங்க இருந்திருந்தா இந்த அளவுக்கு நான் பயப்படணும்னு அவசியம் இல்ல..."

" அப்படினா உன்ன மனசுல காதல் இருந்தாலும் நான் இல்லனா இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்க அப்படி தான.... பின்னால என்னால பிரச்சன வரகூடதுனுதான் இப்பவே இவ்ளோ தெளிவா இருக்க "

" நீ  சொல்றது நிஜம் தான்டா ஒருவேள நீ என்ன ஒதுகிட்டனா என்னால வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்காம இருக்க முடியாதுடா ஏன்ன இந்த உலகத்துல ஆம்பள கல்யாணம் பண்ணாமா இருந்த உலகம் எதும்  தப்பா  பேசாது ஆனா ஒரு பொண்ணு ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலனா இந்த உலகம் அந்த பொண்ண பத்தியும் அந்த பொண்ண பெத்தவங்கள பத்தியும் தான் தப்பா  பேசும் அதனால எனக்கு வேற வழி இல்லடா..."

" சரி லீலா ரொம்ப பிரக்டிகலா இருக்க உண்மையாவே  நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் காதல் இருந்தும் நம்ம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க நம்மால முடியல நமக்குள்ள இருக்க ஈகோ இடம் கொடுக்கல பேசுனா எப்பவோ முடிஞ்சிருக்கவேண்டிய சின்ன பிரச்சனையே இப்ப தான் நம்மளால  புரிஞ்சிக்க முடியுது ஒரு வேல கல்யாணத்துக்கு அப்பறமும் இந்த அளவுக்கு ஈகோ இருந்த நம்ம வாழ்கையே கேள்விகுரியாகிடும் இப்போவாது பரவாயில்ல கல்யாணதுக்கு அப்பறம் பிரிஞ்சா நம்ம குழந்தை வாழ்க்கையும் சேந்து வீணாகிடும்..."

"அதனால இப்ப என்ன சொல்லவர அஜய் ஒரு சின்ன ஈகோ பிரகானைக்காக நாம பிரிஞ்சிடலாம்னு சொல்றியா?..."

" ஆமா லீலா ஒரு சின்ன ஈகோ பிரச்னை தான் நம்மள 1 வருஷம் பிரிச்சி வச்சிருந்தது வாழ்க்கை எப்பவுமே நம்ம கைல இல்ல லீலா கல்யாணத்துக்கு அப்பறம் எவ்ளோ பெரிய பிரச்சனைகள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும் இந்த சின்ன பிரச்சனைக்கே நமக்குள்ள இவ்ளோ பெரிய பிரிவு இன்னும் பெரிய பிரச்னை கல்யாணத்துக்கு அப்பறம்வந்து இதே மாதிரி ஆகாதுன்னு என்ன நிச்சயம்..."

"அதனால நான் வேணான்னு சொல்றியா அஜய்!!!...."

" என் வாழ்க்கைல கடைசி வரை நீ   ஒரு நல்ல தோழியா இருப்ப நாம பிரண்ட்ஸ்ஸா இருந்து நமக்குள்ள எதாவது பிரச்சனை வந்து பிரிஞ்சா கூட நாம ரெண்டுபேருக்கும் எந்த பாதிப்பும் வராது..."

" சரி அஜய் நீ சொல்றத நான் ஏத்துக்குறேன் ஆனா நாம நண்பர்களா இருக்க எனக்கு விருப்பம் இல்ல அஜய் நீ சொன்ன மாதிரி நம்ம வாழ்கை நம்ம கைல இல்லை ஒருவேள நம்ம ரெண்டு பேருக்கும் வேற ஒருத்தர் கூட கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் திரும்ப நமக்கு நம்ம காதல் நினைவுக்கு வந்த நாம பிரிஞ்சி இருந்தா அது ஒரு நினைவாவே போய்விடும் ஆனா நாம பாக்கத்துல இருந்தா இளமை வேகத்துல தவறு நடக்க வாய்புகள் இருக்கு அதனால நாம ஒருத்தர ஒருத்தர் பாக்காம இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது நாளைக்கு நான் ஊருக்கு போறேன் இனிமே இங்க திரும்பி வரமாட்டேன்..."

" நீ சொல்றதும் சரி தான் லீலா நானும் படிக்கறதுக்காக வெளியூர் போறேன் நம்ம ரெண்டு பேருக்கும் இது தான் கடைசி மீட்டிங்..."

( அஜய் : எனக்கு உன்கூட சேந்து வாழணும்னு தான் ஆசை லீலா ஆனா எப்போ நீ நான் உன்ன கை விட்டுடுவனு நெனச்சி இந்த அளவுக்கு யோசிச்சியோ அப்பவே நம்ம லவ் செத்துபோச்சு இத நான் சொல்லி உன் மனச கஷ்ட படுத்த விரும்பல இது என்னோடவே போகட்டும் நீ எப்பவுமே சந்தோஷமா இருந்தா போதும்..)

" சரி லீலா நான் போறேன்"

(லீலா: எனக்கு உன்கூட சேந்து வாழணும்னு ஆசை  தான் ஆனா உன் மனசுல ஈகோ அதிகமா இருக்கு அது உன்ன விட்டு எப்பவுமே போகாது இத சொல்லி உன்ன கஷ்ட படுத்த நான் விரும்பல நான் எப்படி போனாலும் பரவால்ல இது என் மனசுலையே இருக்கட்டும் இத நான் எப்பவுமே உன்கிட்ட சொல்ல மாட்டேன் ...)

" சரி அஜய் நானும் போறேன் bye take care.................."





                                                                                                         _  By
                                                                                                                   ANTONY.S