tag:blogger.com,1999:blog-15956400152732444942024-03-05T00:42:55.915-08:00தமிழ் நிலா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... "வாழ்க தமிழ்"...Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-32475641897755436692017-11-05T05:04:00.000-08:002017-11-05T05:04:01.280-08:00விழித்திரு விமர்சனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
விழித்திரு... விமர்சனம்<br />
<br />
டி.ஆர் இந்த படத்துக்கு ஏற்கனவே பப்ளீசிட்டி செய்தும் எனக்கு இந்த படத்தின் மீது ஈர்ப்போ ட்ரைலர் பார்க்கணும் னு என்னமோ வரவில்லை. நண்பர்கள் மூலம் தான் இந்த படத்தின் கதை கரு தெரியவந்தது பிறகு ட்ரைலர் பார்த்தாச்சு இன்று படமும் பார்த்தாச்சு... நன்கு முனை கதையமைப்பு கொண்ட கதை...<br />
<br />
இந்த படம் ஏன் அவசியம் பார்க்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று இளவரசன் விஷயத்தில் பா.மா.க செய்த பச்சையான சாதி அரசியலும் அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதையும் தைரியமாக பதிவு செய்தது. வெறும் கோபம் என்று சொல்லாமல் ஆதி தமிழர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு சாதி வெறியுடன் செய்த விஷயங்கள் படத்தில் வசனம் மூலம் இடம் பெறுகிறது. இன்னொரு காரணம் அதிகார வர்க்கம் தான் தேவைக்காக குற்றவாளிகளை தப்பிக்க விடுவதும் அப்பாவிகளை திட்டமிட்டு குற்றவாளியாக மாற்றுவதையும் காட்சிகள் மூலம் இடம் பெற்றுள்ளது. முத்துக்குமார் பாத்திரம் அவரின் திருநெல்வேலி பின்புலம் அவரது தங்கை அந்த தோள்பை என்று அனைத்தும் நமக்கு ராம் குமாரை நினைவு படுத்திக்கிறது. இந்த இரண்டு நிஜ சம்பவங்களை வசனமாகவும் காட்சிகளாகவும் வைத்த அந்த தைரியத்திற்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.<br />
<br />
அந்த கிறிஸ்டினா விக்ரம் கதை தேவை இல்லாத ஆணி அதை புடுங்காமல் இருந்திருக்கலாம். ஏனனெனில் ஏற்கனவே தமிழ் சினிமா அடித்து துவைத்த கதை தான் அது. அந்த விக்ரம் கதாபாத்திரம் பயணிக்க ஆரம்பித்ததும் முடிவு என்னவாக இருக்கும் னு முன்கூட்டியே தெரிந்துவிடும் அளவுக்கு நமக்கு பழக்கப்பட்ட கதை அது. அதை தவிர்த்து வேறு புதிய கதை சேர்த்து இன்னும் சுவாரசியம் சேர்த்திருக்கலாம். அடுத்து இதில் உள்ள ஸ்பெஷல் எனக்கு மிகவும் பிடித்த பேபி சாரா இந்த படத்தில் நடித்துள்ளது. ஆனால் அதன் கதாபாத்திரம் அவ்வளவு நம்பும்படியாக இல்லை. நாயையை தேடி கண் தெரியாத அப்பாவும் சின்ன குழந்தையும் ராத்திரியில் வெளியில் சுற்றுவதும் அவரின் வீட்டார் இருவரையும் காணவில்லை என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது எப்படி. பேபி சாரா தன் கண் தெரியாத அப்பாவை நாடு இரவில் தனியாக விட்டுட்டு ஓடுவது ஏன் அவர் தனியாக பொய் ஒருவரிடம் மாட்டி தப்பித்து மீண்டும் தனியாக பொய் இன்னொருவரிடம் மாட்டிக்கொள்ளும்படி கதை வைத்தது தவிர்த்திருக்கலாம். விதார்த் தன்ஷிகா லவ் ஸ்டோரி அதே பழைய திருட திருடி கதை தான் கடைசியில் ஒருவர் திருந்திடுவார் னு எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.<br />
<br />
டி.ஆர் ஆடிய அந்த ஐட்டம் டான்ஸ் படத்துக்கு தேவையே இல்லை. படத்தின் பெரிய நெருடல் அது.<br />
<br />
படத்தை பார்க்க ஆர்வமாக்குவது முத்துக்குமார் மற்றும் அவர் சேர்ந்து பேசும் சாதி அரசியலும் அதிகார வர்க்கம் அரசியல்வாதிகள் போலீஸ் போன்றோர் செய்யும் தவறுகளை தைரியமாக சொல்லிய விதம் தான்.<br />
<br />
படத்தின் கடைசி காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. படம் முடிந்து வெளி வரும்போது ஒரு நல்ல தைரியமான இயக்குனரின் படைப்பை பார்த்துவிட்டோம் ஒன்று ஒரு மன நிம்மதியும் இவ்வளவு நடக்கிறது நம்மால் என்ன செய்ய முடிகிறது என்ற ஆற்றாமையும் கண்டிப்பாக ஏற்படும்...<br />
<br />
நான் இன்று படம் பார்த்தபோது என்னோடு சேர்ந்து 20 பேர் தான் படத்தை பார்த்தனர். இது போன்ற நல்ல படைப்புகள் கண்டிப்பாக மக்க்களிடம் போய் சேர வேண்டும். நல்ல படம் வரும்போது அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும். பெரிதாக மார்கெட் செய்யப்படும் மொக்க படங்களை மட்டும் பார்த்துவிட்டு தமிழ் படம் நல்லாவே எடுக்கிறது இல்லை ன்னு பொலம்புறது தான் நம்ம மக்களின் வேலை. இனியாவது நல்ல படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆதரவு தருவோம்.<br />
<br />
விழித்திரு தூங்கி கொண்டிருக்கும் நம்மை விழித்துக்கொள்ள செய்யும் ஒரு நல்ல முயற்சி கண்டிப்பாக தியேட்டர் சென்று பாருங்கள்.<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-61869439227143033032015-06-20T03:27:00.000-07:002015-06-20T03:50:42.345-07:00ரஜினி என்னும் மகா அரசியல்வாதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; color: #666666; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.0799999237061px; margin-bottom: 1em; margin-top: 1em;">
அனைவருக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு போடும் எண்ணம் வந்தது என்ன போடலாம் என்று யோசித்த பொது ரஜினி ரசிகன் ஒருவன் ரஜினிக்கு எழுதிய ஒரு கடிதம் என் கண்ணில் பட்டது சரி அதையே பதிவாக போடுகிறேன். படித்துவிட்டு சிந்தியுங்கள். </div>
<div style="background-color: white; color: #666666; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.0799999237061px; margin-bottom: 1em; margin-top: 1em;">
2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்.</div>
<div class="separator" style="background-color: #141414; clear: both; color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18.2000007629395px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGMCWUBBzWvClQ_TeslgObSwSsenKdJlmNZhnEMbynY4ATnRbgtwTAcV0VWdp2Pq1oy26vqeqiKC5ayLsFm5mamryByZ5IGmvBA6_CAbw1qZ9Ugkea_cTONYjE3Y9ZyNQGvxmbhB0juvTd/s1600/download.jpg" imageanchor="1" style="color: #444444; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" height="325" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGMCWUBBzWvClQ_TeslgObSwSsenKdJlmNZhnEMbynY4ATnRbgtwTAcV0VWdp2Pq1oy26vqeqiKC5ayLsFm5mamryByZ5IGmvBA6_CAbw1qZ9Ugkea_cTONYjE3Y9ZyNQGvxmbhB0juvTd/s400/download.jpg" style="-webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.2) 0px 0px 0px; background: rgb(34, 34, 34); border-radius: 0px; border: 1px solid transparent; box-shadow: rgba(0, 0, 0, 0.2) 0px 0px 0px; padding: 8px; position: relative;" width="400" /></a></div>
<div style="background-color: white; color: #666666; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.0799999237061px; margin-bottom: 1em; margin-top: 1em;">
<br /></div>
<div style="background-color: white; color: #666666; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.0799999237061px; margin-bottom: 1em; margin-top: 1em;">
சூப்பர்ஸ்டார் தி<span class="text_exposed_show" style="display: inline;">ரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #666666; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.0799999237061px;">
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை<br />நான் நிச்சியமாக எழுதவில்லை.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். "சூப்பர் ஸ்டார்" என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
என்னுடைய கேள்வி இதுதான்....நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, 'பகுத்தறிவாளர்கள்' என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே ...சாட்சாத் நீங்கள்தான்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
"அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா" என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நீங்களே கதை,வசனம் எழுதிய "பாபா" படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை<br />சொன்னது நீங்கள்தான்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
"நான் ஆன்மிகவாதி", "தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்", "இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்" என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த 'இமயமலை' அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
"இமயமலை"யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை...கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
1991 - இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் "ஆசிரமம்" என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள்.இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்...உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
"அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்" என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை "ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்" என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் "பிம்பங்கள்" எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே..</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
"என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". - படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா?</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
"பாட்ஷா" படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
உங்கள் பதில் "ஆம்" என்றால்,</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
ஆனால், எனது இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
எதோ "எந்திரன்" விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் "ராணா" படத்தில், டைட்டில் பாடலில் தமிழ் மக்களுக்கு நீங்கள் என்னவேண்டுமானாலும் தருவீர்கள் போன்ற வரிகள் இருக்கும்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இனி,இதுபோன்ற ,வழக்கமாக உங்கள் படங்களின் "டைட்டில்" பாடல்களில் வரும் 'வாழ வச்சது தமிழ்ப்பால்', 'அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' போன்ற அர்த்தமற்ற, அனாவசிய வார்த்தைகளை தவிருங்கள். வசனங்களிலும் அவ்வாறே.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
மேடைகளில், வார்த்தைக்கு வார்த்தை "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே" என்று முழங்குவதை நிறுத்துங்கள். வேண்டுமானால்,<br />"என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களே" என்று சொல்லிக்கொள்ளுங்கள்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த 'பிசினஸ்''க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
வழக்கம்போல,"எந்திரன்" சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறோம்.</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
பின் குறிப்பு : Chennai , Karnataka , Dubai, Coimbatore , Singapore , Australia யில் உள்ள ரஜினி சொத்துகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10,000 கோடி</div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
இப்படிக்கு,<br />தமிழ்நாட்டு பொதுமக்<br />கள் சார்பாக,<br />உங்கள் ரசிகர்களில் ஒருவன். </div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-47420352746451958792014-07-28T00:27:00.002-07:002014-07-28T00:27:22.290-07:00சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் இளைய தளபதியே போதும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
அனைவருக்கும் வணக்கம் நான் பதிவு எழுதி பல ஆகிவிட்டது. வேலை காரணமாக இணையத்தின் பக்கமே வரமுடியவில்லை இப்பொழுது தான் நேரம் கிடைத்துள்ளது அதனால் தான் இந்த முடிவு. நீ பதிவு எழுதாததால் என்ன இப்போது மூழ்கிவிட்டது என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக புரிகிறது. நான் பதிவு எழுதாததால் என் வாசகர்கள்(???) ஆழ்ந்த சந்தோஷத்தில் மன்னிக்கவும் வருத்தத்தில் இருப்பதாக கேள்விபட்டேன் அதனால் இப்போதே அவர்களுக்கு இன்பம் அளிக்கவே இந்த பதிவு. மொக்கை போட்டது பொது எதையாவது ஆரம்பின்னுலாம் திட்ட கூடாது இதோ உங்களுக்காக இந்த படைப்பு(???)....<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggBWxRjX3JlvprMmnHr1iDZnZCOUCxsljjVzIq44n3MFvV5XK5fK1aVYdz5NfgaOicKfX6dSjwsw_wxFPNfmarTGQp52f_Y-ELy860owdlVpd8Dc1Ctu7B9XaOZd2Fji-MxZszgmlW7w/s1600/Rajini-Vijay.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggBWxRjX3JlvprMmnHr1iDZnZCOUCxsljjVzIq44n3MFvV5XK5fK1aVYdz5NfgaOicKfX6dSjwsw_wxFPNfmarTGQp52f_Y-ELy860owdlVpd8Dc1Ctu7B9XaOZd2Fji-MxZszgmlW7w/s1600/Rajini-Vijay.jpg" height="331" width="640" /></a></div>
<br />
<br />
வழக்கம் போல இளைய தளபதி விஜய் பற்றி தான் இந்த பதிவு. பிடித்தவர்கள் மேலும் தொடரலாம் பிடிக்காதவர்கள் நிறுத்திகொள்ளுங்கள். பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள் தான் ஆர்வமாக படிப்பீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் ஏன் என்றால் நீங்கள் எதிர்த்து தானே விஜயை இந்த அளவுக்கு வளர வைத்துள்ளீர்கள். பிடிகாதவரையும் வளரச்செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அல்லவா நீங்கள் உங்களுக்காகவும் விஜய்யின் ரசிகர்களுக்காகவும் தான் இந்த பதிவு இனி பதிவுக்கு செல்லலாம்...<br />
<br />
வேலைகள் காரணமாக பதிவு எழுதமுடியாவிட்டாலும் விஜய் பற்றிய செய்திகளை அவ்வப்போது தெரிந்து வந்துள்ளேன். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது பற்றி குமுதம் நடத்திய மெகா சர்வேயில் விஜய் வென்றதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைதேன். அதன் பிறகு அரசியலில் தோல்வியடைந்த தலைவர்கள் எந்த பட்டனை அழுத்தினாலும் அவர்களுக்கே ஒட்டு பதிவு ஆவது போல எந்திரத்தை அமைத்துவிட்டார்கள் அல்லது கள்ள ஒட்டு போட்டு வென்றுவிட்டார்கள் என்று தோல்விக்கு ஆறுதலாக எதாவது நொண்டி சாக்கை சொல்வது போல விஜய் ஜெயிக்கவில்லை தவறாக அறிவித்துவிட்டார்கள் என்று வயித்தெரிச்சலில் தோல்வி அடைந்தவர்கள் கிளப்பிவிட்டதை கேள்விப்பட்டு இன்னும் அதிகமாக சந்தோஷமடைந்தேன்.<br />
ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜயை அறிவிப்பதற்கு வேலைகள் நடக்கிறது என்றும் அதற்கு விஜய் நடிகர்களை அழைகிறார் என்றும் செய்திகள் வளம் வந்தன. வழக்கம் போல விஜயை உயர்த்துவதாக எது நடந்தாலும் வாலண்டியராக ஆஜராகும் ஜெயலலிதாவும் விழா நடக்க கூடாது என்று தடை போட்டது. ஜெயா விஜய்க்கு எதிராக நடப்பதாக நினைத்து செய்யும் செயல்கள் எதோ ஒரு விதத்தில் விஜய்க்கு நன்றாக ஆதரவாக அமைந்துவிடும் அவற்றில் இதுவும் ஒன்று. விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பதே என் கருத்து. விஜயும் தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பது போல தான் விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் பேசினார். விஜயின் அன்றைய பேச்சு மிக தெளிவாக இருந்தது என்பது அனைவரும் அவரது பேச்சுக்கு கொடுத்த கைதட்டல்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். விஜய் இதுவரை இவ்வளவு தெளிவாக பேசியது இல்லை.<br />
<br />
எனவே நான் முதலிலே சொல்லியது போல இந்த பதிவு விஜய் ரசிகர்களுக்கு தான். விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற வேண்டும் என்று பல விஜய் ரசிகர்களும் நினைகிறார்கள். அதில் என்ன தவறு தனக்கு பிடித்த நடிகன் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு தானே என நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை தான் அனால் அந்த முதல் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுவதில் தான் இருக்கிறது என்று நினைப்பது தான் தவறு. ரசிகர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் பட்டம் என்பது வேறு அடையாளம் என்பது வேறு. பட்டம் என்பது ஒரு மனிதனை சிறப்பிப்பது அடையாளம் என்பது ஒரு மனிதனால் தன் சிறப்பாக உருவாக்கபடுவது. சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு அளிக்கப்பட்ட பட்டம் இல்லை அது ரஜினியால் உருவாக்கப்பட்ட சிறப்பு அடையாளம் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சூப்பர் ஸ்டார் பட்டதினால் ரஜினிக்கு பெறுமை இல்லை ரஜினியால் தான் அந்த பட்டத்துக்கு பெருமை அதனால் தான் இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுகொண்டவர் யாராக இருந்தாலும் அவர் ரஜினியின் சிறப்புகள் அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள் இல்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgci_uOcpDLNptnvz5wqXu27ybxVTBeURVIQsIc0emZb2x_KnKp1eoNNHYOTnIADIuqkZw-D0XH7wW9WOE34fk6KNq6bfuccKf1UdKM-wcQOohuhKHx3pTCDJZkG8D35_1puvq32boRbA/s1600/vijay-rajini-mgr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgci_uOcpDLNptnvz5wqXu27ybxVTBeURVIQsIc0emZb2x_KnKp1eoNNHYOTnIADIuqkZw-D0XH7wW9WOE34fk6KNq6bfuccKf1UdKM-wcQOohuhKHx3pTCDJZkG8D35_1puvq32boRbA/s1600/vijay-rajini-mgr.jpg" height="262" width="640" /></a></div>
<br />
<br />
இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் என மக்களால் எதிர்பார்க்கப்படும் இருவர் விஜயும் அஜித்தும் தான். ஆனால் நான் இங்கு விஜயை பற்றி மட்டும் தான் எழுதபோகிறேன் ஏன் என்றால் நான் அஜித்தை பற்றி உண்மையை எழுதினாலும் நான் விஜய் ரசிகன் என்ற ஒரே காரணத்திற்காக என்னிடம் சண்டை போட ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. எனவே நான் இங்கு எழுதபோவது விஜய் பற்றி மட்டும் தான். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த போது அவருடைய பட்டம் அவ்வளவு மதிப்பு மிக்கதாக இல்லை. ஏன் என்றால் அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் இருந்தனர் அதை போல ரஜினி தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் அவ்வளவு தான் ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் என்றாலே இந்தியாவில் ரஜினி மட்டும் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் உயர்ந்துள்ளார். அதனால் தான் இன்று பலர் ரஜினியின் அடையாளத்தை பெற விரும்புகின்றனர். ரஜினியின் அடையலாம் என்பது அவரது சூப்பர் ஸ்டார் பட்டமோ அல்லது அவரது நடிப்பு ஸ்டைலோ இல்லை அவரின் திரையுலக சாதனை தான். சினிமாவை தவிர்த்து ரஜினி தனி மனித வாழ்கை பற்றி நிறைய பேசுக்கள் இருந்தாலும் சினிமாவில் அவர் ஒரு ஜாம்பவான் என்பது அனைவரும் ஒத்துகொள்ளும் உண்மை. ரஜினிக்கு முன்னால் சினிமாவில் ஒரு ஜாம்பவான் இருந்தார் அவர் எம்.ஜி.ஆர். ரஜினி எம்.ஜி.ஆர் போல நடிக்க வேண்டும் என்றோ அவரின் மக்கள் திலகம் என்ற பட்டதை அடைய வேண்டும் என்றோ நினைக்கவில்லை. தனக்கென ஒரு அடையாளத்தை எற்ப்படுதினார். தனக்கென ஒரு பாதை வகுத்தார் வெற்றியும் பெற்றார் சிகரத்தை அடைந்தார். எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியை ரஜினியும் பெற்றார் ஆனால் எம்.ஜி.ஆர் சென்ற அதே பாதையில் சென்று அல்ல வேறு பாதையில் சென்று பெற்றார். ஆனால் இன்று ரஜினி அடைந்த உயரத்தை அடைய விரும்பும் நடிகர்களும் சரி அந்த நடிகர்களின் ரசிகர்களும் சரி ரஜினி சென்ற அதே பாதையில் சென்றால் தான் அந்த வெற்றியை பெற முடியும் என்று நினைகிறார்கள் அது தவறு என்பதை நடிகர்களும் சரி அவர்களின் ரசிகர்களும் சரி புரிந்து கொள்ளவேண்டும். மற்ற நடிகர்களை பற்றி எனக்கு கவலை இல்லை நான் குறிப்பாக சொல்வது விஜய்க்கும் அவரின் ரசிகர்களுக்கும் தான்.<br />
<br />
அன்று ரஜினி தனக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் பட்டதை பல சாதனைகள் மூலம் தனக்கான சிறப்பு அடையாளமாக மாற்றினார். அதனால் தான் இன்று பலரும் அவரை போன்று வரவேண்டும் என்று நினைக்கவைக்கும் அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார் . அதே போல நேற்று ரசிகர்கள் உங்களுக்கு கொடுத்த இளைய தளபதி என்ற பட்டதை உங்களுக்காக தனி சிறப்பு அடையாளமாக மாற்றுங்கள் அடுத்த இளைய தளபதி யார் என்று மக்கள் நினைக்க வைக்கும் அளவிற்கு திரையுலகில் உங்கள் சாதனை அமைய வேண்டும். ரஜினி அடைந்த அந்த சிகரத்தை நீங்கள் அடைவதற்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவை இல்லை ரஜினியை போன்றே நடிக்க தேவை இல்லை அவரின் பாதையிலேயே நீங்கள் செல்ல தேவை இல்லை உங்களுக்கென ஒரு தனி பாதை அமைத்து முன்னேறுங்கள் நிச்சயம் சிகரத்தை அடைவீர்கள் இதை விஜய் மற்றும் அவரின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். </div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-50443043778552334512014-04-07T03:56:00.002-07:002014-04-07T03:57:03.293-07:00என்ன நடக்குது இளைய தளபதி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: large;">நா</span>ன் இளையதளபதி விஜயின் தீவிர ரசிகன் அவரது ஒவ்வொரு படம் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது தெரிந்து வைத்துகொள்வேன். ஏற்கனவே துப்பாக்கி என்ற மிக பெரிய 100 கோடி வசூல் செய்த ஹிட் படம் கொடுத்த விஜய்-முருகதாஸ் கூட்டணியில் கத்தி என்று மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. இது என்னை போன்ற அணைத்து விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துவந்தது. அதனால் கத்தி படத்தின் ஒவ்வொரு தகவல்களையும் ஆவலாக படித்து வந்தேன். ஆனால் சமீபத்தில் அதை பற்றி வந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அது உங்கள் கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர் இலங்கையில் பல தமிழ் மக்களை கொன்றுகுவித்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதாகும். இது விஜய்க்கு தெரிந்தோ தெரியாலமலோ நடந்திருக்கலாம் அது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் இப்போது ஈழத்தமிழர்களால் அவர் இலங்கை அரசுக்கு நெருங்கியவர் என்பதற்கு ஆதாரம் தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. இப்போதும் விஜய் அமைதியாக இருப்பது நல்லது இல்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAoCm4qWZ5vSLNxRaAdtx9R3YvGBdcRX5zo5YUxwmm_yeUzMqDxL-IiRvvxVisQI1gKzSqdr18hyphenhyphenxZtSbdylhitBOdpTuOSrUABKPzhlOtTREjUhANKYuUjimIVRppmLxxjHL98tFK9A/s1600/kaththi11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAoCm4qWZ5vSLNxRaAdtx9R3YvGBdcRX5zo5YUxwmm_yeUzMqDxL-IiRvvxVisQI1gKzSqdr18hyphenhyphenxZtSbdylhitBOdpTuOSrUABKPzhlOtTREjUhANKYuUjimIVRppmLxxjHL98tFK9A/s1600/kaththi11.jpg" height="400" width="241" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<br />
<br />
விஜய் அண்ணா...<br />
<br />
உங்களை ரசிக்கும் பல தமிழ் மக்களில் நானும் ஒருவன் என்னை போன்று உங்களுக்காக பல தமிழ் மக்கள் உங்களுக்காகவும் உங்கள் வெற்றிக்காகவும் உழைதிருகிறார்கள் அத்தகைய நல்ல உள்ளங்களை நீங்கள் புண் படுத்தலாமா? இந்த படத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஒரு வெற்றி தான் உங்களை இந்த சினிமா உலகில் உயர்த்தி விட போகிறதா? தொடர்ந்து 5 தோல்விகள் கொடுத்தும் உங்களை ஆதரித்திருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். இன்னும் உங்களிடம் அவர்கள் தொடர்ந்து வெற்றியை மட்டுமே எதிர்பார்கவில்லை நீங்கள் படம் நடித்தால் மட்டுமே அதை பார்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது அத்தகைய அன்பு ;உள்ளங்களை ஒரு வெற்றி படத்திற்காக நீங்கள் புண்படுத்துவது நியாயம் ஆகாது? இணையங்களில் வரும் உண்மை தான் என்றால் உடனடியாக நீங்கள் அந்த படத்தின் தயாரிப்பை வேறு ஒருவரின் கைக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் அப்படி முடியவில்லை என்றால் படத்தை விட்டு விலகுங்கள். உங்களுக்கு இழப்பு ஒரு படம் மட்டுமே ஆனால் நீங்கள் அப்படி செய்தால் கோடிகணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களை நீங்கள் அடைவீர்கள் இத்தனை நாள் உங்களை தவறாக பேசிய உங்கள் எதிர்பாளர்களும் உங்களை நேசிக்க இது வழி வகுக்கும். ஒரு படத்தை இழந்து இவை அனைத்தையும் அடையலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV0XDJA7s4JdJ6tICXUriALI41nsyrif-OUBRXyIMoRw4dbo_Eo0u6tRzZkBEXqqkuI-QJ3r8xRYvOg5ElHhjpmFkFqwOw8FLkKubQnzCphkzVxRj8zAXMaQ7NifOArzFl37-tlrtTxg/s1600/vijay_armurugadoss.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMa1AeEc7jvAMtloEH4Z-TjcQto0t3YCsOcsPxcHJBlrnOpumvXg5VEF0oPE94ms50NVHx-4OyqkMx16uwkRiifvegkkgfo21wDP2-tmSk7KAyONk6he_LQ6EG69rzx1iLrcK8Jq2Khw/s1600/26thuppaki.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMa1AeEc7jvAMtloEH4Z-TjcQto0t3YCsOcsPxcHJBlrnOpumvXg5VEF0oPE94ms50NVHx-4OyqkMx16uwkRiifvegkkgfo21wDP2-tmSk7KAyONk6he_LQ6EG69rzx1iLrcK8Jq2Khw/s1600/26thuppaki.jpg" height="400" width="303" /></a></div>
<br />
<br />
அப்படி இல்லாமல் ஒரு வெற்றி படம் தான் உங்களுக்கு முக்கியம் என்றால் பல தமிழ் ரசிகர்களை இழக்க நேரிடும். அந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தொடர்ந்து அந்த படத்தில் நடிப்பது எங்களின் மனதை புண் படுத்துவதற்கு சமம். சிந்தியுங்கள் உங்கள் மனைவி ஒரு இலங்கை தமிழச்சி என்பதை தெரிந்தபோது நான் மகிழ்ச்சியடைதேன். நான் ஏன் இலங்கை தமிழருக்கு அதரவாக பேச வேண்டும் என்று அஜித் போன்ற சில நடிகர்கள் கேட்டதற்கு மத்தியில் நீங்கள் தமிழருக்காக கூட்டம் போட்டு இலங்கை அரசை பார்த்து சவால் விட்டபோது நான் பெருமையடைந்தேன். ஆனால் இன்று என்னவாயிற்று ஏன் இந்த தயக்கம் முருகதாசின் ஒரு படத்தை மட்டும் நம்பி நீங்கள் இல்லை. உங்களுக்காக கோடிகணக்கான ரசிகர்கள் இருகிறார்கள். அவர்களின் மனதை புரிந்து செயல்படுங்கள். அமைதியாக இருந்து எதிர்கொள்வதற்கு உங்களின் எதிரிகள் உங்களை எதிர்கவில்லை மாறாக உங்கள் ரசிகர்கள் உங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்கிறார்கள். இப்போதும் அமைதி காப்பது ரசிகர்களை அவமானபடுத்தும் செயல். உங்களை நாங்கள் இலங்கைக்கு எதிராக போராட சொல்லவில்லை தமிழரின் உணர்வுக்கு எதிராக செயல் படாதீர்கள் என்று தான் சொல்கிறோம். இது என்னை போன்ற பல ரசிகர்களின் ஆசை.<br />
<br />
நிறைவேற்றுங்கள் அண்ணா இல்லையெனில் உங்களின் ஒரு ரசிகனை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று நினைத்துகொள்ளுங்கள். நான் ஒருவன் உங்களை எதிர்த்தால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வரபோவது இல்லை ஆனால் என்னை போன்ற பல ரசிகர்கள் உங்களுக்கு இருகிறார்கள் அவர்கள் அனைவரும் இதே முடிவை எடுத்தால் உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனை சிந்தித்து பாருங்கள் இது உங்களை மிரட்டி அடிபணியவைக்கும் முயற்சி இல்லை உங்கள் ரசிகர்களின் அன்பு வேண்டுகோள் நிறைவேற்றுங்கள் அண்ணா...<br />
<br />
உங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்...<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhziJllX_VJbNyjMOZZbZ6ZkIAqLdqUVcF9-rAh52ljLIn4tic4vBfyc05zoXXUjOstBqBncAhIdcAI6iWW0kDl2pIrGD_ZrVNzBOvDoxKxJ72hYXbYAujAnGbavYWt9bsnbhHY6P5L6A/s1600/30mp_mamp_murugados_796039e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhziJllX_VJbNyjMOZZbZ6ZkIAqLdqUVcF9-rAh52ljLIn4tic4vBfyc05zoXXUjOstBqBncAhIdcAI6iWW0kDl2pIrGD_ZrVNzBOvDoxKxJ72hYXbYAujAnGbavYWt9bsnbhHY6P5L6A/s1600/30mp_mamp_murugados_796039e.jpg" height="320" width="298" /></a></div>
<br />
முருகதாஸ் சார் ஏழாம் அறிவில் நீங்கள் காட்டிய தமிழ் உணர்வுகள், தமிழ் உணர்ச்சி வசனங்கள், ஈழத்தமிழருக்கு ஆதரவான வசனங்கள் அனைத்தும் அந்த படம் ஓட வேண்டும் என்பதற்காக என்று நிருபித்துவிடீர்களே. உங்களின் என்னதிர்காகவே தான் அந்த படம் நீங்கள் நினைத்தது போல சரியாக போகவில்லை.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com59tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-53696487195384376842014-03-30T00:07:00.002-07:002014-03-31T01:22:17.218-07:00மாணவனின் உயிரை பலி வாங்கிய கல்வி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<span style="font-size: large;">செ</span>ல்வங்களில் அழிக்க முடியாத செல்வம் கல்விச்செல்வம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. என்று கல்வியின் முக்கியத்துவத்தை பலரும் பலவிதமாக சொல்லியிருகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியரை வைத்து போற்ற வேண்டும் என்று சொல்லியிருகிறார்கள். இத்தகைய சிறப்புகளை கொண்ட கல்வியும், அதனை கற்றுத்தரும் ஆசிரியர்களும் இன்று உதவுவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அல்ல அவர்களின் இறப்புக்கு தான். கடந்த சில வருடங்களில் கல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்களில் எனது நண்பனும் ஒருவன். அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ஆனால் அவன் நம்பிய சிவனோ முருகனோ அவனை காப்பாற்றவில்லை. அவன் நம்பிய கடவுளே அவனை கைவிட்டபோது நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று இயேசுவும் அல்லாவும் நினைத்துவிட்டார்கள் போல கடவுளர்களுக்குள் காப்பாற்றாமல் விடுவதில் போட்டி நடந்திருகிறது வென்றது யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சென்றது ஒரு உயிர்.<br />
<br />
தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளுக்காக யார் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் சிலர். ஆம் அவன் கோழை தான் தான் செய்த தவறுக்காக பிறருக்கு தண்டனை கொடுக்கும் பிறர் உயிரை கொல்லும் வீரர்களுக்கு மத்தியில் பிறர் செய்த தவறுக்காக தனக்கு தண்டனை கொடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட அவன் கோழை தான். பாவம் மற்றவருக்கு தீங்கு செய்ய தெரியாதவன் அவன் ஒருவேளை தனக்கு மன உளைச்சலை உண்டாக்கிய அந்த ஆசிரியரை அவன் கொலை செய்திருந்தால் அவனை வீரன் என்று சொல்லியிருப்பார்களோ??? அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை அப்போது அவனுக்கு கிடைத்திருக்கும் பெயர் கொலைகாரன் கற்று கொடுத்த ஆசிரியரை கொன்ற பாவி மகா கொடூரன் என்ற பெயர்கள் அவனுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவன் தன்னையே கொலை செய்து நல்லவன் ஆகிவிட்டான். கொலை செய்பவரை விட அதற்க்கு காரணமாக இருப்பவருக்கு தான் தண்டனை அதிகம் என்று சொல்கிறது நம் நாட்டு சட்டம். எனது நண்பன் தன்னையே கொலை செய்துகொண்டதற்கு காரணமாக அமைந்த அந்த மதிற்பிற்குரிய ஆசிரியருக்கு தண்டனை தருமா இந்த சட்டம்.? நீதியும் சட்டமும் ஏழைகளுக்கு இல்லை என்பது போல மாணவர்களுக்கும் இல்லை என்றாகிவிட்டது.<br />
<br />
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்கிறார்கள் ஆனால் இளைஞர்களின் எதிர்காலம் இன்று ஆசிரியர்களின் கையில் இருக்கிறது. கையில் இருக்கிறது என்பதை விட அவர்களின் கால்களில் உதை படும் பந்தாக இருக்கிறது அதை வைத்து அவர்கள் கால்பந்து விளையாடிகொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கோல் என்று நினைப்பது எதிர்காலத்தை வளமாக்குவது அல்ல மாறாக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது தான். தான் காலில் இருக்கும் பந்தை இத்தனை தடவை கோல் அடித்திருக்கிறேன் என்று ஒரு விளையாட்டு வீரன் பெருமை கொள்வது போல தன் காலில் இருக்கும் இத்தனை பேரின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளேன் என்று எண்ணி பெருமை கொள்கிறார்கள் ஆசிரியர்கள். அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை அப்பாவி மக்களிடம் காட்டி பெருமை கொள்வது போல ஆசிரியர்கள் தங்களின் அதிகாரத்தை மாணவர்களின் மீது காட்டி பெருமை கொள்கின்றனர்.<br />
<br />
ஒரு பரிட்சையில் தோல்வி என்பதற்காக தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைகிறார்கள் சிலர். மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளை காண்கிறான் ஆனால் கல்வியில் தோல்வி என்பதனால் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அளவுக்கு உள்ளது இன்று மாணவர்களின் மனநிலை என்பது இன்று தற்கொலை செய்துகொள்பவர்களில் அதிகபடியானவர்கள் மாணவர்கள் என்ற புள்ளிவிவரத்தை பார்க்கும் போது தெரிகிறது. ஏன் அவர்கள் அப்படி நினைகிறார்கள் அவர்களை அப்படி நினைக்க வைத்தது யார் என்று பார்த்தல் இந்த சமுதாயம் தான். இந்த சமுதாயம் தான் படிக்கவில்லை என்றால் வாழ்கையில் முன்னேற முடியாது உயிர் வாழ்வதற்கே படிப்பு அவசியம் என்ற என்னத்தை பெற்றோருக்கும் மாணவருக்கும் விதைத்துள்ளது. சமுதாயமும் பெற்றோரும் ஆசிரியரும் விதைத்த வினையை இன்று மாணவர்கள் அறுத்துக்கொண்டு இருகிறார்கள். ஆம் அவர்களின் எதிர்காலம் தூக்கு கயிறுகளில் அறுபட்டு கொண்டிருகிறது. படிக்காத மேதைகளான காமராஜர்களை அதிகம் பார்த்த இந்த இந்தியாவில் இத்தகைய நிலை இருப்பது அவமானத்திற்குரியது. நன்றாக வாழ்வதற்கு அனைவருக்கும் தேவை தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் ஆனால் இன்றைய கல்வி சமூகம் அதை பிஞ்சிலேயே சிதைத்து கொண்டிருகிறது.<br />
<br />
எட்டு கல்வி கறிக்குதவாது என்பது பொன்மொழி எட்டுகல்வி சாவுக்கு உதவும் அன்று ஒரு புது மொழியை எழுதுங்கள். ஆம் புதிதாக சிந்திப்பவர்களுக்கும் ஆக்கபூர்வமான எண்ணம் உள்ளவர்ககுக்கு இல்லை இன்றைய கல்வி மனப்பாடம் செய்யும் திறமை படைத்தவருக்கு மட்டுமே இன்றைய கல்வி. சிறு வயதிலேயே பள்ளிகூடங்களில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை முடக்குகிறார்கள். நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்யவேண்டும் என்று கட்டளைக்கு அடிபணியும் அடிமை போலவும் கமெண்டுகளுக்கு கீழ்படிந்து வேலை செய்யும் ரோபா போலவும் இருக்க சொல்கிறார்கள். இன்று பள்ளிகூடங்கள் கல்லறைகலாகவும் சிறை சாலையாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு மாணவனின் தற்கொலையின் போதும் இந்த குற்ற சாட்டு எழுகிறது ஆனால் பெற்றவருக்கு உறைப்பதில்லை மீண்டும் அந்த சிறை சாலையை தேடி தான் போகிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே நகல் (copy) எடுத்து தேர்வி விடைத்தாளில் ஒட்ட(paste) வேண்டும். அத்தகைய சிறந்த ஜெராக்ஸ் இயந்திர வேலைய செய்பவன் தான் சிறந்த பிள்ளையாக பெற்றோராலும் சிறந்த மாணவனாக ஆசிரியராலும் பார்க்கபடுகிறான். அவர்களை பொறுத்தவரையில் மாணவன் திருக்குறளை படிக்க வேண்டும் என்று தன நினைகிறார்களே தவிர புதிய திருக்குறளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.<br />
<br />
இன்றைய கல்வி முறையும் வாழ்கையின் வெற்றிக்கு தேவை என்ன என்பதையும் இந்த சமுதாயம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சரியான முறையில் தெளிவான சிந்தனையுடன் அணுகும் அவரை இப்படியான தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்துகொண்டே தான் இருக்கும். அதுவரை பாதிக்கப்படபோவது எனது நண்பனை போன்ற அப்பாவி மாணவர்கள் தான். </div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-79145907872136345522014-03-21T05:25:00.000-07:002014-03-21T22:38:01.257-07:00அஜித் படங்களும் நானும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: large;">நா</span>ன் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித் என்ற பெயர் தான் என் காதுகளில் முதலில் ஒலித்த பெயர் அதற்கு பின்னர் தான் விஜய் என்ற பெயர் ஒலித்தது. அதற்கு காரணம் உண்டு எனது மாமா தீவிர அஜித் ரசிகர் அதனால் அவரது வீட்டில் அடிகடி அஜித் பாடல்கள் கேட்கும். அமர்க்களம் பாடல்களை நான் சிறு வயதில் பல தடவை கேட்டிருக்கிறேன். அதிலும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் இப்போதும் எனக்கு பிடித்த ஒன்று அந்த பாடலில் எஸ்.பி.பி குரலை விடவும் இன்னொரு ஸ்பெஷல் எனக்கு என்னவென்றால் அந்த பாடல் படமாக்கப்பட்டது எங்கள் ஊர் செஞ்சியில் உள்ள ராஜா கோட்டையில் தான். அது செஞ்சிகோட்டை என்றும் அழைக்கப்படும்.<br />
<br />
இப்படியாக அஜித்தின் புது படம் எது வந்தாலும் நான் பார்க்கும் வாய்ப்பு என் மாமா மூலம் ஏற்ப்படும். அது ஏனோ எனக்கு அஜித்தின் படங்கள் பெரும்பாலும் பிடிக்காமல் போயவிட்டன அதற்கு காரணம் நான் முதலில் பார்த்த அஜித் படங்கள் ஜனா, ஜி, ராஜா, ஆஞ்சநேயா போன்ற மொக்கை படங்களை தான். பிறகு தான் காதல் கோட்டை வாலி போன்ற படங்களை பார்க்க முடிந்தது ஆனால் என்னுடைய முதல் அஜித் பட அனுபவங்கள் அவற்றை அஜித் பக்கம் சாயாமல் வைத்திருந்தது. நான் விஜய் ரசிகனாக மாறியதற்கு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களை முதலில் பார்த்ததனால் கூட இருக்கலாம்.<br />
<br />
நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித்தின் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuLFyrZ8_nulr7slZSoIegUWMivnD1qi5ymmeTR5-ZBW6DYJMnS3AF0ib02oyRYnwL_NaflWXTKqOo_9kqUNwRqd-OIOJBIMVUpQcLWBySl-VdD144q2LrvPnPI97ahleFgwBLEOOG0A/s1600/ajith2.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuLFyrZ8_nulr7slZSoIegUWMivnD1qi5ymmeTR5-ZBW6DYJMnS3AF0ib02oyRYnwL_NaflWXTKqOo_9kqUNwRqd-OIOJBIMVUpQcLWBySl-VdD144q2LrvPnPI97ahleFgwBLEOOG0A/s1600/ajith2.gif" height="358" width="400" /></a></div>
<br />
<br />
<br />
நான் பார்த்த முதல் அஜித் படம்: <u><b>அமர்க்களம் </b></u><br />
<br />
எனக்கு பிடித்த அஜித் படம்: <u><b>பில்லா </b></u><br />
<br />
எனக்கு பிடிக்காத அஜித் படம்: <u><b>ரெட் </b></u><br />
<br />
முதன் முதலில் தியேட்டரில் பார்த்த அஜித் படம்: <u><b>பில்லா </b></u><br />
<br />
கடைசியாக பார்த்த அஜித் படம்: <u><b>வீரம்</b></u><br />
<br />
இந்த படம் ஏன் ஓடவில்லை என்று நினைத்த அஜித் படம்: <u><b>கிரீடம் </b></u><br />
<br />
இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த அஜித் படம்: <u><b>ஆரம்பம்</b></u><br />
<br />
அஜித் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: <u><b>ஏகன்</b></u><br />
<br />
அஜித் ஏன் இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: <u><b>கஜினி</b></u><br />
<br />
அஜித்தின் ஸ்டைலை ரசித்த படம்: <u><b>பில்லா </b></u><br />
<br />
அஜித் படத்தில் பிடித்த பாடல்: <u><b>ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்.</b></u></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-79981749134795584892014-03-18T02:33:00.000-07:002014-03-18T02:33:30.617-07:00விஜய் படங்களும் நானும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: large;"><b>மு</b></span>தலில் ரஜினி ரசிகனாக இருந்த எனக்கு காதலுக்கு மரியாதை பார்த்த பின் விஜய் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. முதலில் விஜய் பாடல்களின் ரசிகனாக பின் விஜயின் படங்களுக்கு ரசிகனாக அதன் பின்னர் விஜயின் ரசிகனாக படிப்படியாக மாற்றம் அடைந்தேன். என் காதல் வாழ்கையில் விஜயின் பாடல்கள் முக்கிய பங்கு வகித்தன. கில்லி படத்தின் மூலம் அவரின் தீவிர ரசிகனாக மாறினேன். கில்லி படம் வந்தபோது தான் எங்கள் பள்ளியில் கபடி விளையாட்டு மிக பிரபலம் அடைந்தது. எனக்கும் படம் பார்த்த பின் கபடி மீது ஆர்வம் வந்தாலும் அதற்கு என் உடல் அனுமதிக்காததால் விளையாடவில்லை. போக்கிரிக்கு பின் கையில் கர்சிப் கட்டிக்கொண்டு சுற்றியவனில் நானும் ஒருவன்.<br />
<br />
பள்ளியில் விஜய் படம் போட்டிருந்த கைகடிகாரத்தை கையில் கட்டியிருந்தேன். அதை பார்த்த ஒரு ஆசிரியர் இவர் காசுக்காக நடிக்கிறார் அதை நீ காசு கொடுத்து பார்ப்பது மட்டுமில்லாமல் அவர் படம் போட்ட கை கடிகாரத்தை வேறு அணிந்திருக்கிறாய் நாளை அதை கழட்டி விட வேண்டும் என்றார். அவர் படத்துக்கு கொடுக்கும் காசை நான் உங்களுக்கு தருகிறேன் உங்களால் அவரை போல 3 மணி நேரம் என்னை எல்லாவற்றையும் மறக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா என்று கேட்க தோன்றியது அனால் அப்போது எனக்கு ஆசிரியர் மீதுள்ள பயத்தால் கேட்க முடியவில்லை மனதோடு வைத்துகொண்டு வீட்டில் இருகொம்போது மட்டும் வாட்சை கட்டிகொண்டேன் பள்ளி செல்லும்போது கழட்டி விடுவேன்.<br />
<br />
இப்படியாக என வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் விஜய் அவர் படங்களை பற்றிய என எண்ணங்களை பதிவு செய்யவே இந்த பதிவு. பதிவுக்கு செல்லலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtObIhSxU_LFWsaV4OtA1R6lshPJIIYmKR9IfbRPVNh20VHSTIWlnvLWTl7wGYs0MZFxZG3NMILaSq8nOynULj4ez2AOTQ2V9-eISN6JS8bK_QfY62Oci2TYUhr_BMA3TX-tr74tJ2Fw/s1600/122fdef6-4823-4d1c-8fbe-97887648d1af1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtObIhSxU_LFWsaV4OtA1R6lshPJIIYmKR9IfbRPVNh20VHSTIWlnvLWTl7wGYs0MZFxZG3NMILaSq8nOynULj4ez2AOTQ2V9-eISN6JS8bK_QfY62Oci2TYUhr_BMA3TX-tr74tJ2Fw/s1600/122fdef6-4823-4d1c-8fbe-97887648d1af1.jpg" height="266" width="400" /></a></div>
<br />
<br />
முதலில் நான் பார்த்த விஜய் படம்: <u><b>பூவே உனக்காக</b></u> <br />
<br />
முதன் முதலில் தியேட்டரில் பார்த்த விஜய் படம்: <u><b>போக்கிரி </b></u><br />
<br />
கடைசியாக பார்த்த விஜய் படம்: <u><b>ஜில்லா </b></u><br />
<br />
எனக்கு பிடித்த விஜய் படம்: <u><b>நண்பன் </b></u><br />
<br />
எனக்கு பிடிக்காத விஜய் படம்: <u><b>சுறா </b></u><br />
<br />
இந்த படம் இன்னும் ஓடியிருக்கலமே என்று நினைத்த விஜய் படம்: <u><b>சச்சின் </b></u><br />
<br />
இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த விஜய் படம்: <u><b>சிவகாசி </b></u><br />
<br />
விஜய்க்காக மட்டுமே பார்த்த படம்: <u><b>ஜில்லா </b></u><br />
<br />
விஜய் இருந்தும் பார்க்க முடியாத படம்: <u><b> நெஞ்சினிலே </b></u><br />
<br />
விஜய் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: <u><b>குருவி </b></u><br />
<br />
விஜய் ஏன் இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்:<br />
<u><b>சிங்கம்,முதல்வன் </b></u><br />
<br />
நல்லவேளை இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: <u><b>ராஜபாட்டை</b></u><br />
<br />
விஜயின் ஸ்டைலை ரசித்த படம்: <u><b>போக்கிரி </b></u><br />
<br />விஜய் படத்தில் பிடித்த வசனம்: <u><b>வாழ்க்கை ஒரு வட்டம்...</b></u><br />
<br />
விஜய் படத்தில் பிடித்த பாடல்: <u><b>மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்..</b><b>.</b></u><br />
<br />
விஜய் பாடியதில் பிடித்த பாடல்: <u><b>கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு</b></u> </div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com45tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-44069576233127564902014-03-15T05:38:00.004-07:002014-03-15T06:09:23.198-07:00ரஜினி படங்களும் நானும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: left;">
<span style="font-size: x-large;"><b>நா</b></span>ன் இப்போது விஜய் ரசிகனாக இருந்தாலும் எனக்கு முதலில் அறிமுகமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். நான் சிறு வயதாக இருக்கும்போது நான் அடிகடி வீட்டில் இல்லாமல் வெளியே சென்றுவிடுவேன். அதனால் என் அம்மா என்னை வீட்டில் இருக்க வைப்பதற்காக ரஜினி படம் ஓடுகிறது பார் என்று சொல்லி எதாவது படத்தை காட்டுவார்கள் நானும் பார்த்துகொண்டு இருப்பேன். என்னம்மா ரஜினி இன்னும் வரலன்னு கேட்டால் இப்போ வருவார் பாருடான்னு சொல்வாங்க நானும் இப்ப வருவார் அப்ப வருவார்னு பார்த்து பார்த்து முழு படத்தையும் பார்த்துவிடுவேன். என்னம்மா படமே முடிந்துவிட்டது இன்னும் வரலன்னு கேட்டால் நீ ரஜினி படம்னு சொன்னால் தான் வீட்டில் இருப்பாய் அதனால் சொல்லி பார்க்க வைத்தேனு சொல்வாங்க அப்போது எனக்கு அவர்கள் மீது கோபம் வரும் ஆனால் ஒன்றும் பண்ண முடியாது அம்மா அல்லவா அவர்கள்....</div>
<br />
அப்படிப்பட்ட ரஜினியின் படங்களை பற்றிய என்னுடைய எண்ணங்களை பதிவு செய்ய நினைத்தான் விளைவு தான் இது. இனி பதிவுக்கு போகலாம்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_BHEP_K6jEHzk2GyCG3DDpW8VGAxyqFwTm09U_iS-c6J__kViX55fU-muv-vhQUaiJlddC_na4GaC-HTc4Xsq326seVInaz462C9MuzyCoQCvIz1miJLXLpCLzwsvvbn6gPozAaE4yQ/s1600/padayappa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_BHEP_K6jEHzk2GyCG3DDpW8VGAxyqFwTm09U_iS-c6J__kViX55fU-muv-vhQUaiJlddC_na4GaC-HTc4Xsq326seVInaz462C9MuzyCoQCvIz1miJLXLpCLzwsvvbn6gPozAaE4yQ/s1600/padayappa.jpg" height="285" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl8ELrhWVSWQLew85O0jB6cQ2iAglKnp82QUwv-y4flxtLpGgRszxarQsN0qyR2CzMqeWXIpfVKFryaPyexYXJmK1yBWY1LnQUErf-bCQLYiD-IlI3hBPMFabRk7_rHcr_X-nnE7CxFw/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<br />
<br />
முதன் முதலில் நான் பார்த்த ரஜினி படம்: <u><b>மனிதன் </b></u><br />
<br />
முதன் முதலில் நான் தியேட்டரில் பார்த்த ரஜினி படம்: <u><b>அருணாச்சலம்</b> </u> <br />
<br />
எனக்கு பிடித்த ரஜினி படம்: <b><u>பாட்ஷா </u></b><br />
<br />
எனக்கு பிடிக்காத ரஜினி படம்: <b><u>ஸ்ரீ ராகவேந்திரா </u></b><br />
<br />
ரஜினிக்காக மட்டுமே பார்த்த படம்: <b><u>தளபதி </u></b><br />
<br />
ரஜினி இருந்தும் பார்க்க முடியாத படம்: <b><u>பாபா </u></b><br />
<br />
ரஜினி ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: <b><u>குசேலன் </u> </b><br />
<br />
ரஜினி இந்த படத்தை ஏன் நிராகரித்தார் என்று நினைத்த படம்: <b><u>முதல்வன் </u></b><br />
<br />
நல்லவேளை இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: <u><b>வரலாறு </b></u><br />
<br />
ரஜினி இந்த படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த படம்: <u><b>இந்தியன் </b></u><br />
<br />
ரஜினியின் ஸ்டைலை அதிகம் ரசித்த படம்: <u><b>படையப்பா </b></u><br />
<u><b></b></u><br />
ரஜினி படத்தில் பிடித்த பாடல்: <b><u>காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே </u></b><br />
<u><b><br /></b></u>
எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத முதல் ரஜினி படம்: <u><b>கோச்சடையான்</b></u><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinRG1QnvLEH1eeZFm9ciWi_8sAf_RZU2yorDDLFUtt2yDv5kjqRT95B6Mv3-2TQCC7rpXRjPe4IE1rS3jUkcQah1QwSmvlQIj-h2TaYMJwGq-5eazT0Wfly03w-OYj8YEKjpL4fBv_9A/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinRG1QnvLEH1eeZFm9ciWi_8sAf_RZU2yorDDLFUtt2yDv5kjqRT95B6Mv3-2TQCC7rpXRjPe4IE1rS3jUkcQah1QwSmvlQIj-h2TaYMJwGq-5eazT0Wfly03w-OYj8YEKjpL4fBv_9A/s1600/maxresdefault.jpg" height="238" width="400" /></a></div>
<br />
<br />
அடுத்த பதிவில் விஜய் படங்களை பற்றி பார்க்கலாம்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-38311503591653532392014-02-21T23:09:00.002-08:002014-02-21T23:09:53.267-08:00அஜித்=காமெடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இங்கு நான் எழுத இருப்பவை எனக்கு அஜித் பற்றி எஸ்.எம்.எஸ்-ல் வந்த ஜோக்குகள் ஒரு சிலவை எனக்கே தோன்றியவை இதோ உங்களுக்காக எழுதுகிறேன் இதை நகைச்சுவையாக மட்டும் பார்க்கவும். தீவிர அஜித் ரசிகர்கள் இதை படிக்க வேண்டாம். பின் படித்துவிட்டு தலடா,வாலுடா, காலுடா... நு கத்த கூடாது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJwy95xnZXE9vh6R58yaK1eD9_BnmrNgWyjsBWSdnwC57AYys8pHgNNtw28VYphYwMdQnBOyjAnC0BD2xVdghJbZbJ047LUz8lBlk6_0KXmrhqcao7QYQ4UnAViML9VZLI_BnywX2SiQ/s1600/AuDOd3VCEAEcAkj.jpg+large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJwy95xnZXE9vh6R58yaK1eD9_BnmrNgWyjsBWSdnwC57AYys8pHgNNtw28VYphYwMdQnBOyjAnC0BD2xVdghJbZbJ047LUz8lBlk6_0KXmrhqcao7QYQ4UnAViML9VZLI_BnywX2SiQ/s1600/AuDOd3VCEAEcAkj.jpg+large.jpg" height="300" width="400" /></a></div>
<br />
<br />
<b>அஜித்</b>: நீ வன்னியனு நெனச்சா நான் வன்னியன் தலித்துன்னு நெனச்சா தலித்....( வீரம்)<br />
<br />
<b>கவுண்டமணி:</b> அப்ப நாங்க ஆம்பளைன்னு நெனச்சா ஆம்பள பொம்பலனு நெனச்சா பொம்பள அலினு நெனச்சா அலியா???... வசனத்த பாரு வெள்ள தலையா.....<br />
<br />
<br />
<b>அஜித்:</b> <span style="font-size: large;">money... money...money...<span style="font-size: small;">(மங்காத்தா)</span></span><br />
<br />
<b>கவுண்டமணி:</b> நாயே<b> </b>எடுக்கறது பிச்ச இதுல இங்கலிசு வேறயா?.... பேசுவியா... பேசுவியா...<br />
<br />
<br />
<br />
<b>அஜித்:</b> என்ன தாஆஆண்டி போகணும்...(வீரம்)<br />
<br />
<b>கவுண்டமணி: </b>நாயே நீ என்ன சாக்கடையா உன்ன தாண்டி போறதுக்கு???<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvu-65yv_O6ESvZETRPSiYvVlhein0WtkB0Fe3u213lkk4X2R5bQZaRVHurMJH9PFInVHbZ1AWBQUTJE6g91_gw5hfMPh9D_pMPTmq6UgAsY50dMGR5X8t688PTcP2jAxI5QgzckN_yw/s1600/hqdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvu-65yv_O6ESvZETRPSiYvVlhein0WtkB0Fe3u213lkk4X2R5bQZaRVHurMJH9PFInVHbZ1AWBQUTJE6g91_gw5hfMPh9D_pMPTmq6UgAsY50dMGR5X8t688PTcP2jAxI5QgzckN_yw/s1600/hqdefault.jpg" height="300" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<b>அஜித்:</b> எவ்வளவு டெக்னாலாஜி முன்னேறனாலும் கடைசில கை நாட்டு தானா?(ஆரம்பம்)<br />
<br />
<b>கவுண்டமணி: </b>பின்னா<b> </b>2-வது பெயில் ஆன கை நாட்டு தான் வைக்க சொல்லுவாங்க... வச்சிட்டு போ நாய வசனம் பேசாத....<br />
<br />
<br />
<br />
<br />
<b>விதார்த்: </b>அண்ணன்( அஜித்) மொத<b> </b>தடவ கன்னடிய பார்த்து தலவாருதுடா...(வீரம்)<br />
<br />
<b>சந்தானம்:</b> <b></b>அதெல்லாம்<b> </b>என்ன மூஞ்சினு அவன் அத கண்ணாடில பாக்க போறான்<b>...</b><br />
<br />
<br />
<b><br /></b>
<b><span style="font-size: small;">அஜித்:</span></b> சார் என்னோட வீரம் படத்த பத்தி சொல்லுங்க?<br />
<b><br /></b>
<b>மோகன்லால்:</b> உங்க படத்துக்கு வந்தா ஒன்னு ரணமாகி போகணும் இல்ல பொணமாகி போகணும்...<br />
<br />
<b>அஜித்:</b> ???<br />
<br />
<br />
<br />
<b>மோகன்லால்:</b>
டேய்... டேய்... நீ நூறு படம் பாத்துருக்கலாம் ஆயிரம் படம்
பாத்துருக்கலாம் ஆனா என்கிட்டே ஒரே படம் தான் இருக்கு... அஜித்தோட வீரம்
பாருடா பாக்கலாம்....<br />
<br />
<b>ரவுடி:</b> ???<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1iwDuu4uQuVmMFa4wyDuBpuPQnkGqUwG55CMuvwz5_InpFi1fQ_qtI510MIzVrAOgMJcfQ0Rn6UyXwn960qd2GZZAK5ueXJZc0_TABSUHvm_C7Y8dcyygHSsonJO3RLUrFmBH1vK_0g/s1600/1384375_621048681271411_23224983_a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1iwDuu4uQuVmMFa4wyDuBpuPQnkGqUwG55CMuvwz5_InpFi1fQ_qtI510MIzVrAOgMJcfQ0Rn6UyXwn960qd2GZZAK5ueXJZc0_TABSUHvm_C7Y8dcyygHSsonJO3RLUrFmBH1vK_0g/s1600/1384375_621048681271411_23224983_a.jpg" height="400" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<b><br /></b>
<b>அஜித்: </b>வீரம் படத்துல என்னோட டேன்ஸ் நல்ல இருந்துச்சு இல்ல...<br />
<b><br /></b>
<b>விஜய்: </b>???<br />
<br />
<br />
<br />
<b>கேள்வி: </b>அஜித் நல்லா நடிச்ச படம் எது?<br />
<br />
<b>சிட்டி ரோபோ:</b> <span style="font-size: large;">hypothetical question...</span><br />
<br />
<br />
<br />
<br /><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-12862740720922169242014-02-14T23:00:00.000-08:002014-02-14T23:10:02.834-08:00இது கதிர்வேலன் காதல்- காதலர் தின சிறப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
காதலர் தினத்தன்று அணைத்து காதலர்களுக்கும் பரிசளிக்கும் விதமாக ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு படமாக வந்திருகிறது கதிர் வேலன் காதல்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjouijwmwgNmwxRdHA_tQc3F0q7eXIpskvOInpFfWyIn0W7vdFewHZI0JeBDc_uu4OE3G1k_YAa6TsbNMMSSch22mrWmZchyphenhyphenXNspwjCRXBOnX5Ktyhz3Yi5fXwxaIzbF5FdbdxXXag0aw/s1600/35523_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjouijwmwgNmwxRdHA_tQc3F0q7eXIpskvOInpFfWyIn0W7vdFewHZI0JeBDc_uu4OE3G1k_YAa6TsbNMMSSch22mrWmZchyphenhyphenXNspwjCRXBOnX5Ktyhz3Yi5fXwxaIzbF5FdbdxXXag0aw/s1600/35523_1.jpg" height="300" width="400" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
மதுரையில் காதல் என்றாலே எதிர்ப்பு தெரிவிக்கும் பெரிய மனிதன். அவர் பெண்ணே காதல் செய்து திருமணம் செய்துகொள்ள அவரே அவரை அந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்துகொள்கிறார். அவருடைய மகன் தான் உதயநிதி ஸ்டாலின். காதலே வேண்டாம் என்று ஆஞ்சநேயர் பக்தனாக வாழ்கிறார். ஒரு நாள் காதலித்து வீட்டைவிட்டு சென்ற தனது அக்கா மீண்டும் வீட்டிற்கு வர என்ன பிரச்சனை என்று தனது அக்காவின் கணவரை கேட்க மதுரையில் இருந்து கோயம்பத்தூர் செல்கிறார். அங்கு அவரது நண்பரான சந்தானத்தை காண்கிறார். தனது மாமா வீட்டில் தங்கி என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். அப்போது மாமாவின் எதிர் வீட்டில் இருக்கும் நயன்தாராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சந்தானத்தின் உதவியுடன் அவரை பின் தொடர்கிறார். நயன்தாரா தவறான ஒருவருடன் பழகுவது தெரிந்து அவருக்கு தெரியபடுதுகிறார் பின் நயனுக்கும் இவர் மீது காதல் வருகிறது. உதயநிதி மாமாவிற்கும் நயன்தார குடும்பத்திற்கும் ஏற்கனவே பகை இருக்கிறது. இந்த பகையை மீறி இவர்களின் காதல் ஜெயித்ததா காதலை எதிர்க்கும் இவரது தந்தை சமாதானம் ஆனாரா என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருகிறார்கள். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் காதலை எதிர்க்கும் பெற்றோருக்கும் காதலருக்கும் காதலின் உண்மையை நகைச்சுவையாக விளக்கும் விதத்திலும் அதை காதலர் தினத்தன்று ரிலிஸ் செய்தவகையிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaoSXciKYjazgJR7lwoDo6xOjQHDSsZmHCBDRDEx4s5BsHXciiUi0mYQKSXjKmgcqpKlH9YIclhOzD5y9RMaub1IX-Ref6AJQyKmkqNWZdeDQKTTusKazHf3N0XgJKNotseDfB4iFa8A/s1600/17391753015.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaoSXciKYjazgJR7lwoDo6xOjQHDSsZmHCBDRDEx4s5BsHXciiUi0mYQKSXjKmgcqpKlH9YIclhOzD5y9RMaub1IX-Ref6AJQyKmkqNWZdeDQKTTusKazHf3N0XgJKNotseDfB4iFa8A/s1600/17391753015.jpg" height="400" width="300" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
உதயநிதி ஸ்டாலின் தனது முந்தைய படத்தை விட சற்று சிறப்பாக செய்துள்ளார். தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து கதை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் இவரின் பலம். நடிக்க வராத சில காட்சிகளில் கண்ணாடி போட்டு சமாளித்துள்ளார் அதையும் இந்த படத்திலேயே சந்தானம் சொல்லி கலாய்ப்பது ரீலில் காமெடி. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
நயன்தாராவுக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளார். ஆனாலும் முகத்திலும் உடல் தோற்றத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. சில காட்சிகளில் பார்பதற்கு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார். அவரது சொந்த வாழ்கையில் சிலரை நம்பி ஏமாந்ததையே இயக்குனர் கதையாக வைத்துள்ளதால் நடிக்க ஒப்புகொண்டார் என்று நினைக்கிறேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
சந்தானம் வழக்கம் போல படத்தின் வெற்றிக்கு பெருமளவு துணையாக உள்ளார். ஹீரோ ஹீரோயின் ஒபெநிங் கட்சியை விட இவரது ஒபெநிங் காட்சிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பும் கைதட்டலும் கிடைத்தது. கண்ணாடியை அடிக்கடி சரி செய்யும் அவரது மேனரிசம் நன்றாக உள்ளது.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
உதயின் மாமாவாக நடித்த நபர் அவரது காதலி கல்யாணத்திற்கு முன் இருந்தது கல்யாணத்திற்கு பின் இருந்தது பற்றி கூறும்போதும் தனக்கும் எதிர் வீட்டிலிருக்கும் தனது சித்தப்பாவுக்கும் உள்ள பகையை கூறும் காட்சியிலும் ஈர்கிரார். மயில் சாமி சில காட்சிகள் வந்தாலும் நன்றாக சிரிப்பூட்டுகிறார். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
ஹாரிஸ் வழக்கம்போல தன் வேலையை செய்திருக்கிறார். பாடல்கள் சில நன்றாக இருந்தாலும் படம் பார்பதற்கு இடையூறாக உள்ளது போல தோன்றியது. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<b><br /></b></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<b>மொத்தத்தில் காதலர் தினத்தில் காதலர்களுக்கு பரசாக வந்துள்ள காதலர் தின சிறப்பு இந்த கதிர்வேலன் காதல்...</b></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<b>எனது மதிப்பெண்: 55/100</b></div>
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-88997703667253206032014-02-14T22:18:00.002-08:002014-02-14T22:19:49.898-08:00அண்ணா பல்கலை மாணவர்களால் கௌரவிக்கப்பட்ட இளையதளபதி விஜய்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
சென்னை அண்ணா பல்கலைககழகத்தில் நடந்த Techofes’2014 விழாவில், தலைவா
படத்தில் சிறப்பாக நடித்த விஜய்க்கு சிறப்பு விருது கொடுத்து
கெளரவிகப்பட்டது. இந்த விருதை பெறுவதற்காக அண்ணா பல்கலைகழக வந்த விஜய்க்கு
மிகச்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.<br />
<br />
<br />
<a href="http://www.tamizhtv.com/wp-content/uploads/2014/02/231dbe659fad9400bd39c768a55cba33.jpg"><img alt="231dbe659fad9400bd39c768a55cba33" class="aligncenter size-full wp-image-2079" height="400" src="http://www.tamizhtv.com/wp-content/uploads/2014/02/231dbe659fad9400bd39c768a55cba33.jpg" width="600" /></a><br />
<br />
<br />
பல்கலைக்கழக
வளாகத்திற்குள் விஜய் வந்தவுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆரவாரத்துடன்
விஜய்யை வரவேற்றனர். மிகப்பெரிய ரோஜா மாலையை மாணவர்கள் விஜய்க்கு வழங்கி
அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.<br />
<br />
<div style="float: left; margin: 0px 10px 5px 0px;">
<img height="1" src="http://tr1.myroitracking.com/newServing/tracking_id.php?d=serw.clicksor.com&r=http%3A%2F%2Fserw.clicksor.com%2FnewServing%2Ftracking_id.php%3Fb%3D1%26&gtruid=1" width="1" />
</div>
இந்த விழாவில் பேசிய விஜய், தலைவா படத்தினால் எனக்கு ஏற்பட்ட பயங்கர
மனக்காயத்துக்கு இங்கே மருந்து கிடைத்ததாக கூறினார். ‘தலைவா’ படம் வசூலில்
தோல்வி அடைந்தாலும், அந்த படத்திற்காக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் என்னை
கெளரவித்தது எப்படி இருக்கிறது என்றால் கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும்,
மேன் ஆப் த மேட்ச் கிடைத்தது போல எண்ணுகிறேன் என்று கூறினார்.<br />
<br />
<br />
thanks to http://www.tamizhtv.com </div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-55197197577100838562014-02-13T21:22:00.001-08:002014-02-14T22:19:24.676-08:00காதல் தவறா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGFYs3fD3miShpV9UffijgPqEEHwTJgMOZopnq1DVNvCc9h8lW3Mjoj2PLXbtLkvmof-2EdfaV5zpcCFMZ327LUnuUqUC0pp9pwEHBtsY8LyJaiEuglKauWvzGfoVn9PeAHxAg-N5s4A/s1600/heart.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGFYs3fD3miShpV9UffijgPqEEHwTJgMOZopnq1DVNvCc9h8lW3Mjoj2PLXbtLkvmof-2EdfaV5zpcCFMZ327LUnuUqUC0pp9pwEHBtsY8LyJaiEuglKauWvzGfoVn9PeAHxAg-N5s4A/s1600/heart.gif" height="257" width="400" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
காதல் தமிழரின் பாரம்பரியமாக இருந்துவரும் ஒன்று இதனை அகநானூறு பாடல்கள் மூலம் அறியலாம். அப்போது காதலிக்கும் ஆன் மகனை காவியதலைவனாகவும் பெண்ணை காவியதலைவியாகவும் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்று காதலிப்பவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது அவர்கள் வாழ்வதற்கே வழி இல்லை. சமீபத்தில் நடந்த இளவரசன் மரணம், வட இந்தியாவில் காதல் செய்த ஒரு பெண்ணை அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் கற்பழிக்குமாறு தீர்ப்பு விதித்தது போன்றவை அதற்கு சான்று. ஒரு பெண்ணை 13 பேர் சேர்ந்து கற்பழிக்குமாறு தீர்ப்பு சொன்ன அவர்களெல்லாம் ஊர் தலைவர்கள் அல்ல மனிதர்கள் என்றே சொல்லமுடியாது. மிருகத்திற்கு கூட அறிவு என்று ஒன்று இருந்தால் இதை செய்யாது அவர்கள் எல்லாம் மிருகத்தை விட கேவலமானவர்கள். இவர்கள் செய்த இந்த கேவலமான செயலுக்கு மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் காலாசாரம் என்ற பெயராலும் நியாயம் சொல்லும் சிலைரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
காதல் நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என்று சில விஷமிகள் சொல்லித்திரிகிறார்கள். பழைய நூல்களிலேயே சிலாகித்து எழுதப்பாட்டிருக்கும் ஒன்று எப்படி திடிரென்று ஏற்புடையது அல்ல என்று மாறிவிடும். இவர்களுக்கு பிடித்திருக்கும் சாதி வெறியும் மத வெறியும் காதல் என்ற ஒன்றரை தவறாக சொல்கிறது. காதல் திருமணங்கள் இவர்களின் போலியான சாதி என்ற கட்டமைப்பை உடைக்க கூடும் அதனாலேயே இவர்கள் காதலை தவாரானது என்று பெற்றோர்களுக்கும் சமுதாயத்தினருக்கும் காட்ட நினைகிறார்கள். அதற்கு சான்றாக மேலும் அவர்கள் சொல்வது காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அப்படியானால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் விவாகரத்து அடைவது இல்லையா? அதற்க்கு யாரை காரணமாக சொல்வது. அடுத்ததாக சொல்வது காதல் என்றாலே பொய்யாக தான் இருக்கிறது எல்லாம் காமத்திற்காக காதலித்து அது முடிந்தவுடன் விட்டுசெல்கின்ரனர். இதில் அடிப்படை ஒன்றை கவனிக்க வேண்டும் ஒரு பெண்ணின் உடல் அழகை பார்த்து ஆசைப்பட்டு அவளை அடைவதற்காக அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றுமே காதல் ஆகாது அது காதல் என்ற பெயரை சொல்லி அவர்கள் செய்யும் நாடகம் அதற்க்கு காதல்பொறுப்பாக முடியாது அதனால் காதல் தவறு என்று சொல்லமுடியாது. தவறான நோக்கில் ஒரு பெண்ணை மணந்து அவளை காசுக்காக விற்கின்றனர் சிலர் அவர்களின் அந்த கேவல செயலுக்கு திருமணம் என்ற பந்தத்தை பயன்படுத்துகின்றனர். இதற்காக திருமணம் பொய் தவறானது என்று சொல்லிவிட முடியுமா? </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
காதலர் தினத்தன்று காதலர்களை கஷ்டபடுதுவதர்காகவே ஒரு கும்பல் மதத்தின் பெயரையும் கலாச்சாரத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இவர்களின் நோக்கம் தான் என்ன காதலர்களை பார்த்தல் தாலி காட்டுங்கள் என்று சொல்லி வற்புறுத்துகின்றனர். கட்டவில்லை என்றால் அவர்கள் உண்மையான காதல் இல்லையாம். காதலிக்கும் தம்பதிகள் கல்யாணம் எப்போது செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று பல கனவுகளோடு இருப்பார்கள். அதையெல்லாம் விடுத்தது இவர்கள் சொன்ன உடனே தாலி கட்டிக்கொள்ள முடியுமா என்ன? பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்ட இருவர் நிச்சயதார்த்தற்கு அடுத்து வெளியுள் செல்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்களிடம் இவர்கள் நீங்கள் இப்போதே கல்யாணம் செய்துகொள்ளுங்கள் அப்படி செய்தால் தான் நீங்கள் பழகுவது உண்மை இல்லையென்றால் நீங்கள் போலியாக பழகுகிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னால் அவர்கள் தாலி கட்டுவார்களா கண்டிப்பாக கட்டமாட்டார்கள். அதற்காக நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் பழகுவது போலியாக தான் அவர்கள் திருமணம் செய்யமாட்டார்கள் என்று அர்த்தமா?<br />
<br />
பணத்தை பார்த்து தான் காதலிக்கிறார்கள் அது எப்படி உண்மை காதல் ஆகும் என்று சிலர் சொல்கின்றனர். ஒரு பெற்றோர் தன் மகளுக்கு பெண் பார்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்கள் என்ன பணமே இல்லாத ஒரு ஏழை மாபிள்ளையை பார்த்தா திருமணம் செய்து வைகிறார்கள்? ஓரளவு பணம் உள்ளவனா தன மகளை வைத்து காப்பாத்துவான என்று பார்த்து தான் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெற்றர்கள் இதை செய்தால் அது பெண் மீதுள்ள அக்கறை அதையே காதலிக்கும் பெண் செய்தால் அது பொய்யான காதல் என்று அர்த்தமா?<br />
<br />
ஒரு மணி நேரத்தில் பெண்ணையோ அல்லது ஆணையோ பார்த்து பிடிகிறதா என்று கேட்டு கல்யாணம் செய்துவைக்கும் இவர்களின் கல்யாண முறை சிறந்தது ஆனால் தன் மனதுக்கு பிடித்த ஒருவருடன் பழகி புரிந்தகொண்டு கல்யாணம் செய்ய நினைக்கும் காதல் தவறானதா? சிறிய வயதில் இருந்து பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்கள் கல்யாணம் மட்டும் தவறாகவா செய்து வைத்துவிட போகிறார்கள் என்று சொல்கிறார்கள். சிறுவயதில் இருந்து உடைகள் படிக்கும் ஸ்கூல் என்று பலவற்றை பெற்றோர் பிள்ளையாய் கேட்காமலேயே செய்யலாம் அது அவனுக்கு சிறந்ததாக இருக்கும் என நினைக்கலாம் ஆனால் அந்த பிள்ளை பள்ளி படிப்பை முடித்து கல்லூரி சேரும்போது கணிதமே சுத்தமாக வராத ஒருவனை நீ கணிதம் எடுத்து படி அப்போது தான் நீ நல்ல நிலைமைக்கு வருவாய் என்று அக்கறையாக சொன்னால் அந்த பிள்ளைகளால் என்ன செய்ய முடியும் பெற்றோருக்காக கணிதம் எடுத்துவிட்டு தோல்வி மேல் தோல்வியை சந்தித்து 3 வருடம் முடிக்கும் கல்லூரி படிப்பை 6 வருடம் படிதுகொண்டிருப்பர்கள். இதே போல தான் என்ன தான் பெற்றோர் நல்ல மணமகன் ம்,மணமகள் என்று பார்த்து கல்யாணம் செய்துவைத்தாலும் வாழப்போவது பிள்ளைகள் தான் அவர்களுக்கு தன் வருங்காலம் பற்றிய கனவு இருக்கும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் அவர்களின் வாழ்கை அமைய வேண்டும்.<br />
<br />
என் மகள் ஒருவனை காதலிக்கிறாள் அவன் தவறானவன் அவள் காதலிக்கிறாள் என்பதற்காக அவளை அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக முடியாது தான் அதை உங்கள் பிள்ளைக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்தது அவர்களை கண்டித்து மனம் புண் படும்படி செய்து உங்களின் நல்ல உள்ளம் அவர்களுக்கு தவறாக தெரிவது போல நடந்துகொண்டால் தவறான காதலன் நல்லவனாக தெரிவான். அவனை நம்பி உங்கள் பெண்ணின் வாழ்கை சீரழியும் இதில் நீங்கள் பெரும்பங்கு வகிக்கிறீர்கள்.<br />
<br />
உலகில் உள்ள அணைத்து நல்ல விஷயங்களிலும் சில தவறுகள் உள்ளன அதனால் அவை தவறானது என்று அர்த்தம் இல்லை. அதே போல தான் காதலும் சிலர் அதன் பெயரை சொல்லி செய்யும் தவறுக்கு காதல் பொறுப்பாகாது. மனிதன் என்றுமே தான் செய்யும் தவறுக்கு மற்றவற்றை குற்றம் சொல்லி பழக்கப்பட்டவன் அதே போல தான் சில நபர்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு காதலை பயன்படுத்தி காதல் மீது பழி சுமத்துகிறார்கள். ஒரு பெண்ணுடம் பலவந்தமாக உறவு கொள்வது கற்பழிப்பு அதே போல ஒரு பெண்ணை ஆசை காட்டி அனுபவித்து விட்டு செல்லும் செயல் காதல் இல்லை கற்பழிப்பு தான் அதற்கும் காதல் என்று அர்த்தம் கர்ப்பித்து ஆண்களின் இச்சையை நியாயபடுத்தி காதல் மீது பழி சுமத்தி பார்க்கிறது ஆணாதிக்க சாதிய மத வெறி பிடித்த சமூகம்.<br />
<br />
பெற்றோர்களே மாற்றார்கள் தங்கள் குடும்பத்தை என்ன நினைப்பார்கள் என்ற போலி கவுரவத்திற்காக உங்கள் பிள்ளைகளின் மனதை சாகடிக்காதீர்கள்.<br />
<br />
<b>காதல் ஆக்கத்தின் அடையாளம் அன்பின் மறுவுருவம் பாசத்தின் பரிமாணம் இனிய வாழ்கையின் வாசல் அதனுள் சென்று அன்போடு வாழ்வோம். </b><b> </b><br />
<br />
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-54254586699294583352014-02-10T04:38:00.000-08:002014-02-10T04:56:28.198-08:00இளையதளபதிக்கு கிடைத்த பெருமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்றைய இளைஞர்களுக்கு மிக பிடித்தமான ஒன்று பேஸ்புக் இணையதளம். உலக அளவில் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இத்தகைய பேஸ்புக்கில் நம் இளையதளபதி விஜய் அவர்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது.<br />
<br />
சினிமா பிரபலங்கள் எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து
விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தால்
நன்றாகவா இருக்கும்..? கூடிய சீக்கிரமே ஃபேஸ்புக்கில் தனது
அதிகாரப்பூர்வமான கணக்கை (official page) விஜய்யும் துவங்கி விடுவார்
என்றுதான் தோன்றுகிறது.<br />
<br />
ஆதாரம் இல்லாமல் சும்மா செய்திக்காக சொல்லவில்லை. இரு தினங்களுக்கு முன்
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக்கின் வருடாந்திர நிறைவு விழா
கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு
கலந்துகொண்டிருக்கிறார் விஜய்.<br />
<br />எத்தனையோ முன்னணி சினிமா பிரபலங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு
வைத்திருந்தாலும், தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக ஃபேஸ்புக் விழா
கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் பெருமை பேஸ்புக் வரை தெரிந்திருப்பது மகிழ்ச்சிதான். <br />
<br />
<br />
புகைப்படங்கள் உங்களுக்காக...<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPi1cMqwlljDS6nIrBLiXKcz-T2-yP0_ndDnJ-GcJgdRDXVPrwIerfC-fwy7jzEmnecW2xtgRrycsUCyj7ERj13Tqrz_Dh2eW_5StcjMLasMPezaF2L6CXoOBFt5_gvOxepgp375z4Lw/s1600/1488745_721890601178910_2025192459_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPi1cMqwlljDS6nIrBLiXKcz-T2-yP0_ndDnJ-GcJgdRDXVPrwIerfC-fwy7jzEmnecW2xtgRrycsUCyj7ERj13Tqrz_Dh2eW_5StcjMLasMPezaF2L6CXoOBFt5_gvOxepgp375z4Lw/s1600/1488745_721890601178910_2025192459_n.jpg" height="400" width="368" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-c219KDBzWb3fbceNaXXCA7ndIwik98Yn_Q3oY3sEiP8jTDLwlOyJYPso1tqnyC6vQit4kYz-bukjJRQosE-ZSRhq6fEd6PMKdW7LuguhlrevxC5-prbDkFTpCXefXd9THHRoicECSQ/s1600/1604543_833236866689978_405695594_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-c219KDBzWb3fbceNaXXCA7ndIwik98Yn_Q3oY3sEiP8jTDLwlOyJYPso1tqnyC6vQit4kYz-bukjJRQosE-ZSRhq6fEd6PMKdW7LuguhlrevxC5-prbDkFTpCXefXd9THHRoicECSQ/s1600/1604543_833236866689978_405695594_n.jpg" height="400" width="300" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX6Y31I0e3L8hkVVMIxg-M1BgrUMGsNdH65z6q2dVK6lV0Ag-NOnXm30p2ihNNg69Ws1-qySfUHZFv-yoyvBjh1QRgXuYcNoXpQW0tlQ-9My4YSVG8nXPuLsPG4M9fT1Ya0OT5TNDgkw/s1600/tamizl.com-vijay-in-facebook-india-office-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX6Y31I0e3L8hkVVMIxg-M1BgrUMGsNdH65z6q2dVK6lV0Ag-NOnXm30p2ihNNg69Ws1-qySfUHZFv-yoyvBjh1QRgXuYcNoXpQW0tlQ-9My4YSVG8nXPuLsPG4M9fT1Ya0OT5TNDgkw/s1600/tamizl.com-vijay-in-facebook-india-office-1.jpg" height="400" width="315" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE19UK98Ybbsq6tJ61O4Tfz730o7sfAesJHKRqS5ixvzBYTsSOMTr3TQS3p361s6S7WsIomMlnKxo2Y-dcA1Au_ym-P8RlxzUP-wAWG3KlTD6PcN-uTx1BPhS70JF_5gsLSihg6mV0yg/s1600/tamizl.com-vijay-in-facebook-india-office-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE19UK98Ybbsq6tJ61O4Tfz730o7sfAesJHKRqS5ixvzBYTsSOMTr3TQS3p361s6S7WsIomMlnKxo2Y-dcA1Au_ym-P8RlxzUP-wAWG3KlTD6PcN-uTx1BPhS70JF_5gsLSihg6mV0yg/s1600/tamizl.com-vijay-in-facebook-india-office-2.jpg" height="400" width="298" /></a></div>
<br />
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-33783310207529536442014-02-08T22:41:00.002-08:002014-03-15T06:10:07.062-07:00தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_vJMmuEfvqdOxVsgyc3zbVmWgFhrrzTlNfDcMuleIQdFUBOsIqNoZXgjBxcYwxfPuwxrhSee602-v_cOJW5_FHRCMxZA32XYmXNpMWS6Jj7OJrU0MmVlGQCiPTP8zkZVKnh0V7g3VOA/s1600/rajini_baba_v.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_vJMmuEfvqdOxVsgyc3zbVmWgFhrrzTlNfDcMuleIQdFUBOsIqNoZXgjBxcYwxfPuwxrhSee602-v_cOJW5_FHRCMxZA32XYmXNpMWS6Jj7OJrU0MmVlGQCiPTP8zkZVKnh0V7g3VOA/s1600/rajini_baba_v.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
தமிழ் சினிமாவில் இன்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான். ரஜினி ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு மட்டும் உரிய பட்டம் இல்லை எனக்கு அடுத்து இன்னொருவர் வருவார் என்று சொன்னதிலிருந்து அடுத்த இடத்தில இருக்கும் நடிகர்களுக்கு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. எத்தனை நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று நினைத்தாலும் ரசிகர்கள் மனதில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நினைப்பது இரு நடிகர்களை தான். அந்த நடிகர்கள் யார் என்று நான் சொல்ல தேவையில்லை உங்களுக்கே தெரியும். விஜய் மற்றும் அஜித் தான் அந்த நடிகர்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqEzUtqYlkGqXdbpTY3a5n3S752b3Df3eqYDd4V2KZx0Q3FxNyyXv5LVsIjqTyOKG-3JMjUnPMCWgxGL5mD7jDVqfrGhbCnNSeL7a3dcVkQnj5Auz04W0fGrFyBuFMZfAVH2QtcW1Dbg/s1600/Jilla-and-Veeram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqEzUtqYlkGqXdbpTY3a5n3S752b3Df3eqYDd4V2KZx0Q3FxNyyXv5LVsIjqTyOKG-3JMjUnPMCWgxGL5mD7jDVqfrGhbCnNSeL7a3dcVkQnj5Auz04W0fGrFyBuFMZfAVH2QtcW1Dbg/s1600/Jilla-and-Veeram.jpg" height="302" width="400" /></a></div>
<br />
<br />
அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்றால் முந்தய சூப்பர் ஸ்டாரிடம் இருக்கும் சில நற்பண்புகள் திறமைகள் இருக்க வேண்டும் மற்றும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன அவைகளும் இருக்க வேண்டும். அந்த நற்பண்புகள், திறமைகள் மற்றும் விதிமுறைகள் விஜய் மற்றும் அஜித்திடம் இருக்கிறதா என்று பாப்போம்.<br />
<br />
<b>முதல் தகுதி:</b><br />
<br />
<span style="color: #f3f3f3;">தான் நடிக்கும் படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் மறந்தும் கூட நடிக்க முயற்சி செய்யகூடாது.</span><br />
<span style="color: #f3f3f3;"><b> </b></span><br />
<span style="color: #f3f3f3;">இந்த தகுதி விஜய் மற்றும் அஜித்திடம் நூறு சதவிதம் உள்ளது. </span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">விஜய் தன படங்களில் பறந்து காட்டுவார். அஜித் தன படங்களில் நடந்து காட்டுவார். ஆனால் நடிப்பு என்பது இருவருக்கும் ஒவ்வாமை தான்.</span><br />
<span style="color: cyan;"><span style="color: black;"><br /></span></span>
<span style="color: #f3f3f3;"><b>இரண்டாவது தகுதி:</b></span><br />
<br />
<span style="color: #f3f3f3;">தான் என்ன பேசினாலும் செய்தாலும் அது சரி தான் என்று பிறரிடம் சண்டையிடும் பெருமளவு ரசிகர்களை கொண்டிருக்க வேண்டும்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;"><b> </b></span><br />
<span style="color: #f3f3f3;">இந்த விஷயத்தில் விஜயும் அஜித்தும் ரஜினியை விட கொடுத்து வைத்தவர்கள். இவர்களுக்காக உழைபதற்கு என்று பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஒரு கூட்டமே இருக்கிறது. தமிழர் பண்பாடு என்ன என்பதை விஜய் அஜித் ரசிகர்கள் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் போடும் ஸ்டேட்டஸ் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.</span><br />
<br />
<span style="color: cyan;"><span style="color: black;"><span style="color: #f3f3f3;"><b>மூன்றாவது தகுதி</b>: </span> </span></span><br />
<br />
<span style="color: #f3f3f3;">அரசியலுக்கு வருகிறேன் என்றும் சொல்லகூடாது வர மாட்டேன் என்றும் சொல்ல கூடாது. கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் ஆனால் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் என்று ரசிகர்களை குழப்ப நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: cyan;"><span style="color: black;"><span style="color: #f3f3f3;">இந்த தகுதி விஜய்க்கு வெகு நாட்களாகவே உள்ளது. நான் அரசியலுக்கு வரவில்லை ஆனால் அரசியலில் ஆர்வம் உள்ளது என்று ரசிகர்களை உசுபேத்துவது விஜயின் வழக்கம். அஜித்தும் வீரம் படத்தில் ஆசையில் வரல ஆத்திரத்தில் வந்திருக்கேன் என்று தன் பங்குக்கு கொளுத்திபோட்டுவிட்டார்.</span> </span></span><br />
<br />
<span style="color: #f3f3f3;"><b>நான்காவது தகுதி:</b></span><br />
<br />
<span style="color: #f3f3f3;">தனக்கு விளம்பரம் பிடிக்காது எளிமையாக இருப்பது தான் பிடிக்கும் என்பது போல் இரண்டு நாள் கழுவாத முகத்தோடும் ஒரு வரம் துவைக்காத துணி ஒன்றையும் அணிந்து அணைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவேண்டும். ஆனால் இமைய மலை செல்லும்போது மட்டும் தன்னுடன் ஒரு புகைப்படகாரரை கூட்டிசென்று அங்கு தான் குகையில் இறங்குவது ஏறுவது என்று பல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட வேண்டும். </span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">இந்த தகுதி விஜய் அஜித் இருவருக்கும் கிடையாது. விஜய் தனக்கு விளம்பரம் வேண்டும் என்பது போலவே அனைத்தையும் செய்வார். அஜித் தனக்கு விளம்பரமே வேண்டாம் என்று எந்த நிகழ்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். ஆனால் அம்மா அழைக்கும் விழா மட்டும் அஜித்திற்கு விழாவாக தெரியாது போல தவறாமல் கலந்துகொள்வார்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<b>ஐந்தாவது தகுதி:</b> <br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">தனது படம் ரிலிஸ் ஆகும்போது மட்டும் அரசியலுக்கு வருவேன் என்று எதாவது பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்து படத்தை விளம்பர படுத்த வேண்டும். மற்ற நாட்களில் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கவேண்டும். கேட்டால் எளிமை என்று சொல்லிகொள்ளவேண்டும்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">இந்த விஷயத்தில் விஜய்யை விட அஜித் அதிக தகுதி உடையவர் மற்ற நாட்களில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது ஆனால் படம் ரிலிஸ் ஆகும் சமயம் வந்துவிட்டால் பைக்கை எடுத்துக்கொண்டு வெளிவந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுப்பது அல்லது மொட்டை அடித்துக்கொண்டு போஸ் கொடுப்பது போன்று சில பப்ளிசிட்டி ஸ்டன்ட் களை செய்வார்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<b>ஆறாவது தகுதி:</b><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">நிஜ வாழ்வில் தான் ரொம்ப நல்லவன் போல காட்டிகொள்ள வேண்டும் ஆனால் சினிமாவில் தவாறன பாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு குடி, சிகரட், போன்ற மிக நல்ல பழக்கங்களை கற்று தர வேண்டும். </span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">இந்த தகுதி அஜித்திற்கு மட்டும் தான் உள்ளது என்பதை தனது மங்காத்த மூலம் உலகறிய எடுத்து சொல்லிவிட்டார் வெங்கட் பிரபு.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<b>ஏழாவது தகுதி:</b><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">தனக்கு இணையாக உள்ள போட்டி நடிகர் தனக்கு நெருக்கமான நண்பர் என்பது போல காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் அவருக்கு சிறந்த விருது அல்லது அவரை பெருமை படுத்தும் விதமாக எதாவது நடந்தால் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">இந்த தகுதி விஜய் அஜித்திற்கு சுத்தமாக கிடையாது. இருவரும் மோதிகொள்ளும்போது வசனங்கள் மூலம் நேரடியாக எதிரி என்று காட்டிகொண்டார்கள் இணைந்த போது இருவரும் பரஸ்பர அன்பு காட்டிவருகிறார்கள்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<b>எட்டாவது தகுதி:</b><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">தான் நடிக்கும் படங்களில் லாஜிக் என்று ஒன்றை எதிர்பார்கவே கூடாது என்ற அளவுக்கு ரசிகர்கள் முதல் படம் பார்க்கவரும் அனைவரையும் பழக்கபடுத்தி வைத்திருக்க வேண்டும்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">இந்த தகுதி விஜய்க்கு அதிகமாகவே உள்ளது தனது பெரும்பாலன படங்களில் இதை அவர் மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறார். அஜித் எப்போதாவது இந்த வேலையை தனது ஒரு சில படங்களில் செய்வார்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<b>ஒன்பதாவது தகுதி:</b><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">சினிமாவில் நன்றாக நடிப்பதற்கு விருது என்று ஒன்று உள்ளது ஆனால் அப்படி ஒன்று உள்ளதா என்று கேட்கும் அளவிற்கு நல்ல மட்டமான மசாலா படங்களை தரவேண்டும். விருது எல்லாம் எவனுக்கு வேண்டும் எனக்கு என் பாதாம் ஹிட் ஆகி காசு வந்தால் போதும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் நான் நல்ல கமெர்சியல் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்று மறைமுகமாக சொல்லவேண்டும்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">இந்த விஷயத்தில் விஜய் இதை வெளிப்படையாக சொல்லிவிட்டு மசாலா படங்களை தருவார் ஆனால் அஜித் தனது பேட்டிகளில் நான் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு அதே மசாலா படங்களை தான் தருவார். ஆனால் இருவரின் ரசிகர்களும் அந்த மொக்கையை சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு ஹிட் படமாக மாற்றுவார்கள்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<b>பத்தாவது தகுதி:</b><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">ஒவ்வொரு பட வெற்றியின் போதும் இந்த வெற்றிக்கு என் ரசிகர்கள் தான் காரணம் அவர்கள் தான் என் உயிர் ரசிகர்களுக்காக நான் எதையும் செய்வேன் என்று சொல்லி ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு கடைசிவரை ஒன்றுமே செய்யகூடாது.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">இந்த தகுதி விஜய் அஜித் இருவருக்கும் கிடையாது. விஜய் ரசிகர்களை கவரும் வண்ணம் எனக்கு எல்லாமே ரசிகர்கள் தான் என்று சொன்னாலும் அதனை நிருபிக்கும் வண்ணமாக அவ்வப்போது ரசிகர்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அஜித் அப்படியே மாறுபட்டவர் என் படம் பிடித்தால் பாருங்கள் மற்றபடி எனக்காக நீங்கள் உங்கள் வாழ்கலையை வீணாக்கி என் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள் என்று சொல்லிபார்த்தார் கடைசியில் ரசிகர்கள் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் ரசிகர் மன்றத்தை கலைத்தேவிட்டார்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">எப்படி பார்த்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி விஜய் அஜித் இருவருக்கும் சொல்லும் அளவில் இல்லை. இவர்களுக்கு மட்டும் இல்லை மற்ற நடிகர்களுக்கும் கூட மேற்கூறிய நல்ல??? தகுதிகள் இருபதாக தெரியவில்லை எனவே இந்த அணைத்து சிறப்பு??? தகுதிகளையும் கொண்டிருக்கும் ஒரே நபர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பதை மிக பணிவுடன் தெரிவித்துகொள்வதில் மகிழிச்சியடைகிறேன்</span>.<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com118tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-52380076539348790282014-01-18T22:26:00.002-08:002014-02-10T04:59:06.365-08:00விஜய் அஜித் ரசிகர்களுக்கு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
சமீபத்தில் விஜய் டிவிட்டரில் தனது ரசிகர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்துகொண்டிருந்தார். அப்போது
குறுக்கிட்ட ஒரு அஜித் ரசிகர் விஜயிடம் அவதூறாக பேசியிருக்கிறார். அதை கண்ட
அவரது ரசிகர்கள் ஆத்திரத்துக்கு உள்ளாயினர். உடனடியாக மக்கள் இயக்கம்
சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நபரின் வீடு முற்றுகையிடப்பட்டது
அவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார் அவரது பெற்றோர்கள்
தங்கள் மகனை விட்டுவிடும்படி கெஞ்சினர். பின் தகவல் அறிந்த விஜய் அந்த
நபரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் மன்னித்து விட்டுவிடுங்கள்
என்று சொல்லியபின்னர் அந்த நபர் காவல் நிலையத்திலிருந்து
விடுவிக்கப்பட்டார்.<br />
<br />
இதையடுத்து விஜய் அந்த நபரை
மன்னித்தாலும் விஜய் ரசிகர்கள் மன்னிப்பதாக இல்லை அந்த நபரின் புகைப்படம்
மற்றும் அவரது வீட்டு முகவரி போன்றவற்றை சமூக வலை தளங்களில் வெளியிட்டு
அவதூறாக திட்டி வருகிறார்கள். அந்த நபரை மட்டும் அல்லாமல் அஜித் தன்
ரசிகர்களுக்கு இததகைய நாகரீகத்தை தான் சொல்லிதந்திருகிரார். தன்
திரைப்படங்களில் நெகடிவ் ரோலில் நடித்து கெட்டவார்த்தைகள் பேசி நாம நல்ல
இருந்த போதும் எத்தனை பேரை வேணுன்னாலும் கொள்ளலாம் போன்ற தவறான வசனம் பேசி
நடித்து அதையே தன் ரசிகர்களும் பின்பற்ற செய்கிறார் என்று அஜித்தையும்
தவறாக பேசி வெளியிட்டு இருகிறார்கள்.<br />
<br />
இதை அறிந்த விஜய்
ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த நபர் செய்த தவறை மன்னித்துவிடுங்கள் அவர்
புகைப்படத்தை பகிர்ந்து திட்டுவதையும் குறிப்பிட்ட நடிகரை( அஜித் ) பற்றி
தவறாக பேசுவதையும் நிருந்துங்கல் என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட
நடிகர்( அஜித்) எனக்கு போன் செய்தார் தன் ரசிகர் நடந்துகொண்டது தனக்கு
மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார் நாங்கள் இருவரும் வெகுநேரம் பேசினோம்
நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் இருக்கிறோம் எனவே அஜித் ரசிகர்களுடன்
மோதுவதை நிருந்துங்கல் என்று விஜய் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.<br />
<br />
இதில்
சிலவற்றை நாம் கவனிக்கலாம். ஒருவர் ஆன்லைனில் இருக்கும்போது அவரிடம்
நேரடியாக தவறாக பேசுவது நாகரீகமற்ற செயல் இதற்க்கு முழு பொறுப்பும் அந்த
நபர் தான் என்று சொல்லமுடியாவிட்டாலும் அதிக பொறுப்பெர்க்ககூடியவர் அந்த
நபர் தான். அந்த தவற்றுக்கான மீதி பொறுப்பை விஜய்,அஜித்,விஜய் ரசிகர்கள்,
அஜித் ரசிகர்கள் ஆகியவர்களிடம் பகிர்ந்து அளிக்கலாம். ஆம் இந்த
நாகாரீகமற்ற செயலுக்கு காரணமாக இவர்கள் அனைவருமே உள்ளனர். விஜய் அஜித்
இருவருமே ஆரம்பத்தில் தங்கள் ரசிகர்கள் போட்டி பொட்டுகொள்வதை விரும்பினர். அவர்களது பேட்டிகளும் ரசிகர்கள் போட்டிபோட்டுகொள்வதர்க்கு ஆதரவாக தான் இருந்தன ஏனென்றால் அப்போது தான் தங்களது படங்கள் ஹிட் ஆகும் தாங்கள் வளர முடியும் என்று நம்பினார். அவர்கள் நிணைதார்போலவே இருவரும் இன்று முன்னனி ஸ்டார்களாக மாறியிருகிறார்கள். அதே போல அவரது ரசிகர்களின் போட்டியும் வளர்ந்துவிட்டது. போட்டியாக இருந்தது இன்று ரசிகர்களிடம் பகைமையாக மாறிவிட்டது. தெருக்களில் சண்டையிடும் அளவிற்கும் தன் நண்பர்களை இழக்கும் அளவிற்கும் எல்லாவற்றிற்கும் உச்சமாக தன் தாய் மற்றும் அக்கா தங்கைகளை இழிவுபடுத்தும் அளவிருக்கும் மாறியுள்ளது.<br />
இன்று சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் விஜயையும் விஜய் ரசிகர்கள் அஜித்தையும் திட்டுவதை தவிர்த்து அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் குடும்பத்தை திட்டுவதையும் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் குடும்பத்தை திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.<br />
<br />
ஆரம்பத்தில் ரசிகர்களின் போட்டியை ஆதரித்த விஜயும் அஜித்தும் இன்று அதை எதிர்த்து சண்டையிடாதீர்கள் என்று சொல்லிவருகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களின் சண்டையை தங்கள் வளர்சிக்காக பயன்படுத்திய விஜயும் அஜித்தும் இன்று நிறுத்த சொல்வதனால் என்ன பயன் அல்லது இப்போது ரசிகர்கள் இவர்களின் பேச்சை கேட்டு நிறுத்திவிடுவார்களா?... ஆபத்தை ஆரம்பத்தில் தங்கள் சுயலாபத்துக்காக வளரவிட்டு இப்போது ரசிகர்களின் செயலால் தங்களுக்கு கெட்டபெயர் வருபோது மட்டும் கைவிட சொல்வது ஏற்புடையது அல்ல.<br />
<br />
இனிமேல் சிந்திக்க வேண்டியது ரசிகர்கள் தான் ஆரம்பத்தில் உங்கள் அபிமான நடிகரின் வளர்சிக்காக பாடுபட்டீர்கள் இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். எந்த அளவிற்கு வளந்துள்ளார்கள் என்பது ஜில்லா வீரம் இரண்டு படத்திற்கும் கிடைத்த பிரம்மாண்ட ஒபெநிங்கை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் இனிமேலாவது உங்கள் வளர்ச்சியை பாருங்கள். அந்த நபர் செய்தது தவறு அதற்காக அவர் கைது செய்யப்பட்டார் ஆனால் அவருக்காக விஜய் மக்கள் இயக்கத்திடம் கேஞ்சினார்களே அந்த நபரின் பெற்றோர் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஒரு பிள்ளையை பெத்து படிக்க வைத்து ட்விட்டரில் இது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடும் அளவிற்கு சுதந்திரமாக பாசத்துடன் வளர்த்தது தான் அவர்கள் செய்த தவறா? தன்னை வளர்த்த பெற்றோருக்கு அந்த நபர் தேடித்தந்த பெருமை மற்றவர்களிடம் தன் பெற்றோரை கெஞ்சவைத்தது தான். இதை தானே விரும்புகிறீர்கள் விஜய் அஜித் ரசிகர்களே. இன்று விஜய் ஆன்லைன் வந்தார் அவருக்கு இது நடந்தது இதனால் ஒரு அஜித் ரசிகரின் பெற்றோர் பாதிக்கப்பட்டனர். என்றாவது அஜித் ஆன்லைன் வந்தால் அவருக்கு இது நடக்காலம் அதனால் ஒரு விஜய் ரசிகரின் பெற்றோர்கள் பாதிக்கப்படலாம். கண்டிப்பாக இதனால் விஜயோ அஜித்தோ பாதிக்கபடபோவது இல்லை கேவலமான ரசிகர்களும் அவர்களின் அப்பாவி பெற்றோர்களும் தான் பாதிக்கப்பட போகிறார்கள்.<br />
<br />
ரசிகர்களே உங்கள் அபிமான நடிகருக்காக அவரின் படம் பார்ப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் அதை விடுத்தது நடிகருக்காக உழைத்து உங்கள் பெற்றோரை அக்கா தங்கைகளை அசிங்கபடுதாதீர்கள் உங்கள் நண்பரை இழக்காதீர்கள். </div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com98tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-61394189483267699482014-01-17T02:56:00.002-08:002014-02-11T02:59:00.215-08:00ஜில்லா வீரம் விமர்சனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
பல வருடங்களுக்கு பிறகு விஜயும் அஜித்தும் இந்த பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதியுள்ளனர். விஜயின் ஜில்லாவும் அஜித்தின் வீரமும் 10 ஆம் தேதியன்று ஒன்றாக ரிலிஸ் ஆகியது. வழக்கமாக விஜய் அஜித் மொதும்பொதெல்லம் விஜய் வென்று விடுவார் போக்கிரி-ஆழ்வார், திருமலை-ஆஞ்சநேயா என விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது ஆனால் இந்ததடவை சற்று மாறியிருக்கிறது. வழக்கமாக விஜய் அஜித் மோதும்போது அஜித் படம் மொக்கையாக தோல்வி அடையும் இந்ததடவை விஜய் படம் மொக்கையாக தோல்வி அடையவில்லை ஆனால் அஜித்தின் வீரத்துடன் விஜய்யின் ஜில்லா சற்று பின் தங்கி இருக்கிறது. பொங்கல் ரேசில் விஜயை அஜித் சற்று முந்தியுள்ளார். என்னுடன் சேர்த்து விஜய் ரசிகர்கள் சிலருக்கு ஜில்லாவை விட வீரம் மிகவும் பிடித்துள்ளது.<br />
<br />
இப்போது விமர்சங்களை ஒப்பீட்டளவில் பார்ப்போம்.<br />
<br />
<b>ஜில்லா </b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTUX7MpmpDFtBRl4mJ2z4gY-b3_B-nvsKYTbaBFTl-TIuckklXX514Dk1fXxhwe9z8L7raHRyZAVIknl5hVlzDYl5dhAL4KhNhDCHBVdsnyqfqUC3SZTG53pDqUe2buLf6S4Axg3OUww/s1600/Jilla.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTUX7MpmpDFtBRl4mJ2z4gY-b3_B-nvsKYTbaBFTl-TIuckklXX514Dk1fXxhwe9z8L7raHRyZAVIknl5hVlzDYl5dhAL4KhNhDCHBVdsnyqfqUC3SZTG53pDqUe2buLf6S4Axg3OUww/s1600/Jilla.jpg" height="320" width="640" /></a></div>
<br />
<br />
மதுரையில் ஏற்கனவே தாதாவாக இருக்கும் ஒருவரை போட்டுத்தள்ளிவிட்டு மதுரையின் ஒரே தாதாவாக மாறுகிறார் மோகன்லால். அவர் மனைவியின் காப்பாற்றிய விஜயை தத்துப்பிள்ளையாக ஏற்றுகொள்கிறார் மோகன்லால். மோகன்லால் மனைவியை காப்பாற்றும்போது தன் தந்தையை போலிஸ் ஒருவர் கொன்றதால் போலிசை வெறுக்கிறார் விஜய். மோகன்லாலுடன் சேர்ந்து அடிதடிகளை செய்கிறார். ஒருகட்டத்தில் போலிசால் மோகன்லாலுக்கு பிரச்சனை வர விஜயை போலிசாக மாற்றுகிறார். அதுவரை தன் அப்பா செய்பவை எல்லாம் நல்லது என்று நினைத்த விஜய் போலிசாக மாறியவுடன் ஒரு விபத்தின் பொது தன தந்தை செய்வது தவறு என உணர்ந்து அவரை திருத்த முயல்கிறார். நடுவில் டுவிஸ்ட் என்று ஒன்று வைத்திருகிறார்கள் அது ஒன்றும் அவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இல்லை. வேகமான திரைக்கதையுடன் முதல் பாதியும் சற்று மெதுவான திரைக்கதையுடன் இரண்டாம் பாதியுமாக ஒரு முறை பார்க்கும் அளவில் வந்திருகிறது ஜில்லா.<br />
<br />
<b>வீரம் </b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJdcRHPL-NHBjxwbUcYaUbYLJTasDzRxVsOS9DFCf536_GftcqgJiuAQ1wO8ivaVkCp2QplhrJQMOQ5wYNkn7F4Ds8NinB4LvOhKYQCPnfeHMdzl7iGWd3teZGkh1Dvatq-UjtVUawIw/s1600/veeram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJdcRHPL-NHBjxwbUcYaUbYLJTasDzRxVsOS9DFCf536_GftcqgJiuAQ1wO8ivaVkCp2QplhrJQMOQ5wYNkn7F4Ds8NinB4LvOhKYQCPnfeHMdzl7iGWd3teZGkh1Dvatq-UjtVUawIw/s1600/veeram.jpg" height="344" width="640" /></a></div>
<br />
<br />
தன் தம்பிகளுடன் கலகலப்பாக கல்யாணமே வேண்டாம் என்று வாழ்ந்து வரும் அஜித். தன் அண்ணனுக்கு எப்படியாவது கல்யாணம் செய்துவைகவேண்டும் என்று அவரது தம்பிகள் நினைத்து சந்தானத்தின் உதவியுடன் தமன்னாவை தங்கள் வீட்டின் பக்கத்தில் தங்கவைகிரார்கள்.<br />
இதற்கு இடையில் லோக்கல் ரௌடி ஒருவனுடன் மோதுகிறார் அஜித். ஒருகட்டத்தில் அஜித்தும் தமன்னாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். தமன்னாவின் அப்பா அஜித்தை பார்க்கவேண்டும் என்று கூற அஜித் தமன்னா வீட்டில் தங்குகிறார் அப்போது தான் தெரிகிறது தமன்னாவின் குடும்பத்துக்கு ஒருவனால் ஆபத்து இருக்கிறதென்று. தமன்னாவின் குடும்பத்தை அஜித் காப்பாற்றுவது தான் வீரம் படத்தின் கதை. முதல் பாதி முழுக்க சந்தானத்தின் காமெடி இரண்டாவது பாதி வேகமான திரைகதை என்று நல்ல பொழுதுபோக்கு படமாக வந்திருகிறது வீரம்.<br />
<br />
<b>நேசன்</b> <b> </b> <br />
<br />
ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனரின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் நேசன் இந்த படத்தின் வெற்றிக்கு முழுக்க விஜயை மட்டுமே நம்பியிருக்கிறார் என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. மோகன்லால்,காஜல்,பூர்ணிமா,சூரி, தம்பிராமையா என நட்சத்திர பட்டாளத்தையே புக் செய்த இயக்குனர் விஜயை மட்டுமே படம் முழுக்க பயன்படுதிருகிரார். விஜயை வைத்தே காமெடி சீன் எடுப்பதற்கு சூரியை ஏன் புக் செய்யவேண்டும்?... நான்கு சீன்களிலும் பாடலுக்கும் மட்டும் வருவதற்கு ஹீரோயினுக்கு எதற்கு தேவையே இல்லாமல் சம்பளம் கொடுக்கவேண்டும்?... எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுக்க கத்திக்கொண்டு மட்டுமே இருப்பதற்கு மோகன்லால் எதற்கு?... இந்த படம் பாக்ஸ் ஆபிசில் தப்பித்து தயாரிப்பாளர் கையை கடிக்காமல் விட்டதற்கு முழு காரணம் விஜய் மட்டுமே. விஜய் இல்லையென்றால் முதல் வாரத்தில் இவ்வளவு வசூல்(44 கோடி) கண்டிப்பாக வந்திருக்காது.இயக்குனர் தனக்கு கொடுத்த வாய்ப்பை வீனடிதிருகிரார்.<br />
<br />
<b>சிவா</b><br />
<br />
ஏற்கனவே சிறுத்தை என்ற சுமார் படத்தை கொடுத்த இயக்குனர் அஜித்தை வைத்து சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். முதல் பாதி முழுக்க சந்தானத்தின் காமெடியை காட்டி நடுநடுவே அஜித்தை காட்டியுள்ளார். இரண்டாம் பாதி முழுக்க அஜித்தை நன்றாக பயன்படுத்தி உள்ளார். முன் பாதி மெதுவாக சென்றாலும் காமெடியை வைத்து மேனஜ் செய்துள்ளார். இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் அதிரடி கலந்த இவரது திரைகதை பிரம்மிக்க வைக்கிறது. அஜித் படங்களில் வழக்கமாக இல்லாத காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளை சேர்த்து வெற்றிப்படமாக மாற்றியுள்ளார் சிவா.<br />
<br />
<b>விஜய் </b><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9f0z4JHqwv2eQQvBq93yB_4GEveeI28U3JKtPd2FGwutoLU8ysISoqWzg1p2KAHJb-LMV-PyuJKQb1iRzZvhQKdt15gj-ChzbEmFGL-EA8FKp0qib-Qh63nEa4ygjVyp0ZmelMGZw3w/s1600/Jilla-Vijay.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9f0z4JHqwv2eQQvBq93yB_4GEveeI28U3JKtPd2FGwutoLU8ysISoqWzg1p2KAHJb-LMV-PyuJKQb1iRzZvhQKdt15gj-ChzbEmFGL-EA8FKp0qib-Qh63nEa4ygjVyp0ZmelMGZw3w/s1600/Jilla-Vijay.jpg" height="419" width="640" /></a></div>
<br />
<br />
உன்ன மாதிரி ஊருக்கு ஒருவன் இருந்தால் தப்பே நடக்காது என்று சொல்லும் ஒருவரிடம் தப்பு நடக்க கூடாதுன்னு அடிகல தப்பு நடக்கணும் அத நாங்க மட்டும் தான் பண்ணும்னு அடிக்கிறேன்னு சொல்வதில் ஆரம்பித்து படம் முழுக்க தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கட்சிதமாக செய்துள்ளார். சண்டை காட்சிகளில் விஜய்யின் முகபாவனைகள் அபாரம். மோகன்லாலிடம் அடங்கிபோகும் இடங்களிலும் எதிரிகளை துவைத்து இடக்கும் இடங்களிலும் விஜய்யின் நடிப்பு நன்றாக உள்ளது. படத்திற்கு படம் இளமையான தோற்றமாக காட்சியளிப்பது இவரின் கூடுதல் பிளஸ். ஒரு காட்சியில் தோள்பட்டையை ஒரு பக்கமாக தூக்கிக்கொண்டு நடக்கும் காட்சி பார்பதற்கு கேவலமாக உள்ளது. இது போன்ற காட்சிகள் தேவையற்றது. மேலும் சில இடங்களில் மீண்டும் குரலை இழுத்து பேசும் பழைய ஸ்டைலை பின் பற்றியுள்ளார் தயவுசெய்து அதை விட்டுவிடுங்கள் சுத்தமாக நன்றாக இல்லை.<br />
<br />
<b>அஜித்</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWCtXGbt0vhz5d-SkdfDQWExPLLjyXdHz-JfRDsxMO_7ZeQNNHiJUOfYODx6hhoNoB1tqrF8bx_ywE_RCyGPiQCyMcdRXw-rsio3DRRJduhRH8SvEhj-tbIcwSVbDEA7qacw8YWxP5kA/s1600/Veeram+Movie+Latest+Stills+(2).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWCtXGbt0vhz5d-SkdfDQWExPLLjyXdHz-JfRDsxMO_7ZeQNNHiJUOfYODx6hhoNoB1tqrF8bx_ywE_RCyGPiQCyMcdRXw-rsio3DRRJduhRH8SvEhj-tbIcwSVbDEA7qacw8YWxP5kA/s1600/Veeram+Movie+Latest+Stills+(2).jpg" height="426" width="640" /></a></div>
<br />
<b> </b> <br />
<br />
இந்த மாதிரியான நடிப்பை அஜித் இவ்வளவு நாளாக எங்கு வைத்திருந்தார் என்று தெரியவில்லை. வழக்கமாக இவர் படம் முழுவது உம்மென்று எதோ தனிப்பட்ட மனிதரை போன்றும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் இவருக்கும் பெரிய ஒரு இடைவெளி இருப்பது போன்று தோன்றும். அதானால் தான் அஜித்திற்கு குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் இதில் எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இறங்கி அடித்திருக்கிறார். குழந்தையிடம் அஜித் பேசும் காட்சி மற்றும் தமன்னாவிடம் பேசும் காட்சிகள் அஜித் ரசிகர் அல்லாதோரையும் கவர்ந்த காட்சிகளாகும். கோட் சூட் போட்டு எப்போதுமே உம்மென்று நடிப்பதை விடுத்தது இம்மாதிரியான கலகலப்பான வேடங்களில் நடித்தால் இதுவரை இல்லாத சிறுவயது ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அஜித்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இம்மாதிரியான கலகலப்பான வேடங்களில் நடிப்பதை தொடருங்கள் அஜித். சால்ட் அண்ட் பேப்பர் லுக் இந்த படத்திற்கு தேவையே இல்லாதது. தமன்னாவுடன் ஆடும் பாடல் காட்சிகளில் தாத்தா பேத்தி மாதிரி இருக்கிறது. தயவுசெய்து இந்த கெட்டப்பை மாற்றுங்கள். <br />
<br />
<b>வசூல்</b> <br />
<br />
ஜில்லா படத்தின் முதல் நாள் வசூல் <b>11.25 கோடி</b> <br />
<br />
வீரம்<b> </b>படத்தின் முதல் நாள் வசூல் <b>9.35 கோடி </b><br />
<br />
<b>எனது மதிப்பெண்</b><br />
<br />
ஜில்லா <b>: 50/100 </b><br />
<br />
வீரம்<b> : 60/100</b> </div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-46203844139839371642013-12-02T03:55:00.002-08:002014-02-10T04:56:28.194-08:00வலைபதிவில் ரசிகர்களின் காமெடி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #f3f3f3;">இப்பொழுதெல்லாம் நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்த இயக்குனர்கள் சிலர் நாம் பார்த்தால் தலைவலி வருகிற அளவுக்கு சில படங்களை எடுத்துவிட்டு அந்த படம் தோல்வி அடைந்த பின்னர் பேட்டி என்கிற பெயரில் நான் உலகத்தரமான படம் எடுத்திருக்கிறேன் ஆனால் அதை புரிந்துகொள்ள தமிழ் மக்களுக்கு அறிவு இல்லை என்று ஆவேசமாக பேசுவார்கள். அவர்கள் பேசுவதை பார்த்தல் நீ எடுத்த படம் ஓடுற தியேட்டரில் போய் இதை சொல்லு அப்பறம் தெரியும் உன் நிலைமை என்று நினைக்க தோன்றும்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">அதே போன்ற ஒரு காமெடி தான் நான் ஒரு அஜித் ரசிகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் போது நடந்தது. அது என்னவென்றால் பில்லா 2 தமிழ் சினிமாவில் சிறந்த ஆக்க்ஷன் படங்களில் ஒன்றாம் அதை ரசிக்க நமக்கு தான் அறிவு போதவில்லை அதனால் தான் பில்லா 2 படம் படு தோல்வி அடைந்ததாம். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படம் வரும்போது கேவலமாக இருந்தாலும் அது சூப்பர், நல்ல படம், தாறுமாறு , இந்த வருடத்தின் நம்பர் ஒன் ஹிட் என்றெல்லாம் முகபுத்தகதிலும் , வலைபதிவிலும், ட்விட்டரிலும் எதாவது உளறுவார்கள். இதெல்லம எதற்காக என்றால் நாம் இப்படி சொன்னாலாவது இதை பார்த்து யாரவது படத்தை பார்க்க மாட்டார்களா என்று ஒரு நப்பாசை தான்.</span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #f3f3f3;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy5urQqFWPEsepZtyU-2WC6PhTUCehHTwyv5Ag7nHFi-6O9CsV29YL6772V9etDFAtOhQtwF_kYQy8Hkl9kcekyDSi-bVa7LhbAmb9cllcsAMHPG-N_jRHxj79iCYEVeAETPgP0J5FPA/s1600/billa-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy5urQqFWPEsepZtyU-2WC6PhTUCehHTwyv5Ag7nHFi-6O9CsV29YL6772V9etDFAtOhQtwF_kYQy8Hkl9kcekyDSi-bVa7LhbAmb9cllcsAMHPG-N_jRHxj79iCYEVeAETPgP0J5FPA/s400/billa-2.jpg" width="400" /></a></span></div>
<span style="color: #f3f3f3;"><br />
<br />
</span><span style="color: #444444;"><span style="color: #f3f3f3;">ஆனால் பில்லா 2 வெளிவந்து தோல்வி அடைந்து பல நாட்கள் ஆகி அது அனைவருக்கும் தெரிந்த( இயக்குனர் சக்ரி டொல்ட்டி, அஜித் உள்பட) நிலையில் அஜித்தின் ரசிகர்கள் சிலருக்கு மட்டும் தெரியவில்லை போலும் அதனால் தான் இத்தகைய காமெடி நடந்திருகிறது. இதை சொன்னவர் பேஸ்புக்கில் தனக்கு பிடிக்காத நடிகரின் படங்களை வேண்டுமென்றே கேவலமாக எழுதும் சிறுவர் இல்லை என்னை விட வயதில் பெரியவர் அதுவும் வலைபதிவு எழுதும் ஒரு ப்ளாக் சொந்தகாரர்</span><b><span style="color: cyan;">( இருக்காத பின்னே வலைபதிவில் பொதுவான மக்களுக்கு பயன்படும் வகையில் எதாவது எழுதினால் இது போன்ற சில பொதுவான விஷயங்கள் தெரிந்திருக்கும் அதை விடுத்தது தனக்கு பிடிக்காத நடிகரை பற்றி தவறாக எழுதுவதற்காகவே ஒரு வலைப்பூ நடத்திவந்தால் அவருக்கு பிடித்த நடிகர் நடித்த படம் மொக்கையாகவே இருந்தாலும் அது சூப்பர் என்றும் பிடிக்காத நடிகர் நடித்தது நல்ல படமாக இருந்தாலும் மோசமான படமாக தானே தெரியும்)</span></b> <span style="color: #f3f3f3;">இப்படி ஒரு பெரிய மனுஷன்??? எழுதினால் என்னை போன்ற சிறுவர்கள் என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள்.</span></span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">சரி இதே போன்று மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகரின் மோசமான படங்களை சிறந்த படம் என்று சொன்னால் எப்படி இருக்கும்??? இதோ நீங்களே பாருங்கள்....</span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: magenta;"><b>ரஜினி ரசிகர்கள்</b></span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #444444;"><b><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjcSLHrc-UqIpW2Y91Q5rSroE87RHUTdBz7dj8lpFFWbtN35bjWr0dPsdDHC2Z0CzL9JoBUtT41lnKwU4-YcthRFCNeXCvEDH1SIv7LMwMjEvCbAGxCpkzla01FBL6FYzQJCnhEk5Qdw/s1600/baba_10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="297" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjcSLHrc-UqIpW2Y91Q5rSroE87RHUTdBz7dj8lpFFWbtN35bjWr0dPsdDHC2Z0CzL9JoBUtT41lnKwU4-YcthRFCNeXCvEDH1SIv7LMwMjEvCbAGxCpkzla01FBL6FYzQJCnhEk5Qdw/s400/baba_10.jpg" width="400" /></a></b></span></div>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #f3f3f3;">பாபா ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் ஜப்பானில் மட்டும் ரிலிஸ் செய்திருந்தால் கூட படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் ஆனால் தமிழ் நாட்டில் ரிலிஸ் செய்ததால் தான் படம் தோல்வி அடைந்தது. தமிழர்களுக்கு வித்தியாசமான(???) படங்களை ரசிக்க தெரியவில்லை...</span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;">:</span><span style="color: blue;"><b>கவுண்டமணி</b></span><span style="color: #444444;"> <span style="color: #f3f3f3;">டேய் கரடி தலையனுங்களா பாபா எந்த அளவுக்கு சிறந்த படம்னு அமெரிக்காவில் இருந்த ஒரு சாமியாரை சத்யம் தியேட்டரில் முதல் ஷோ காட்டி அவர் உயிரையே பரித்தாரே ரஜினி அவரை கேட்டு பாருங்கள் தெரியும்...</span></span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: magenta;"><b>கமல் ரசிகர்கள்</b></span><br />
<span style="color: #444444;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #444444;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoswKJCJ9-JQ33IkATvc7uhVZsoXJQxD46YQ0s9Re4GOiV_3KODYf4ZZ3sqrFEHT7bJGRYQfH1qOL1KiX80n6seuo0e2ZrE0q2nN1Lno02Xy11wtV8PHKdImxL6EO8GrfHNaZ8Ykt3wA/s1600/Manmadhan+Ambu+Movie+Online.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoswKJCJ9-JQ33IkATvc7uhVZsoXJQxD46YQ0s9Re4GOiV_3KODYf4ZZ3sqrFEHT7bJGRYQfH1qOL1KiX80n6seuo0e2ZrE0q2nN1Lno02Xy11wtV8PHKdImxL6EO8GrfHNaZ8Ykt3wA/s400/Manmadhan+Ambu+Movie+Online.jpg" width="400" /></a></span></div>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #f3f3f3;">மன்மதன் அம்பு சிறந்த படம் அது எங்கள் உலக நாயகனின் கமல் கை வண்ணத்தில் உருவாகிய படம். அதன் அருமை தமிழ்நாட்டில் உள்ள சிறு அறிவு படைததவர்களுக்கு தெரியாது இவர்களுக்கெல்லாம் 4 சண்டை, 5 பாடல் இருந்தால் போதும் எங்கள் கமல் படத்தை ரசிக்கும் அளவுக்கு தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அறிவு போதவில்லை எனவே இனிமேல் கமல் படத்தை நாங்கள் அமெரிக்காவில் ரிலிஸ் செய்யபோகிறோம்.</span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><b><span style="color: blue;">கவுண்டமணி:</span> </b><span style="color: #f3f3f3;">அவர் படத்துல அவருக்கே புரியாத சீன்ஸ் எல்லாம் உங்களுக்கு தான் விளகக்கமா புரியுது பேசாமல் நீங்கள் படம் எடுக்க போய் விடுங்கள். ஆனால் ராசாக்களா கமல் ஆசிர்வாதத்தில் படம் எடுக்கிறேன் என்று கள்ளத்துப்பாக்கி என்ற ஒரு உலக மகா படத்தை எடுத்தாரே ஒருவர் அவரை போல எடுத்துவிடாதீர்கள் அப்பறம் கமல் சொன்னதை போல நாங்களும் தமிழ் நாட்டை விட்டு வெளியேரப்போறோம் என்று சொல்லவேண்டி வரும்.</span></span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><span style="color: magenta;"><b>விஜய் ரசிகர்கள்</b></span> </span> <br />
<span style="color: #444444;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #444444;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlLWHlMC-OgAA3XgK6vuag2QewExQTUyZlGd7VP_r16tgyJG5-dVQGFNYdCxRUHExjRRtAaZrzJtnOTWMXQ8mXx0BH4PVVRhfxCLSYEuYUSNRGFgcN0FJMsDdyQJz5chquowgI6fAtOA/s1600/vijay+sura+audio.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlLWHlMC-OgAA3XgK6vuag2QewExQTUyZlGd7VP_r16tgyJG5-dVQGFNYdCxRUHExjRRtAaZrzJtnOTWMXQ8mXx0BH4PVVRhfxCLSYEuYUSNRGFgcN0FJMsDdyQJz5chquowgI6fAtOA/s400/vijay+sura+audio.JPG" width="400" /></a></span></div>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><span style="color: #f3f3f3;">தளபதி நடித்த சுறா படம் இந்தியாவிலேயே கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த மாதிரியான மக்களுக்காக உழைக்கும் படங்களில் நடித்து எங்கள் தளபதி அரசியலில் உயர்வடைய கூடாது என்று சதி நடக்கிறது. எங்கள் தளபதி தடைகளை உடைத்து முன்னேறுவார்</span>.</span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"> <b><span style="color: blue;">கவுண்டமணி: </span> </b><span style="color: #f3f3f3;">சுறாவா!!!!!.... ஆஆஆ...... கேக்கும்போதே காதுல கடப்பாறைய விட்டமாதிரி இருக்கு... ஏன்டா டேய் கருவாட்டு தலையா நானே இப்பதான் அந்த அதிர்ச்சியில இருந்து வெளிவந்து ஒன்னு ரெண்டு விஜய் படம் பாக்க ஆரம்பிச்சிருக்கேன் அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்குறியா ? டை என் கண்ணுல நீ மாட்டுன திரும்பவும் வில்லு படத்த உனக்கு போட்டு காட்டுவேன் போடா டா ...</span></span><br />
<span style="color: #f3f3f3;"><br /></span>
<span style="color: #f3f3f3;">முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சொல்வதை பார்த்தீர்கள் இப்போது முன்னனணி நடிகராக தன்னை நினைத்து கொண்டு நம் உயிரை வாங்கும் சிலரின் ரசிகர்கள் சொல்வதை விட அந்த நடிகர்களே அதை விட நன்றாக காமெடி பண்ணுவார்கள் பாருங்கள் ...</span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: red;"><b>பவர் ஸ்டார்</b></span><br />
<span style="color: #444444;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #444444;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVp3niDDQd_pGUFcq5a5tjbEPrYaK6y2HFQ_SRMopZGmPqRYBA_JmKEGG_pcFS6CXkUyQtvzchL1Q491AFIj_MMjhl4FDcqEBLhhlvchTt_QOOjmYtHgGSSGTZu9zb8VFIUvQeqvZd_g/s1600/k-r-vijaya-inaugurates-lathika-hospital-39.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="268" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVp3niDDQd_pGUFcq5a5tjbEPrYaK6y2HFQ_SRMopZGmPqRYBA_JmKEGG_pcFS6CXkUyQtvzchL1Q491AFIj_MMjhl4FDcqEBLhhlvchTt_QOOjmYtHgGSSGTZu9zb8VFIUvQeqvZd_g/s400/k-r-vijaya-inaugurates-lathika-hospital-39.jpg" width="400" /></a></span></div>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><span style="color: #f3f3f3;">நான் எடுத்த லத்திகா படம் அணைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்ர்து உள்ளது அதனால் தான் அந்த படம் 200 நாள் ஓடியது(???). லத்திகா படத்தை பார்த்து என் நடிப்பை பாராட்டி ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பாராட்டினார்கள் அவ்வளவு ஏன் சல்மான் , ஷாருக், ஹிருத்திக்ரோஷன் போன்ற ஹிந்தி நடிகர்கள் எல்லாம் தனது படங்களில் நடிக்க கூப்பிட்டனர் நான் தான் வேண்டாம் என் சேவை தமிழ் நாட்டு மக்களுக்கு தான் தேவை என்று ஒதுங்கிவிட்டேன்</span>.</span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><span style="color: blue;"><b>கவுண்டமணி:</b></span> <span style="color: #f3f3f3;">ஆமா ஜாக்கி ஜான் கூப்டாகோ, வில்ஸ்மித் கூப்டாகோ, டாம்க்ரூஸ் கூப்டாகோ என்னடா கலர் கலரா ரீல் விடுற அந்த மூஞ்சிய அந்த பக்கம் திருப்புடா உன்னயெல்லாம் எப்படி தான் மக்கள் சகிசிக்ரான்களோ!!! பல்ல பாரு மண்வெட்டி மாதிரி இதுல சிரிப்பழகன் மாதிரி அத எப்பவுமே வெளிய தான் காட்டினு இருபியா வாய மூட்ரா ... வாயா மூட்ரா செனப்பணி நாயா பிரசவத்துக்கு இலவசமா போற மாதிரி வயிர வச்சிக்கிட்டு படத்த பத்தி பேசறான்</span>.<b> </b></span><br />
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"> <span style="color: red;"><b>சாம் ஆண்டர்சன்</b></span></span><br />
<span style="color: #444444;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #444444;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSLOGLYIfmB_6q0kX_K39PNRcCFEiq4gLd_33WA90ti7IF9lIkUNkhG6XEAUw1-rXRx4iB3XzXsv1NXMQ_C0kIWROlks1JnyNrmjnND-y4fo8fWl3YeG_yOg6l5L64q4TttVpSljVypQ/s1600/Yaaruku-Yaaro-Stepnee-Movie-Online-2010-DVD.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="254" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSLOGLYIfmB_6q0kX_K39PNRcCFEiq4gLd_33WA90ti7IF9lIkUNkhG6XEAUw1-rXRx4iB3XzXsv1NXMQ_C0kIWROlks1JnyNrmjnND-y4fo8fWl3YeG_yOg6l5L64q4TttVpSljVypQ/s400/Yaaruku-Yaaro-Stepnee-Movie-Online-2010-DVD.jpg" width="400" /> </a></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #f3f3f3;">நான் நடித்த யாருக்கு யாரோ படத்தில் நான் ஆடியிருக்கும் நடனத்தை பார்த்து விஜய், சிம்பு தனுஷ் போன்றோர் என்னை பாராட்டியது மிகவும் மகிழிசியாக உள்ளது அதிலும் மைகேல் ஜாக்சன்( சார் அவர் இறந்து விட்டார். ஓ அமா இல்ல மறந்துட்டேன்) மற்றும் பெரிய நடன கலைஞர்கள் எல்லாம் என்னை பாராட்டிய பொழுது எனக்கு அப்பவே இறந்து விடலாம் போல அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><b><span style="color: blue;">கவுண்டமணி:</span> </b><span style="color: #f3f3f3;">உரத்த குரலில் <b> </b>அப்பறம் ஏன்டா நாயே சாகல???... இருந்து ஏன்டா எங்க உயிர வாங்குறிங்க... </span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><b><span style="color: red;">சாம் ஆண்டர்சன்:</span> </b> <span style="color: #f3f3f3;">அண்ணே அது வந்து.....</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><span style="color: blue;"><b>கவுண்டமணி:</b></span> <span style="color: #f3f3f3;">(நக்கலாக) டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியாதுன்னு நெனைக்றேன்...</span> </span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><span style="color: orange;"><b>செந்தில்:</b></span> <span style="color: #f3f3f3;">அண்ணே யாருனே இது ஹாலிவுட் ஹீரோ மாதிரியே இருக்காரு உங்க relative வா ன்னே???</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><span style="color: blue;"><b>கவுண்டமணி:</b></span> <span style="color: #f3f3f3;"> (சாம் ஆண்டர்சன் கவுண்டரை பார்த்து சிரிக்கிறார்.... ஹிஹிஹி... ) சாம் ஆண்டர்சனின் வாயை கைவைத்து மூடிவிட்டு நீ போ உன்ன அப்பறம் பாத்துகறேன் முதல்ல இந்த கொசுவ அடிக்றேன்... </span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #f3f3f3;">( கவுண்டமணி செந்திலை பார்த்து சிரிக்கிறார்)</span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><span style="color: orange;"><b>செந்தில்:</b></span> <span style="color: #f3f3f3;">என்னென்னெ ரொம்ப சந்தோஷமாக இருக்றீங்க போல இருக்கு?</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><span style="color: blue;"><b>கவுண்டர்:</b></span> <span style="color: #f3f3f3;">அமா ராசா வா வா இப்படி வந்து ஒக்காரு... ஏன்டா பரதேசி நாயே அவன பாத்தா என் சொந்தக்காரன் மாதிரி தெரியுதா? (எட்டி எட்டி உதைக்கிறார்... செந்தில் அண்ணே அண்ணே என்று அலறுகிறார்.)</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #f3f3f3;">அதுல இங்கலிசு வேற சொல்லுவியா சொல்லுவியா...</span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #f3f3f3;">( செந்தில் எழுந்து ஓடுகிறார்)</span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #f3f3f3;">போ போ... இனிமே என்கிட்டே வந்த படுக்க வச்சு குறுக்கெலும்ப மிதிச்சிபுடுவேன் டப்சா தலையா ....</span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #f3f3f3;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><span style="color: #f3f3f3;">( செந்திலும் சாம் ஆண்டர்சனும் ஒன்றாக கை கோர்த்து இளித்துகாட்டிவிட்டு ஓடுகின்றனர்)</span> </span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: #444444;"><span style="color: blue;"><b>கவுண்டமணி:</b></span> <span style="color: #f3f3f3;">( கல்லை எடுத்து எரிந்து ) அடிங்க டேய் இனம் இனத்தோட சேந்துட்டீங்கலாடா படுவா உங்கள அப்பறம் பாத்துகறேன்... நீங்க மட்டும் கைல கெடச்சிங்க உங்கள.... ஐயோ தனிய பொலம்ப விட்டுடாநுங்களே என்ன..</span>. </span></div>
<span style="color: #444444;"><br /></span>
<span style="color: #444444;"><br /></span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-16705304083592730792013-11-30T02:10:00.001-08:002014-02-10T04:59:06.363-08:00இது தமிழ்நாடா இல்லை இலங்கையா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் எங்காவது சந்தித்து கொண்டால் அவர்கள் தாய் மொழியில் தான் பேசுவார்கள். இத்தனைக்கும் தெலுங்கு, மலையாளம் எல்லாம் தமிழிலிருந்து சென்றவை தான் இருந்தாலும் கூட மலையாளிகளோ தெலுங்கர்களோ எங்காவது சந்தித்து கொண்டால் அவர்கள் தாய் மொழியில் தான் பேசுவார்கள். ஆனால் உயர்தனிச்செம்மொழி என்று வர்ணிக்கப்படும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தமிழ் பேசுவதையே கேவலமான செயலாக கருதுகின்றனர்.<br />
<br />
சரி மொழிபற்றில் தான் இப்படி மக்களுக்குள்ளவது ஒற்றுமையாக இருகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. ஒரு தமிழன் முன்னேறிவிட்டால் அதை பார்த்து பொறாமை படுவதில் முதல் ஆளாக இன்னொரு தமிழன் இருக்கிறான். இப்படி இருந்த தமிழகத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் சேர்ந்து போராடிய ஒன்று தான் இலங்கை தமிழர் பிரச்சனை பலர் இறங்கி போராடாவிட்டாலும் அவரவர் மனதிலாவது இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு பெறவேண்டும் என்று நினைத்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மக்களிடமே இந்த எண்ணம் வந்தாலும் தமிழ் நாட்டை ஆளும் அரசியல் வாதிகளுக்கு இந்த எண்ணம் துளியும் இல்லை என்பது சமீபத்தில் அவர்கள் செய்யும் செயலை பார்த்தால் தெளிவாக தெரிகிறது.<br />
<br />
இலங்கையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த இடங்களை தடம் தெரியாமல் அழித்து வருகிறார் ராஜபக்சே. இந்நிலையில் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூரில் இலங்கை போரில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களையும் கொடுமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்றை அமைத்தார் பழநெடுமாறன் அவர்கள். அந்த நினைவு முற்றம் போரில் தமிழர்கள் பட்ட வேதனையை எதிர்காலதமிழர்களுக்கும் நினைவு படுத்தும் வகையில் நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivkGXKg-P1SfmpZ7mSLJjp4TpAQ7EeOibFEZ6bN0uIQwmZFGCr-nyutFioVGh2NLsL3vQYfCpZyb1Z6m2IoHeLbxgQn48ZE_Zzov2Rbtp-wyv5fipmzpDrJrEsIVYFB5cCPCpB0-DQxQ/s1600/7893.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="540" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivkGXKg-P1SfmpZ7mSLJjp4TpAQ7EeOibFEZ6bN0uIQwmZFGCr-nyutFioVGh2NLsL3vQYfCpZyb1Z6m2IoHeLbxgQn48ZE_Zzov2Rbtp-wyv5fipmzpDrJrEsIVYFB5cCPCpB0-DQxQ/s640/7893.jpg" width="640" /></a></div>
<br />
<br />
தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக ஒரு நல்லது செய்தால் அதை தடுப்பதற்கு தான் தமிழகத்தில் ஒரு கூட்டமே இருகிறதே அது எப்படி இந்த நினைவு முற்றத்தை மட்டும் விட்டுவிடும். நடராஜன் என்பவரின் மீது உள்ள தனிப்பட்ட பகையினை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் மீது காட்டியுள்ளது தமிழக அரசு. இலங்கையில் ராஜபக்சே செய்த அதே போன்றதொரு செயலை தான் இங்கு தமிழக அரசும் செய்திருக்கிறது. இவற்றை பார்க்கும்போது தான் எனக்கு <b>"இது தமிழ்நாடா இல்லை இலங்கையா?"</b> என்று கேட்கதோன்றுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizgWYFZ7wmEkTIQfdCgdl0W33rLpUy8iOzqImTR64qNWFaC3M8eHacO1x0eYl3Kr1a9qhPqqiHyckcvQS_phAmE0bIQSH8Mo9llqfrlw28rBtihRI5dY5b5tfJyzblEl0Hy2koRnmJiQ/s1600/01515d92288762db69def2eaffce965e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizgWYFZ7wmEkTIQfdCgdl0W33rLpUy8iOzqImTR64qNWFaC3M8eHacO1x0eYl3Kr1a9qhPqqiHyckcvQS_phAmE0bIQSH8Mo9llqfrlw28rBtihRI5dY5b5tfJyzblEl0Hy2koRnmJiQ/s640/01515d92288762db69def2eaffce965e.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
தமிழர்களுக்காக போராடுதல், தமிழர்களை பெருமை படுத்தும் வகையில் செயல்களை செய்தல் போன்றவை இலங்கையில் தான் முடியாது ஆனால் இன்று தமிழ் நாட்டிலும் அதே நிலை இருப்பது வருத்தத்திற்குரியது. இலங்கை தமிழர்களுக்காக போராடிய <b>லயோலா கல்லூரி</b> மாணவர்களை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக கைது செய்தது தமிழக அரசு. மாணவர்களை கைது செய்ததை கண்டித்து போராடிய மற்ற மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. தமிழ் நாட்டில் நாட்டில் இருந்துகொண்டு தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசியல் வாதிகளை குறை சொல்வதா இல்லை அவர்கள் செய்யும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் நம்மை போன்ற மக்களை குறை சொல்வதா என்றே தெரியவில்லை.<br />
<br />
<br />
வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வீர தமிழர்களின் பரம்பரையில் வந்த நம் மக்களுக்கு உணர்சிகள் செத்துவிட்டதா என்ன?... அப்படியிருக்க வாய்ப்பே இல்லையே ஏன் என்றால் உணர்ச்சி செத்தவன் எல்லாவற்றையும் சகித்துகொள்வான். ஆனால் நம் தமிழ் மக்கள் அவ்வபோது போராட்டம் நடத்திக்கொண்டு தான் இருகிறார்கள். ஆனால் அந்த போராட்டம் எவ்வளவு உயர்ந்த காரணத்திற்காக என்று பார்த்தல் நம் மக்களின் மேன்மை நமக்கு புரிந்து விடும்.<br />
<br />
"என் மதம் தான் பெரியது எப்படி எங்கள் மதத்தை தவறாக காட்டலாம்?" ...<br />
<br />
" எங்கள் தலைவர் ரஜினி தான் பெரியவர் கமல் ரஜினியின் ஸ்டைலுக்கு முன்னால் நிற்கமுடியுமா?"...<br />
<br />
"எங்கள் உலகநாயகன் தான் சிறந்தவர் கமலின் நடிப்பிற்கு முன்னால் ரஜினி தூசு"...<br />
<br />
" எங்கள் தளபதி தான் சிறந்தவர் அதிக ஹிட் படங்களை கொடுத்துள்ளார் "...<br />
<br />
"எங்கள் தல போல வருமா ?"...<br />
<br />
மேலே உள்ளவைகளுக்காக தான் நம் மக்கள் தினமும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைபதிவுகளில் போராடி வருகின்றனர். இந்தகைய உயர்ந்த அவர்களின் கொள்கைகளில் அவர்கள் வென்று விட்டால் அவர்கள் ஜென்ம பலன் அடைந்தவர்களாகி விடுவார்கள். இதற்காக தான் நம் மக்கள் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். தமிழ் மொழி அழிந்துகொண்டு வந்தால் என்ன... தமிழர்கள் அழிந்தால் என்ன... தமிழ் மக்களின் நினைவு சின்னங்கள் அழிந்தால் என்ன... நம் மக்களுக்கு தேவை அவரவர்க்கு பிடித்த நடிகரின் படம் ஓட வேண்டும் அவரவரின் மதம் வளர வேண்டும்.<br />
<br />
மக்களே சிந்தியுங்கள் பொழுதுபோக்கும் சினிமாவும் வேண்டாம் என்று சொலவில்லை. அவை மட்டுமே வாழ்கை என்று நினைப்பதை நிறுத்துங்கள். மூன்று மணிநேர படத்துக்காக உங்கள் மொத்த வாழ்க்கையையும் செலவழிக்காதீர்கள். உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை பாருங்கள் அது தவறில்லை ஆனால் அவர்களுக்காக உங்கள் வாழ்கையையும், நண்பர்களையும், உயிரையும் இழக்காதீர்கள். உங்கள் வாழ்கையை உங்களுக்காக வாழுங்கள். நாம் போராட வேண்டியது ரஜினி கமலுக்காக இல்லை நம் தமிழ் மொழிக்காக, நாம் போராட வேண்டியது விஜய் அஜித்திர்காக அல்ல நம் உடன்பிறவா சகோதரர்களாகிய நம் தமிழ் மக்களுக்காக, நாம் போராட வேண்டியது மதத்தின் வளர்சிக்காக அல்ல நம் தமிழ் நாட்டின் வளர்சிக்காக.....<br />
<br />
<b>சிந்திப்போம் செயல்படுவோம் இணைந்த கைகளால் இமையத்தையும் வெல்லலாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்புரிந்து வெற்றிக்கொடி நாடுவோம்...... </b></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-20164836086405025482013-11-07T05:08:00.002-08:002014-02-10T04:56:28.179-08:00நடிப்பு கடவுள் உலக நாயகன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="font-size: large;">மு</span>தலில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நமது உலகநாயகன் கமல் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMW8KE-qARcO80rz3mOB6-GEJg2Aw0J0T8WnN-lUhNEnNUObBdN0x7quTJQaO-ltFOcQiYOCQ5MP3bBHIaWqF8LtMFOWWmKsp2_-klyZIcS79wfKIoSJmt0VEoN22u3rhmA20CgVbjWw/s1600/kamal.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="303" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMW8KE-qARcO80rz3mOB6-GEJg2Aw0J0T8WnN-lUhNEnNUObBdN0x7quTJQaO-ltFOcQiYOCQ5MP3bBHIaWqF8LtMFOWWmKsp2_-klyZIcS79wfKIoSJmt0VEoN22u3rhmA20CgVbjWw/s400/kamal.gif" width="400" /></a></div>
<br />
<br />
கமல் அவர்கள் தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்று தனது கலை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு அவர் தொட்ட உயரங்கள் சொல்லி தெரியவேண்டியவை இல்லை. நான் சிறு வயதாக இருக்கும்போது எனக்கு தெரிந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே. டிவியில் பாடல் போடும் போது ரஜினி பாட்டு போட்ட உடன் அடுத்து கமல் பாட்டு போடுவார்கள். சில நேரங்களில் கமல் பாட்டு அடுத்து ரஜினி பாட்டு என்று போடுவார்கள். யார் இவர் ரஜினிக்கு இணையாக இவருக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அப்போது நினைப்பேன். சற்று வளர்ந்த பிறகு நான் பார்த்த முதல் கமல் படம் அபூர்வ சகோதரர்கள் அந்த படம் பிடித்திருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOss-M4Myo1Dxk7T9sJjZxC366x4E0N8eSSAiW5P27EnMlRAannjKRsuwAy8i6uAib_dcRizw1SBKCiDVhMq1KUvIDAtvhyFVyV17YLIEXjXNm8nRFqPoMUwG2psLUeEkdkA5JyqplpA/s1600/apoorvasagotharar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOss-M4Myo1Dxk7T9sJjZxC366x4E0N8eSSAiW5P27EnMlRAannjKRsuwAy8i6uAib_dcRizw1SBKCiDVhMq1KUvIDAtvhyFVyV17YLIEXjXNm8nRFqPoMUwG2psLUeEkdkA5JyqplpA/s400/apoorvasagotharar.jpg" width="321" /></a></div>
<br />
அதன் பிறகு சில படங்கள் பார்த்தேன் ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை ஆனால் ரஜினி படங்கள் அனைத்தையும் விரும்பி பார்ப்பேன். கமல் தன் படங்களில் செய்யும் சில நடிப்புகள் அதன் பிறகு பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் படம் முழுவதும் பார்க்கும் எண்ணம் இல்லது இருந்தது. அதன் பிறகு எனது நண்பர்கள் சிலர் கமல் நல்ல நடிகர் என்றும் அவரது பல படங்கள் பல விருதுகளை வாங்கியுள்ளது என்றும் கூறுவார்கள். ஆனால் எனக்கு என்றுமே ரஜினி மட்டும் தான் நடிகர் அவரது ஸ்டைல் போல யாரவது பண்ண முடியுமா என்று தோன்றும்.<br />
<br />
பின்னர் வசூல் ராஜா படம் எனது நண்பன் மூலமாக பார்க்க நேர்ந்தது அந்த படமும் அதில் உள்ள காமெடி பிடித்திருந்தாலும் கமல் மேல் நல்ல அபிப்ராயம் வரவில்லை. இப்படியாக நான் ரஜினிக்கு மட்டுமே ரசிகராக இருந்து அவரை மட்டுமே தமிழ் சினிமாவின் விடிவெள்ளி என்று நினைத்தேன். அதன் பிறகு மற்ற நடிகர்களின் படங்களும் சிலவற்றை பார்க்க ஆரம்பித்தேன். அதிலும் கூட ரஜினி படம் போல அதிரடியாக உள்ள படங்களை மட்டுமே பார்ப்பேன். ரஜினி படங்களுக்கு பின் நான் பார்த்த அதிரடி திரைப்படம் அஜித்தின் அமர்க்களம். அதன் பிறகு அஜித் படங்கள் சிலவற்றை பார்த்தேன் ஆனால் அவற்றில் ஏதும் பிடிக்கவில்லை. பின்னர் நான் விஜயின் திருமலை படம் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பிறகு விஜயின் கில்லி, திருப்பாச்சி போன்ற படங்களை தொடர்ந்து பார்த்தேன். விஜயின் மீது சற்று ஈர்ப்பு வந்தது. <br />
<br />
ஆனாலும் ரஜினி தான் என் தலைவர் என்று மற்ற மாணவர்களுடன் பேசுவேன். அப்போதெல்லாம் எனது நண்பர்கள் அனைவருமே ரஜினி ரசிகர்கள் எனவே நாங்கள் பல நேரங்களில் ரஜினி படத்தை பற்றி பேசுவோம். அவருக்கு இணையாக தமிழ் சினிமாவில் யாருமே இல்லை என்று சொல்லி மகிழ்வோம். திடிரென்று சில நண்பர்கள் கமல் ரசிகர்களாக மாறினார்கள். என்னதான் ரஜினி ஸ்டைலாக படம் நடித்தாலும் கமல் போல அவரால் நடிக்க முடியாது என்று எங்களிடம் சண்டைக்கு வருவார்கள். நாங்கள் பலர் ரஜினி ரசிகர்களாக இருப்போம் அவர்களில் ஒருசிலர் தான் இருப்பார்கள் எனவே நாங்கள் அவர்களை சுலபமாக சமாளித்து விடுவோம். அப்படி ஒரு நாள் பேசும்போது எனது நண்பன் கமல் நடித்த அன்பே சிவம் படம் போல ரஜினியின் ஒரு படமாவது இருக்குமா சொல் என்று கேட்டான். நாங்கள் அப்படி ஒரு படம் வந்தாதா என்று திருப்பி கேட்டோம் அவனால் பதில் பேசமுடியவில்லை.<br />
<br />
எனக்கு அப்படி ஒரு படம் வந்தது என்பதே அவன் சொன்ன பிறகு தான் தெரியும். அதன் பின் ஒரு நாள் அன்பே சிவம் படத்தில் கமல் நடித்த ஒரு காட்சி டிவியில் பார்த்தேன் அதில் கமல் தோற்றமும் அவர் முகமும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் அடுத்த நாள் இதை எனது நண்பர்களிடம் சொல்லி ரஜினி ரசிகர்கள் நாங்கள் சேர்ந்து கமல் ரசிகர்களை கிண்டல் செய்தோம். அப்போது ஒருவன் மிக கோவமாக ஒரு காட்சி வைத்து ஏதும் சொல்ல முடியாது அழகான கமல் அதில் படத்துக்காக அப்படி நடித்திருக்கிறார். படம் பாருங்கள் அப்போது தெரியும் என்றனர். என்னடா இவன் ஏதோ ஒரு சூப்பர் ஹிட் படத்தை சொல்வது போல இந்த தோல்வி படத்தை சொல்கிறானே என்று நினைத்து அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வழியாக அதன் CD கிடைத்தது நான் மட்டும் பார்த்தல் கமல் படத்தை பார்க்க முடியாதே போர் அடிக்குமே என்று நினைத்து எனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு பார்த்தேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt1cOrd0570PJ0PhpHIRNRNybg0z0SNIz_cXPvOc6v2E7nIIiT0hMmYeJzoxn6s344YgPmEJXqlKoVRGC_0VtM2YQbkubrJE-3OTA-L1FkZhC5D7pNe188biVufPNujyOHjePBh10pFQ/s1600/Anbe-Sivam_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="290" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt1cOrd0570PJ0PhpHIRNRNybg0z0SNIz_cXPvOc6v2E7nIIiT0hMmYeJzoxn6s344YgPmEJXqlKoVRGC_0VtM2YQbkubrJE-3OTA-L1FkZhC5D7pNe188biVufPNujyOHjePBh10pFQ/s400/Anbe-Sivam_1.jpg" width="400" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
படம் ஆரம்பித்தது ஒரு ஒரு சில நிமிடங்கள் சென்றது மாதவன் கமலின் முகத்தை பார்த்து தவறாக நினைத்து பின் அவர் அப்படி இல்லை என்று தெரிந்துகொள்வது போல ஒரு காட்சி வந்தது கமல் தோற்றத்தை பார்த்து படத்தை பற்றி தவறாக நினைத்த எனக்காகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது போல இருந்தது. அதன் பின் சில நிமிடங்கள் படம் மிக மெதுவாக சென்றுகொண்டு இருந்தது. எனக்கு போர் அடித்தது மற்ற கமல் படங்களை விட மெதுவாக செல்கிறதே இது எப்படி அவனுக்கு பிடிகிறது என்று நினைத்தேன்.எனது நண்பன் ஒருவன் எழுந்து சென்றுவிட்டான் நானும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். இந்த படத்துக்கு இப்படி ஒரு பில்டப் கொடுத்தானே அதற்காகவது முழுவதும் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் சொல்லி அவனை கிண்டல் செய்ய வேண்டும் என்று நினைத்து பார்க்க ஆரம்பித்தேன். இன்னும் சற்று நேரம் முடிந்த பின் படம் போர் இல்லை என்றாலும் மிக நன்றாக உள்ளது என்று சொல்லுமளவுக்கு இல்லை என்று தோன்றியது கால்வாசி படம் பார்த்த நிலையில் பரவாயில்லை மெதுவாக சென்றாலும் எதோ படத்தில் இருக்கிறது என்று தோன்றியது அதுவரை படத்தை கிண்டல் செய்த எனது மற்ற நண்பர்களும் இப்போது அமைதியாக பார்த்தனர்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
படம் பார்த்து முடிக்கும் போது எங்கள் அனைவர் கண்களிலும் சில துளி நீர் இருந்தது. எனக்கு அதுவரை கமல் மேல் இருந்த அபிப்ராயத்தை அந்த ஒரு படம் மாற்றியது. இப்படி ஒரு படம் தமிழிலா எப்படி இத்தனை நாள் பார்க்காமல் இருந்தோம். அன்பே சிவம் படத்துக்கு இணையாக நான் அதுவரை பார்த்த அணைத்து படங்களையும் நினைத்து பார்த்தேன் ஒப்பிடவே முடியவில்லை. இப்படி ஒரு படம் எப்படி தோல்வி அடைந்தது என்ன காரணம் என்று நினைத்து வேதனை அடைந்தேன். அடுத்த நாள் எனது நண்பனை பார்க்கவே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அவனுக்கு அன்பே சிவம் படம் நான் பார்த்தது தெரியாது. பாதியிலேயே எழுந்து சென்ற நண்பன் அவனிடம் சென்று என்னடா படம் எதோ நல்ல இருக்கும்னு சொன்ன படத்தோட ஆரம்பமே பார்க்க முடியல என்று கிண்டல் செய்தான். அதற்கு அவன் நீ முழுதாக பார்த்தாயா என்று கேட்டான். அவன் அந்த மொக்கையை நான் பார்கவில்லை அவன் தான் பார்த்தான் என்று என்னை கை காட்டினான். அப்போது என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் யாரும் வரவில்லை. எனவே என்னிடம் வந்து என்னடா படம் எப்படி இருந்தது என்று சற்று தயங்கிய படியே கேட்டான். எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இவ்வளவு நாள் அவன் சொல்வதை கேலி செய்துவிட்டு இப்போது எப்படி இதை சொல்வது என்று நினைத்தேன். அன்பே சிவம் படத்தை நினைத்து பார்த்தேன் இந்த படத்தை நன்றாக இல்லை என்று சொன்னால் வேறு எந்த படம் தான் பிடிக்கும் என்று சொல்வது என்று தெரியவில்லை. நான் அவனிடம் சரணடைந்துவிட்டேன். நீ சொன்னது சரி தான் படம் சூப்பர் என்று சொன்னேன். அருகிலிருந்த ரஜினி ரசிகன் என்னடா சொல்ற ஆரம்பமே அப்படி இருந்தது எப்படி நல்ல இருக்குனு சொல்ற என்று கேட்டான். நீ படத்தை முழுதாக பார் படம் உனக்கும் பிடிக்கும் என்றேன். நான் சொல்வதை கேட்டு கமல் ரசிகனான எனது நண்பன் என்னை ஆச்சர்யம்மாக பார்த்தான். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
நான் அவனிடம் இது போல வேறு சில நல்ல கமல் படம் இருந்தால் சொல்லுடா பார்க்கலாம் என்றேன். அவன் என் கையை பிடித்துகொண்டு என்னை கட்டியனைதான். இதை பார்த்த எனது ரஜினி ரசிகனான நண்பன் என்னடா ரொம்ப பண்றீங்க நாளைக்கு நான் படம் பார்த்துவிட்டு பேசுறேன்னு சொன்னான். அடுத்த நாள் அவன் கமல் ரசிகனாகவே மாறிவிட்டான். எங்கள் நண்பர்களில் பலருக்கும் கமல் பிடிக்க ஆரம்பித்தது. கமல் பற்றிய செய்திகளை தேடி படிக்க ஆரம்பித்தோம். அதுவரை இருந்த கமல் ரஜினி சண்டை அன்பே சிவம் படத்துக்கு அப்பறம் இல்லாமல் போனது. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
அதன் பிறகு அவரது படங்களும் அவரது செயல்களும் அவரின் மீது அதிகப்படியான ஈர்ப்பை ஏற்படுத்தியது அதுவரை எல்லா நடிகரையும் பெயர் சொல்லி வேலைக்காரனை அழைப்பது போல சொல்வது தான் வழக்கம் ஆனால் கமல் பெயரை மட்டும் கமல் சார் என்று தான் சொல்லுவேன். கமல் நடித்த பல படங்கள் வெளி வரும்போது ஓடாமல் பின்பு பலருக்கும் பிடிக்கும். இதை அவரே நான் ஓட்டபந்தயத்தில் ஓடவில்லை மாரத்தானில் ஓடிக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
எனக்காக ஏதும் ரசிகர்கள் செய்யவேண்டாம் உங்கள் பெற்றோரை பாருங்கள் என்று சொல்லி ரசிகர்களை தன சுய நலத்துக்காக பயன் படுத்தாமல் இருப்பது அவரின் தனிப்பட்ட சிறப்பு ஆகும். அடுத்ததாக தனது உடல் பாகங்கள் அனைத்தையும் தானம் செய்துள்ளார் கமல் இது ஒன்று போதும் அவரின் மனதை புரிந்து கொள்வதற்கு சான்று.ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான். சினிமாதுறையில் உள்ள அனைத்தையும் கற்றவர் கமல். வணிகத்தனமான சில விஷயங்களில் தன்னை ஈடுபடுதிகொல்லாமல் தரமான படத்தை தருவது மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பவர் கமல். நாட்டில் நடக்கும் அணைத்து நிகழ்வுகளுக்கும் தனது கருத்தை முதலில் பதிவு செயபவர் கமல். சாதி மத பேதம் இல்லாமல் மூட நம்பிக்கைகளில் ஈடுபாடு இருப்பது இவரின் தனிப்பட்ட சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த உயர்ந்த மனிதரை வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnmkPxzlGEuUF_JxAryb6knqDDNf_P2WMo4WqvbMh9eAvYOj2Il4fzilecF1EZbmETh5VTz_FekjOSOTc337RWJWPUuCWT2UJwGBgJmlfZnlr2QFN7QxCBHW0i6X_bNhfB4vHdq0o-xA/s1600/online-birthday-cakes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnmkPxzlGEuUF_JxAryb6knqDDNf_P2WMo4WqvbMh9eAvYOj2Il4fzilecF1EZbmETh5VTz_FekjOSOTc337RWJWPUuCWT2UJwGBgJmlfZnlr2QFN7QxCBHW0i6X_bNhfB4vHdq0o-xA/s400/online-birthday-cakes.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<b>கலைத்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன், நடிப்பு கடவுள், உலகநாயகன் கமல் சார் அவர்களுக்கு என் சார்பாக பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.</b></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-67887679759067178892013-11-02T00:07:00.003-07:002014-02-11T02:59:00.218-08:00ஆரம்பம் (இதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இது தான் நான் எழுதும் முதல் விமர்சனம் பிழை ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்.....<br />
<br />
<br />
நான் விஜய் அஜித்தின் படங்கள் எதையும் முதல் காட்சி பார்க்க மாட்டேன் ஏன் என்று உங்களுக்கே தெரியும் இருவருமே எப்போது சொதப்புவார்கள் என்று தெரியாது. எனவே ஆரம்பம் படத்தை ரிசல்ட் தெரிந்து கொண்டு பார்க்கலாம் என்று நினைத்தேன் நானும் விமர்சனம் என்று நெட்டில் தேடினால் அஜித் ரசிகர்கள் மட்டும் தான் விமர்சனம் எழுதியிருகிரார்கள். அவர்கள் படத்தை விட அஜித்தை புகழ்ந்து எழுதியிருகிரார்கள் ஆனால் படம் எப்படி உள்ளது என்று தெளிவாக சொல்லவில்லை. சரி படம் பார்த்துவரும் நண்பர்களை கேட்கலாம் என்று கேட்டால் அதிலும் குழப்பம் தான். அஜித் ரசிகர்கள் படம் சூப்பர் என்று சொல்கிறார்கள். விஜய் ரசிகர்கள் படம் நன்றாக இல்லை என்று சொல்கிறார்கள் பொதுவான சிலர் பில்லா 2 படத்துக்கு இது பரவாயில்லை ஒரு தடவை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். எனக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது என்ன ஆனாலும் சரி படத்தை பார்த்துவிடுவது என்று முடிவு செய்து பார்த்துவிட்டேன்.<br />
<br />
படத்தை பார்த்தபின்பு இதற்கு விமர்சனம் எழுதலாமா வேண்டாமா என்று எனக்கு குழப்பமாக இருந்தது என்னடா முதல் விமர்சனம் எழுத போறோம் இதை பாசிடிவாக ஆரம்பித்தால் தானே நன்றாக இருக்கும் என்று நினைத்து எழுத வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் படத்திற்கு அஜித் ரசிகர்கள் எழுதிவரும் விமர்சனங்களை பார்த்தல் இவர்கள் நல்ல படம் பார்த்ததே இல்லையா ஏன் இப்படி எழுதுகிறார்கள் அஜித்தை புகழுகிரார்கள் அது சரி தான் ஆனால் படத்தை ஏன் இப்படி புகழுகிரார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கூட 3 ஸ்டார்கள் தான் தரப்பட்டுள்ளன.<br />
இதற்க்கு ஏன் இவ்வளவு விளம்பரம் என்று நினைத்து எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.<br />
<br />
இதோ உங்களுக்கு விமர்சனம்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsg1vSUvtMvxWOmwwcYsUMeOCwz2lEbBgkKOlwkqQegT1an_AnvLSSvuEggtCKVaR6wS2e4mXOa2lTuzzr3B2hwLBqRuOQHCFxpQy4Gynujy9ilDKeAEAbAOPAOHEEoMGsuFAhOYwJJA/s1600/arrambam-poster-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsg1vSUvtMvxWOmwwcYsUMeOCwz2lEbBgkKOlwkqQegT1an_AnvLSSvuEggtCKVaR6wS2e4mXOa2lTuzzr3B2hwLBqRuOQHCFxpQy4Gynujy9ilDKeAEAbAOPAOHEEoMGsuFAhOYwJJA/s400/arrambam-poster-2.jpg" width="400" /></a></div>
<br />
கதை என்று பார்த்தல் நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் அதே பழைய கதை தான் அதில் ஹேக்கிங் போன்ற சில புது விஷயங்களை ஆங்காங்கே தெளித்து அஜித்தை வைத்து சமாளித்து இருக்கிறார். முதல் பாதியில் ஆர்யா காட்சிகள் எல்லாம் கண்றாவியாக இருகின்றன. அஜித்தை காட்டும்போது மட்டும் நன்றாக இருக்கிறது. அஜித் முதல் பாதியில் ஆர்யாவை கடத்தி செய்யும் வில்லத்தனமான காட்சிகளை பார்த்ததும் ஆஹா அதே கேட்டவன் கதையா என்று யோசிக்க தோன்றியது. ஆர்யா அஜித்தை போலீசில் சிக்கவைத்து விட்டபின் உனக்கு இது தான் முடிவு என்று சொல்லும்போது அஜித் இனி தான் ஆரம்பம் என்று சொல்கிறார்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP0dVu2Ah_nbDxwc-b1_f1Qet8US42gqmaFREFGjHkIKQlO4q4cdQIzm5-w8dtzH2ItDXcsMQCDPYGyC1bWdsMARhhHEdTifXUHp5IZqkhwiirbChMhiwqaRUGyMlG1zV_8KyNtKK__w/s1600/02-ajith53.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP0dVu2Ah_nbDxwc-b1_f1Qet8US42gqmaFREFGjHkIKQlO4q4cdQIzm5-w8dtzH2ItDXcsMQCDPYGyC1bWdsMARhhHEdTifXUHp5IZqkhwiirbChMhiwqaRUGyMlG1zV_8KyNtKK__w/s400/02-ajith53.jpg" width="400" /></a></div>
<br />
<br />
அஜித்தே சொல்லிவிட்டார் இனிமேல் படம் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதும் இல்லை என்றாகிவிட்டது. அஜித்தை போலிஸ் கைதுசெய்தபின் அஜித் யார் இதெல்லாம் ஏன் செய்கிறார் என்று ஒரு பிளாஷ்பேக் காண்பிக்கபடுகிறது. கேப்டன் படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு வந்தது அஜித் போலிஸ் அதிகாரி ரானா அவரது நண்பர் ஒரு தீவிர வாத தாக்குதலில் ரானா இறந்துவிடுகிறார். அதற்கு பின்பு தான் தெரிகிறது புல்லட் ப்ரூப் உடையில் ஊழல் நடந்திருப்பது. அதற்க்கு பழி வாங்க தான் அஜித் இதனையும் செய்கிறார் என்று சொல்லி முடிக்கபடுகிறது. இதை ஆர்யா தெரிந்தகொண்டபின் அஜித்துக்கு உதவுகிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMBgJlIyIW2BBLaGaLfqnFaT92YE2h1BD_bAteKxj5IHAPPSVhDfL_zMKyTLhcjAZS9-yb4ee0oB5vgiT6kVHiPYR8sR9mecBTYI8k_GMhyphenhyphen7bfTYnKQab-r0SgEiDyAzfZMITDFp7TAg/s1600/aarambam_movie_stills_ajith_arya_nayanthara_21b9a08.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMBgJlIyIW2BBLaGaLfqnFaT92YE2h1BD_bAteKxj5IHAPPSVhDfL_zMKyTLhcjAZS9-yb4ee0oB5vgiT6kVHiPYR8sR9mecBTYI8k_GMhyphenhyphen7bfTYnKQab-r0SgEiDyAzfZMITDFp7TAg/s400/aarambam_movie_stills_ajith_arya_nayanthara_21b9a08.jpg" width="400" /></a></div>
<br />
<br />
இதற்கு பின்பு நடப்பவை எதிலும் லாஜிக் இல்லை அஜித் நாடு ரோட்டில் ஒரோ ஆபிசரை கொன்றுவிட்டு ஹாயாக நடந்து வெளி நாடு செல்வார் சுவிஸ் பேங்க் லாக்கரை ஆர்யா சுலபமாக கைப்பற்றுவார். கடைசியில் ஊழல் பணத்தை திருப்பி தர வைத்து ஒரு மெசேஜ் சொல்லி படத்தி முடிகிறார்கள்.இதில் நயன்தார உள்ள ஒரு காட்சி ஆபாசதுக்காக கதைக்கு தேவையே இல்லாமல் தினிக்கபட்டிருகிறது. படத்தில் அஜித்தை தவிர சொல்வதற்கு ஒன்றுமே இல்லை முதல் பாதியில் அஜித்தை நடக்கவிட்டு ஒட்டியிருகிரார்கள். இரண்டாவது பாதியில் அதுவும் இல்லை. <br />
<br />
மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் படத்தை அஜீத்துக்காக கொண்டாடலாம் ஆனால் மற்றவர்கள் ஒரு தடவை பார்க்கும் வகையில் தான் உள்ளது. ரிபிட் ஆடியன்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அஜித் ரசிகர்கள் மட்டும் பார்த்து கொண்டாடும் வகையில் ஒரு ஆவரேஜ் படமாக வந்துள்ளது.<br />
<br />
எனது மதிப்பெண்: 40/100</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-16597831883829471432013-11-01T22:46:00.000-07:002014-03-15T06:10:31.018-07:00ஜில்லா-தீபாவளி சிறப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...<br />
<br />
இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் ஜில்லா படத்தின் போஸ்டர் தினசரி பேப்பர்களில் வெளியாகியுள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXuaHBs7de7ze-0PrOQNoSlGf5cMVr2_8mGP9zOlrpaBHPVcXk3azBiH853qGU5tYqwVAA1TL4v4v2jSD9LIuuJpEwVAOW37jncBFkRihNJeT6oWjsZNWIDoHs8O849ArsdkOXsW717g/s1600/jilla-first-look-poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXuaHBs7de7ze-0PrOQNoSlGf5cMVr2_8mGP9zOlrpaBHPVcXk3azBiH853qGU5tYqwVAA1TL4v4v2jSD9LIuuJpEwVAOW37jncBFkRihNJeT6oWjsZNWIDoHs8O849ArsdkOXsW717g/s640/jilla-first-look-poster.jpg" width="408" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUM5c_w433NDijwFmHZ2dSn9YWoMgvliSMVd3auD4XGOh2bLKEEuWivpeMgPEE3g9kJk1VAK2-blOoiGFGiPT5ShMhRMrQpCLKVgRLw2Fphkgp9lTr1q7vqyH1CHFaUX1XY_8ZzIbubw/s1600/01-1383297688-jilla-firstlook-600.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<br />
இளையதளபதியின் ரசிகர்கள் இந்த போஸ்டரை தளபதி தங்களுக்கு தந்த தீபாவளி பரிசாக நினைத்து கொண்டாடுகின்றனர்.<br />
<br />
ஜில்லா படத்தின் கடைசி கட்ட படபிடிப்பு நடந்துவருகிறது. விஜய் இதில் போலிஸ் வேடத்தில் நடிக்கிறார். விஜயுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாது பலரின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இதில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.<br />
<br />
ஜில்லா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் ஜில்லா என்பது படத்தின் சிறப்பு. அஜித்தின் ஆரம்பம் மற்றும் விஜயின் தலைவா 15 கோடியுடன் இரண்டாவது இடத்தில உள்ளது. கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதாலும் மோகன்லால் படத்தில் உள்ளதாலும் ஜில்லா கேரளாவில் மம்முட்டி படங்களை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இப்படி தினமும் ஜில்லவை பற்றி செய்திகள் வெளியாவதால் தளபதி ரசிகர்கள் ஜில்லாவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஜில்லா பொங்கலுக்கு வெளியிடப்படுகிறது. அஜித்தின் வீரமும் பொங்கலுக்கு வெளியிடப்படுகிறது. 7 வருடங்களுக்கு பிறகு விஜய் அஜித்தின் படங்கள் ஒன்றாக ரிலிஸ் ஆகிறது. கடைசியாக போக்கிரி மற்றும் ஆழ்வார் படங்கள் ஒன்றாக ரிலிஸ் ஆகின அதில் தளபதியின் போக்கிரி பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-82410334650123522952013-10-30T22:29:00.003-07:002013-10-30T22:29:55.636-07:00கற்பு தேவையா நம் பெண்களுக்கு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. பெண்கள் அமைப்பினரும் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆனால் எந்த பயனும் இல்லை தவறுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்க்கு காரணம் ஆண்கள் என்றுமே பெண்களை தனக்கு நிகராக நினைக்க மறுக்கின்றனர். சில ஆண்கள் பெண்களை தன்னைவிட குறைந்தவளாக மதிப்பிட்டு கேவலமாக நடத்துகின்றனர். சில ஆண்கள் பெண்களை தன்னை விட உயர்வாக நினைத்து அவர்களுக்காக அதையும் செய்ய தாயாராக இருகின்றனர். இதில் ஒரு உண்மை என்னவென்றால் பெண்களை தன்னை விட தாழ்ந்தவர்களாக நினைத்தாலும் அல்லது உயர்ந்தவாளாக நினைத்தாலும் அது ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு ஆபத்தில் பொய் முடிகிறது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4DY2yTVYte2zrFONOB5QTaQJ6VQqzni3LRyLuiXTUmHaQhstfrZcq_Hlql7XFEvtMV-7fu4UvlwYaCA-4TCbHD6q3CZoMFZ5OMJiEOifIfIx6b6FsgJX0cdB7MH1nJ6GmtJzN3jy5Yg/s1600/rape_6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4DY2yTVYte2zrFONOB5QTaQJ6VQqzni3LRyLuiXTUmHaQhstfrZcq_Hlql7XFEvtMV-7fu4UvlwYaCA-4TCbHD6q3CZoMFZ5OMJiEOifIfIx6b6FsgJX0cdB7MH1nJ6GmtJzN3jy5Yg/s400/rape_6.jpg" width="400" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
பெண்களின் இந்த நிலைக்கு காரணம் நம் முன்னோர்கள் பாரம்பரியம் பண்பாடு என்கிற பெயரில் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் இப்படி இருந்தால் தான் அவள் பெண் என்று பெண்களை மிகைப்படுத்தி சித்தரித்தது தான். புராணங்களில் பெண்கள் மிக உயர்ந்த கடவுள் போன்றும் பெண் சரியில்லை என்றால் குடும்பமே அழிந்துவிடும். எனவே பெண் என்பவள் தன் சுய உணர்வுகளை விட தன் குடும்பம் குழந்தைகள் என தியாக உணர்வோடு வாழும் புனிதர்கள் போல காட்டப்பட்டு இருகின்றன. பெண்கள் என்றுமே தவறு செய்துவிட கூடாது என்று அவர்களுக்கு கற்பு என்ற ஒன்றை திணித்துள்ளனர். ஆனால் ஆண்களுக்கு அந்த கற்பு என்பது எதுவும் இல்லை தான் சுதந்திரமாக இருக்க விரும்பும் ஆண் அதற்காக பெண்களை சிறை வைக்கும் விதத்தில் கற்பு பெண்களுக்கு மட்டும் ஒரு தனி விதிமுறைகளை விதிதான். அவள் இப்படி தான் உடை அணிய வேண்டும் இப்படி தான் நடந்துகொள்ளவேண்டும் என்று இவன் தீர்மானித்து அடுத்து வரும் தனது தலைமுறைகளுக்கும் அதையே சொல்லிகொடுதான்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-mhXT_YXgDtjAXTxp0egWhN6uBM7H6gcL41YeE9eMW8RHXom3lC3cg1oLq-ATIlW3JIcTcrNCgh4gvdZ5dCJQ4y44QnRgICWtx-At7aX847vlCESxu6HaMwGoj5rf7DN0_sWc3LF4og/s1600/manthiram1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-mhXT_YXgDtjAXTxp0egWhN6uBM7H6gcL41YeE9eMW8RHXom3lC3cg1oLq-ATIlW3JIcTcrNCgh4gvdZ5dCJQ4y44QnRgICWtx-At7aX847vlCESxu6HaMwGoj5rf7DN0_sWc3LF4og/s400/manthiram1.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
நாகரீகம் அறியாத பெண்கள் அன்றைய காலகட்டங்களில் ஆண்கள் சொல்வதை அப்படியே ஏற்று நடந்தனர். எனவே ஆண்கள் பெண்களை மிக உயர்வான அடிமைகளாக மதித்தனர். சக்தியின் அடையாளமாக பார்வதி காணப்பட்டாலும் சிவனை சார்ந்து தான் பார்வதி இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள். பெண் தன சுய உணர்வுகள் துக்கங்கள் சந்தோஷங்கள் ஆசைகள் அனைத்தையும் தன்னுள் புதைத்து ஆணுக்காகவே வாழ்ந்து வந்தால் அவள் எந்த சூழ்நிலையிலும் அவள் இஷ்டப்படி நடந்துகொள்ளகூடது என்பதற்காக கற்பு என்று ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தினான். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXc1VshdZH8_DY_aXaiM8sk2j_uJOPwp8n9gqNvXtbQPke0BLnQUCnE2Tki1Ph37mmFeEeX1Xxs0_JEugDvt21NKJW8PiAmRT75TFnyPaMK05Yq0PM3oGofwkMPv-vz7ZhyphenhyphencZowISiWQ/s1600/drinkers+of+girls.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXc1VshdZH8_DY_aXaiM8sk2j_uJOPwp8n9gqNvXtbQPke0BLnQUCnE2Tki1Ph37mmFeEeX1Xxs0_JEugDvt21NKJW8PiAmRT75TFnyPaMK05Yq0PM3oGofwkMPv-vz7ZhyphenhyphencZowISiWQ/s400/drinkers+of+girls.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
நாகரீகம் அறிந்த படித்த இந்த காலத்து பெண்கள் விழிப்படைந்தனர். தான் ஒன்றும் புனிதமானவள் அல்ல ஆண்களை விட குறைந்தவர்களும் இல்லை உயர்ந்தவர்களும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம் ஆணைகளுக்கு எப்படி உணர்வுகள் ஆசைகள் உள்ளதோ அதே போல தனக்கும் உள்ளது அதை ஏன் நான் பிறருக்காக மற்ற வேண்டும் என்று நனைக்க தொடங்கினர். நான் இப்படி தான் உடையனிய வேண்டும் இப்படி தான் நடந்துகொள்ளவேண்டும் என தனக்கு உத்தரவு போட ஆண்கள் யார் என நினைக்கதொடங்கினர். தன விருப்பம் போல நடந்துகொண்டனர். இதிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பம் ஆனது தன் விருப்பத்துக்கு ஏற்றார் போல நடதுகொண்ட பெண்ணை உயர்வாக கடவுளை போல நினைத்த ஆண் தன் விருப்பத்தை மீறி நடந்த பெண்ணை பேயாக பார்க்க ஆரம்பித்தான். அவர்களுக்கு எதிராக படங்களை எடுத்து பெண் முன்னர்காலத்தில் இப்படி இருந்தால் இப்போது இப்படி ஆகிவிட்டால் என்று கருத்துகளை பரப்ப ஆரம்பித்தான். கடைசியில் அவளை வேட்டையாட ஆரம்பித்தான் அதற்கு காரணமாக அவள் உடை பழக்கவழக்கங்களை காரணமாக சொல்ல ஆரம்பித்தான்.<br />
<br />
பெண் தன் கையை மீறி பொய் விட்டாளே என்று நினைத்துகொண்டிருந்த ஆண்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து பெண்களையே குற்றம் சுமத்தினர். தவறு செய்யும் ஆண்கள் எப்படி பெண்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்வதை விடுத்தது பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று கொடுக்க ஆரம்பித்தனர். இதை இந்தியாவின் ஒரு அமைச்சரே செய்தது இந்தியாவிற்கே கேவலமான ஒன்றாகும். ஆண்களின் இந்த மனபோக்கின் விளைவு இந்திய பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாடு என்று மேலை நாடுகளின் கருத்துகணிப்புகள் சொல்கின்றன. மற்ற நாடுகளின் முன் இந்திய தலைகுனிய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.<br />
<br />
இதற்க்கு முழுமுதற்காரணம் ஆண்களின் சுயநலம் பெண்ணையும் தன்னை போல பார்க்காமல் ஒரு பொருளை போல ஆர்க்கும் தன்மை. கற்பழிப்பின் பிறகு அந்த பெண் வாழவே கூடாது என்று பெண்களே நினைப்பதற்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் கற்பு என்கிற ஒரு மாயை. ஒரு கொலை செய்தவன் கூட தண்டனை அனுபவித்து வந்துவிட்டு நான் ஒரு கொலை செய்துள்ளேன் என்று பெருமையாக சொல்லிகொல்வான். ஆனால் ஆண்களின் இச்சைக்கு ஆளாகி கற்பழிக்கப்பட்ட ரூ தவறும் செய்யாத பெண்ணை பர்ர்ப்பவர்கள் அனைவரும் என்னவோ அவள் தான் தவறு செய்துவிட்டது போல அவளை கேவலமாக பேசுவார்கள். அதற்க்கு காரணம் அவள் அவளது கற்ப்பை இழந்துவிட்டால் என்பது தான். ஆண்களால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பு பெண்ணிடம் இருந்து போய்விட்டதாக நினைத்து அவளை எல்லாரும் செய்கின்றனர். ஆனால் கற்பழித்த ஆண்களோ 7 வருடம் தண்டனை அனுபவித்து வெளியே வந்து வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கின்றனர்.<br />
<br />
இது இந்தியாவில் பாரம்பரியமாக நடந்துவரும் ஒன்று தான். அதிஷ்டவசமாக தற்போது ஒரு கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை கொடுக்கப்படுள்ளது. இது ஆரோகியமான மாற்றம் தான் ஆனால் இதுவரை பெண்கள் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்லமல் தவித்து வரும்போதும் அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்யும்போதும் கைகட்டி வேடிக்கை பார்த்த ஆண்கள் கூட்டம் ஆண் தண்டனை அடைந்தவுடன் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். பெண்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு இல்லாத மனித உரிமை ஆண்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது.<br />
<br />
இபோது பெண்கள் சில ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை பெரிய தவறாக பேசப்படுகிறது. பெண்கள் ஆண்களை காதலித்து ஏமாற்றி விட்டு செல்கின்றனர். என்று கூறப்படுகின்றது. பெண்கள் க்ளப்களில் மது அருந்துகின்றனர் புகைபிடிகின்றனர் என்று புலம்ப ஆரம்பித்து உள்ளனர் ஆண்கள். அதற்காக பாடல் எல்லாம் கூட பாடி அதை அதே மாதிரியான ஆணாதிக்க எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வெளியிட்டு சந்தோசப்படுகின்றனர். பெண்கள் இதெல்லாம் தற்போது செய்வது தவறு என்றால் பல காலங்களாக ஆண்கள் இதையெல்லாம் செய்து வருகிறார்களே அவர்களை என்ன செய்யலாம். பல காலங்களுக்கு முன்பிருந்தே ஆண்கள் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளனர் மது அருந்துகின்றனர் புகைபிடிகின்றனர் காதலித்து உறவு கொண்டு பின்பு ஏமாற்றி செல்கின்றனர். இதெற்கெல்லாம் பெண்கள் பாட்டு பாடி புலம்பவில்லையே.<br />
<br />
பெண் உரிமை என்று இன்று குரல் கொடுக்கும் அனைவரும் ஒன்றை உணரவேண்டும். இப்போது நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் அப்போது பெண்கள் மீது திணிக்கபட்ட சில வழிமுறைகள் தான் காரணம் பாரம்பரியம் என்று அவற்றை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காமல் பெண்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று நினைத்து அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கற்பு, உடை, பழக்க வழக்கம் என்று சில கட்டுகதைகளை அகற்றினாலே தவறுகள் குறைந்துவிடும். ஒரு பெண் ஆபாசமாக உடை அணிகிறாள் என்பது தவறுக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஆபாசம் என்பது அவள் அணியும் உடையில் இல்லை தான் இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவரும் பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்க நேரிடும் அது போதோ அல்லது மற்ற நோய்களுக்கு சிகிச்சை அழிக்கும்போதோ இருக்கலாம் அனால் அப்போது மருத்துவருக்கு ஆபாசமாக தோன்றுவது இல்லை. ஆனால் அதே உடையில் பார்க்கும் மற்றவர்க்கு ஆபாசமாக தோன்றுகிறது என்றால் அது உடையில் இல்லை பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது. <br />
<br />
பெண் என்பவள் கடவுளும் இல்லை அடிமையும் இல்லை தன்னை போன்று அவளும் ஒரு உயிர் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.<br />
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-11712960050050304182013-10-29T03:38:00.000-07:002014-02-10T04:56:28.172-08:00விஜய் ரசிகர்களின் நல்ல மனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இன்று நான் கேள்விப்பட்ட செய்தி ஒரு விஜய் ரசிகனாக எனக்கு மகிழ்ச்சியை தந்தது. அது என்னவென்றால் மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அஜித்தின் ஆரம்பம் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து பேனர் வைதுள்ளர்னர் என்பதாகும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyiT56OxeT6nAiUAuQa4bw5rp03ifAZVKH-fUwK6S52fQiD_17bZuDhTXL_Bppz8ZV86bEG4C-Gr3cCAW-5c8mqgsGznsGkAQJMsaodGQHYG2m-Rg4TZMGNZoW_4wfTmmNA-J9TN4E4w/s1600/aarambam+banner+by+vijay+fans.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyiT56OxeT6nAiUAuQa4bw5rp03ifAZVKH-fUwK6S52fQiD_17bZuDhTXL_Bppz8ZV86bEG4C-Gr3cCAW-5c8mqgsGznsGkAQJMsaodGQHYG2m-Rg4TZMGNZoW_4wfTmmNA-J9TN4E4w/s400/aarambam+banner+by+vijay+fans.PNG" width="393" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
எதிரியையும் வாழ்த்தும் மனப்பான்மை உள்ளவர்கள் நம் தமிழ் மக்கள் என்பது நம் தமிழ் வரலாறுகளை பார்த்தல் நமக்கு தெரியவரும். ஆனால் காலப்போக்கில் நண்பனாக இருந்தால் கூட பிறரை வாழ்த்த நம் மக்களுக்கு மனம் வரவில்லை. அதிலும் எதிரி என்றால் அவன் வாழவே கூடாது அழிந்து போக வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம். அந்தவகையில் விஜய் என்னவோ தேச துரோகம் செய்துவிட்டது போல எப்போதும் அவரை எதிரியாகவே பார்ப்பவர்கள் அஜித ரசிகர்கள்(அஜித் அல்ல) என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் படங்கள் வெளிவரும் முன்பே அதை எதிர்த்து வசங்களை எழுதி பேனர் வைத்து அதை தோல்வி பெற வைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அஜீத் ரசிகர்கள். சமீபத்தில் துப்பாக்கி படம் வெளிவந்து நன்றாக ஓடிகொண்டிருக்கும் பொது அதை எதிர்த்து கருப்பு தீபாவளி என்று பேனர் வைத்தனர் அஜித் ரசிகர்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
நான் கூட அதே போல ஆரம்பம் படத்துக்கு விஜய் ரசிகர்களும் செய்வார்கள் என்று நினைத்து இருந்தேன் ஆனால் அனைவரும் வியக்கும் வண்ணம் அஜித் படத்துக்கு ஆதரவாக பேனர் வைத்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தங்களையும் தங்கள் தலைவன் விஜயையும் எதிரியாக நினைக்கும் அவர்களின் தலைவன் படத்துக்கு வாழ்த்து பேனர் அடித்து நாங்கள் எதிரியையும் வாழ்த்தும் அன்பு தமிழ் உள்ளங்கள் என்று நிருபிதுவிட்டனர். எதிரியையும் வாழ்த்தும் அன்பு விஜய் ரசிகர்களில் நானும் ஒருவர் என்று சொல்வதில் எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZVDIHcFWpc_nkAaL1dDCxXuqTespp7RLHx-t3FaRF0m8jgqGZp5Ur3IQ-twIg7viLG1y4t1h_Ogf62PZkOcjtr1eg0t4VoVu5X6qK8xfC_fVukKE3HQeseDpyeaqgLEeG7XcS3iKmww/s1600/vijay34.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZVDIHcFWpc_nkAaL1dDCxXuqTespp7RLHx-t3FaRF0m8jgqGZp5Ur3IQ-twIg7viLG1y4t1h_Ogf62PZkOcjtr1eg0t4VoVu5X6qK8xfC_fVukKE3HQeseDpyeaqgLEeG7XcS3iKmww/s400/vijay34.jpg" width="302" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
விஜயையும் விஜய் ரசிகர்களையும் தேவையே இல்லாமல் கிண்டல் செய்யும் அஜித ரசிகர்களே இப்பொழுதாவது திருந்துங்கள். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<b>விஜய்</b>: உன்ன யாரோ பெத்திருக்க என்ன யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தன்பி டா...</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<b>அஜித்</b>: நான் எல்லாருக்கும் ப்ரண்டு இப்போ மாறிபோச்சு ட்ரெண்டு இந்த பூமி நம்ம கிரவுண்டு வ அடிப்போம் நல்ல ரவுண்டு....</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
"தளபதி ரசிகர்கள் என்று சொல்வதில் நாங்கள் பெருமையடைகின்றோம்... "</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
" தலையை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்..."</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
" தமிழனாக வாழவே நாங்கள் பிறந்திருகின்றோம்..."</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
" வாழ்க தமிழ்... வளர்க தமிழ்நாடு...</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-68374097045028892252013-10-26T23:22:00.003-07:002014-02-10T04:59:06.367-08:00சரவணா ஸ்டோரும் ஒரு பெண்ணும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="color: cyan;"><span class="userContent"> நண்பர் ஜோ பிரிட்டோ அவர்கள் சரவணா ஸ்டோர் போனபொழுது அங்கு ஒரு பெண்ணுடன் உரையாடியதை தனது முகபுத்தகத்தில்(facebook) வெளியிட்டிருந்தார். அதை அப்படியே உங்களுக்காக வெளியிடுகிறேன்.</span></span><br />
<br />
<span class="userContent"> </span><br />
<span class="userContent"> இரண்டு நாட்களுக்கு முன்பு <br /> சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. <br />
அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக
ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்
அந்தப் பெண். மெலிந்த தேகம். ம<span class="text_exposed_show">ிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். அந்த பெண்ணிடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்க்கு அந்த பெண் சொன்ன பதில்களும்.</span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhROBgg3lET0kRcOBuVxw7gjF2_5tpXCJ38SqgAYXGWqyMFpO7pOcj1HbX77ahOv4_GMavfWeDU2KAG3SLtN116MOeSusTsHi5McRdc5v5F9ZKxLqFsiLKkKKMnu4edfkKy8it7XMm0ug/s1600/sad-woman-silhouette.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhROBgg3lET0kRcOBuVxw7gjF2_5tpXCJ38SqgAYXGWqyMFpO7pOcj1HbX77ahOv4_GMavfWeDU2KAG3SLtN116MOeSusTsHi5McRdc5v5F9ZKxLqFsiLKkKKMnu4edfkKy8it7XMm0ug/s400/sad-woman-silhouette.jpg" width="300" /></a></div>
<br />
<span class="userContent"><span class="text_exposed_show"><br /> <b><span style="color: cyan;">கேள்வி</span>:</b> ‘‘எந்த ஊர் நீங்க?’’<br /> <br />
பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய
இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப்
போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150
பேராச்சும் இருப்போம்..’’<br /> <br /> கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ <br /> <br /> பதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ <br /> <br /> கேள்வி:‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’<br /> <br />
பதில்:‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும்.
அவ்வளவுதான்..’’ ‘‘சாப்பாடு?’’ ‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய்
சாப்பிட்டு வருவோம்.’’ ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’ ‘‘12 மணி,
1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’ <br /> <br /> கேள்வி:‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’<br /> <br /> பதில்:‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’ <br /> <br />
கேள்வி: ‘‘உட்காரவே கூடாதா?’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில
சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா
கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’ - (யாரோ ஒரு
வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர்
கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை
எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.) <br /> <br /> கேள்வி: ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘5,500 ரூபாய்.’’</span></span><br />
<span class="userContent"><span class="text_exposed_show"><br /> கேள்வி: ‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’ <br /> <br />
பதில்:‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’ ‘‘இதை வெச்சு
என்ன பண்ணுவீங்க?’’ ‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு
இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல
போட்டுருவேன்’’<br /> <br /> கேள்வி: ‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’ <br /> <br /> பதில்:‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’ <br /> <br /> கேள்வி::‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’ </span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்:‘‘ஆமாம்.’’</span></span><br />
<span class="userContent"><span class="text_exposed_show"><br />
கேள்வி: ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’ </span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘சூப்ரவைசருங்க
வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா
ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’<br /> <br /> கேள்வி: ‘‘லீவு எல்லாம் உண்டா?’’<br /> <br />
பதில்: ‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய்
சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">கேள்வி: ‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே
கிடையாதா?’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம்
பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’ </span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">கேள்வி: ‘‘அப்போ
ஊருக்குப் போறது எல்லாம்?’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம்
ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த
லீவுக்கும் சம்பளம் கிடையாது’’<br /> <br /> கேள்வி: ‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’<br /> <br />
பதில்: ‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல
எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா
இருந்தா எடுப்போம்’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">கேள்வி: ‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான்
எங்களுக்கும்’’ <br /> <br /> கேள்வி: ‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘தெரியலை..’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">கேள்வி: ‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘நெல் விவசாயம்..’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">கேள்வி: ‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’<br /> <br /> கேள்வி: ‘‘இங்கே இப்படி
கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப்
பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க
முடியாதா?’’<br /> <br /> பதில்: ‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம்
கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும்
ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’</span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">கேள்வி: ‘‘இங்கே எவ்வளவு
பேரு வேலைப் பார்ப்பீங்க?’’ </span></span><br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show">பதில்: ‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க
மட்டும் 800 பேர் இருக்கோம்.’’ </span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKK3icwUTNb95O3A5NwaS-3Q1anUWTW4ctVRHs7SysRmjcBVVyZbvJJgNRG6HJ2uBhW6ucBAYVDKIR1svk0f1E_phe5UxhkEecDshBHJqmJDZqTqyKf3_bWwxqwViGLpY1TRUPX_us5w/s1600/1383956_540850795996016_2134311960_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKK3icwUTNb95O3A5NwaS-3Q1anUWTW4ctVRHs7SysRmjcBVVyZbvJJgNRG6HJ2uBhW6ucBAYVDKIR1svk0f1E_phe5UxhkEecDshBHJqmJDZqTqyKf3_bWwxqwViGLpY1TRUPX_us5w/s400/1383956_540850795996016_2134311960_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<span class="userContent"><span class="text_exposed_show"><span style="color: cyan;">கிராமத்திலிருந்து வந்து இப்படி கஷ்டப்படும் நம் பெண்கள் குழைந்தைகளின் நிலை என்று மாறும்? சரவணா ஸ்டோர் மட்டும் இல்லை இன்னும் நிறைய கடைகளில் பெண்கள் குழந்தைகள் நிலை கவலை அடையும் விதமாக உள்ளது. பெண்களின் உயிருக்கும் கர்ப்புக்கும் பாதுகாப்பு இல்லாதவண்ணம் உள்ளது இந்த மாதிரியான விஷயங்களை நமது அரசாங்கமோ அல்லது போலிசோ பெரிதாக எடுத்துகொள்வது இல்லை அதானால் இவர்களின் அவல நிலை வெளியில் வராமலே மறைந்து விடுகிறது.</span> </span></span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1595640015273244494.post-9217664219286628132013-10-26T04:05:00.001-07:002014-02-10T04:59:06.370-08:00வலைப்பதிவில் மதவெறி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: left;">
<span style="color: blue;"><b>இ</b>ந்த பதிவு குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் நண்பரின் வலைப்பதிவை பற்றியது. இங்கு நான் குறிப்பிடுபவை அனைத்தும் அந்த நபரை பற்றி தானே தவிர முஸ்லிம் மதத்தை பற்றியோ அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் நண்பர்களை பற்றியோ அல்ல.</span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நான் நேற்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது ஒரு பதிவு என் கண்ணில் பட்டது. நடிகர்களுக்கு அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது என்பதை பற்றிய பதிவு அது எனக்கும் கூட நடிகர்கள் அரசியலுக்கு வருவது பிடிக்காத ஒன்று ஏதோ இவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று நாம் பார்த்துவிட்டு இவர்களுக்கு ரசிகர்களாக இருப்பதற்காக நாட்டையே இவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவோம் என்று நினைகிறார்கள். எனவே எனக்கும் இது பிடிக்காத ஒரு விஷயம் என்பதால் சரி நாமும் படித்து பார்க்கலாமே என்று படித்தேன். பதிவு மிக நன்றாக இருந்தது. எந்த நடிகருக்கும் சார்பாக எழுதாமல் ரஜினி,கமல்,விஜய்,அஜித் என்று அனைவரையும் கண்டித்து எழுத்தியிருந்தார். எனக்கு அந்த பதிவு மிகவும் பிடித்து போய்விட்டது.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyViUTefyQb-tgwWw1ZC5iUrPlmAXKP5yTwBQvmwoXQl0GLgLQJQe7B_onaW80hZaL7rKHAYij2HblYm07sIM0EROqiicmzH1QCkf7La8AqpsLYcCfsvcsSRayTzqwBkMm6p05ICuLjA/s1600/kamal-rajini-ajith-vijay.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyViUTefyQb-tgwWw1ZC5iUrPlmAXKP5yTwBQvmwoXQl0GLgLQJQe7B_onaW80hZaL7rKHAYij2HblYm07sIM0EROqiicmzH1QCkf7La8AqpsLYcCfsvcsSRayTzqwBkMm6p05ICuLjA/s400/kamal-rajini-ajith-vijay.jpg" width="400" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
அடுத்தடுத்து அவரது பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். சில படங்களின் விமர்சனங்களை பார்த்தேன் மிகவும் கேவலமாக எழுதியிருந்தார். நடிகர் நடிகைகளை அவன் அவள் என்று தான் எழுதியிருந்தார் நாம் ரொம்ப "ரா"வான ஆள் போல என்று நினைத்துகொண்டேன் மேல படிக்க ஆரம்பித்ததில் எந்திரன் விமர்சனம் போடப்பட்டு இருந்தது. எந்திரன் தான் பலருக்கு பிடித்த படமாயிற்றே இவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். அதில் படத்தை பற்றி அவர் விமர்சித்ததை விட ரஜினி ஷங்கர் இருவரையும் தான் அதிகம் விமர்சித்தார்.அப்போதே எனக்கு லேசாக பொறி தட்ட ஆரம்பித்தது பின்பு ரஜினியை பிடிக்காது போல இருக்கிறது ஆனால் ஷங்கரை ஏன் இவர் திட்ட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
அடுத்து நண்பன் விமர்சனம் போடப்பட்டு இருந்தது. வலையுலகில் பலர் இந்த படத்தை நன்றாக உள்ளது என எழுதினார்களே இவர் என்ன சொல்லியிருக்கார் என்று பார்த்தேன் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது இந்த படத்தையும் மிக கேவலமாக விமர்சித்திருந்தார். படத்தில் அவர்கள் சொல்லவந்த கருத்தை பற்றியோ அல்லது நடிப்பை பற்றியோ ஏதும் சொல்லவில்லை. படத்தை நல்ல இல்லை என்று விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே விமர்சிக்கபட்டிருப்பது நன்றாக தெரிந்தது. எனக்கு புரியவில்லை என்ன இவர் நல்ல படங்களை கூட கேவலமாக எழுதுகிறாரே என்று நினைத்தேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
சரி அடுத்து ஏதாவது படத்தின் பதிவை பார்க்கலாம் என்று பார்த்தேன் </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
பில்லா 2 இருந்தது இந்த படம் பலருக்கும் பிடிக்காமல் போனது எல்லாரும் இதை கேவலமாக எழுதின்னர்கள் சரி இவர் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்தல் ஐவரும் அதையே தான் செய்திருக்கிறார். ஆனால் சற்று வித்தியாசமாக அஜித்தை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருந்தார். அஜித்திற்கு கோட் சூட் கூலிங் கிளாஸ் எவ்வளவு பொருந்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இவர் அஜித் கோட் சூட் போட்டு நடந்து வருவதை கிண்டல் செய்திருந்தார். என்னடா இவர் பில்லா 2 படம் கதை சரியில்லை திரைகதை சரியில்லை இயக்கம் சரியில்லை என்று எழுதுவார் என்று நினைத்தால் இப்படி அஜித்தை பற்றி கேவலமாக எழுதுகிறாரே என்று யோசித்த படியே அடுத்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அடுத்து அதில் அஜித் இலங்கை அகதியாக வருவதையும் அதைவைத்து விடுதலை புலிகளையும் திட்டினார். அடுத்து இந்த படத்துக்கு பொய் எக்கச்சக்க பில்டப் கொடுத்து தல முண்டம் என்று ஏதேதோ எழுதியிருந்தார் அவர் அஜித்தை பற்றி எழுதியதை படித்து விஜய் ரசிகனான எனக்கே கோபம் வந்து விட்டது. இந்த அளவிற்கு திட்டும் அளவுக்கு அஜித் என்ன தவறு செய்துவிட்டார் என்று கேட்க தோன்றியது. அடுத்து சில படங்களின் விமர்சனங்களை பார்த்தேன் பாவம் அதற்கும் இதே நிலைமைதான் என்னடா இவர் எல்லா படத்தையும் நல்ல இல்லை என்று சொல்லுகிறார் என்று நினைத்தேன். இவருக்கு சினிமா பிடிக்காது போலும் அதனால் தான் எல்லாரையும் திட்டுகிறார் என்று நானாக நினைத்து கொண்டு எதுவும் புரியாமல் மற்ற பொதுவான பதிவுகளை பார்க்கலாம் என்று மற்ற தலைப்பில் படிக்க ஆரம்பித்தேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGLAfqdri4tbevNdzvVBdrD_ZKecaRyrPF8BaF2tdeTKzrFr9ygoyeiFeV51LfI-zdmRWNpxpiMEVeUlKVqE1SiLNzvbIcfsmDNAV_NcG-y19E59PODqmV6pdEQ51N4Uc-WHv2cct6UQ/s1600/confused-man.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="247" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGLAfqdri4tbevNdzvVBdrD_ZKecaRyrPF8BaF2tdeTKzrFr9ygoyeiFeV51LfI-zdmRWNpxpiMEVeUlKVqE1SiLNzvbIcfsmDNAV_NcG-y19E59PODqmV6pdEQ51N4Uc-WHv2cct6UQ/s400/confused-man.jpg" width="400" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
விடுதலை புலிகள் இலங்கை தமிழர்களை பற்றிய பதிவு ஒன்று இருந்தது சினிமா இது போன்ற பொது விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பரே என்று ஆர்வமாக பார்க்க அதிலும் எனக்கு ஏமாற்றம் தான் இலங்கை தமிழர்களை கொலைகாரர்கள் என்றும் அவர்கள் இனம் அழிக்கபடுவது தவறு என்றும் எழுதியிருந்தார். அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழுணர்வு பற்றி பேசுபவர்களையும் கேவலமாக விமர்சித்திருந்தார். இங்குள்ள தமிழர்களையும் தமிழ் தமிழ் என்று மொழி வெறி உள்ளவர்கள் என்று கேவலபடுதியிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை தாய்மொழியின் மீது பற்று வைப்பது நல்லது தானே அதிலும் உலகிலேயே சிறப்பு வாய்ந்த பழமையான செம்மொழி மீது பற்று வைத்திருப்பது நல்லது தானே தமிழ் இருந்துகொண்டு தமிழ் பேசும் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று குழம்பினேன். பிறகு தான் தெரிந்தது அவர் தமிழ் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் என்று.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVZ9iwdNrmVe1xJ3BPXdz_LkgTNa8c_G0XHXT6rwa1_wKrPlS51roP_YXae_pD43jR4-YI6rPM0tnxN3WXKGyQtU9ZxkuGjp9aR-7EA7mMQ0IdlNulBa63Hhfq-P1sdhvBIq0fPda2UQ/s1600/talib.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVZ9iwdNrmVe1xJ3BPXdz_LkgTNa8c_G0XHXT6rwa1_wKrPlS51roP_YXae_pD43jR4-YI6rPM0tnxN3WXKGyQtU9ZxkuGjp9aR-7EA7mMQ0IdlNulBa63Hhfq-P1sdhvBIq0fPda2UQ/s400/talib.jpg" width="400" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
ராஜீவ் காந்தியை விடுதலைபுலிகள் கொன்றதற்காக லட்சகணக்கான தமிழர்களை கொன்றது சரி என்று ஒரு பதிவில் போட்டிருந்தார். அங்கு வந்த ஒருவர் அவரிடம் ராஜீவ் காந்தி என்ற ஒரு உயிரை கொன்றதற்காக எத்தனை தமிழர்கள் சாகடிக்கபடுகிரார்கள் அதை நாங்கள் கேட்டல் தவறா என்று கேட்டார் அதற்கு அவர் சொன்னார் பாருங்கள் ஒரு பதிலை நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். குஜராத்தில் அத்தனை முஸ்லிம் கொல்லப்பட்ட பொது எதுவும் கேட்கவில்லை இப்போது மட்டும் அந்த கொலைகார் புலிகளுக்காக வாதாடுகிரார்களா? என்று ஒரு கேள்வியை கேட்டார். அப்போது தான் தெரிந்தது அந்த நண்பர் ஒரு முஸ்லிம் என்று. அதாவது அவர் கருத்துப்படி முஸ்லிம் மக்களை கொன்றுவிட்டார்கள் எனவே இதற்க்கு பிறகு யாரை கொன்றாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க கூடாது. அவர் காரணமே இல்லாமல் பில்லா 2 வில் அஜித்தை கேவலமாக பேசியதற்கு காரணம் அஜித் அதில் இலங்கை தமிழ் அகதியாக நடித்து தான் காரணம் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
தமிழர்களை பற்றி கேவலமாக ஒரு நடிகை பேஸ்புக்கில் ஒரு ஒரு கருத்தை வெளியிட்டார். அதற்க்கு அணைத்து தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் அதற்க்கு இவர் ரஜினி கமல் ஐஸ்வர்யா என சம்பந்தம் இல்லாமல் எதைஎல்லமோ எழுதி உங்களுக்கு வெட்கமாயில்லை என்று கேட்கிறார். அதாவது கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினியை நாம் ஏற்று கொண்டோம் எனவே அந்த கர்நாடக பெண் சொன்னதையும் ஏற்றுகொள்ள வேண்டுமாம். வந்த அனைவரையும் வாழவைக்கும் தமிழ் நாடு ஆனால் அதே தமிழன் மற்ற மாநிலங்களுக்கு போனால் அவனுக்கு குறைந்த மதிப்பு தான். ஆனால் தமிழ் நாட்டில் மற்ற மாநில மக்களை நன்றாக வளர்துவிடுகிரார்கள் அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் சினிமாவில் நடிக்க வந்துவிட்டு தமிழனை திட்டினால் எப்படி ஏற்றுகொள்ள முடியும்? ஆனால் அந்த அறிவாளிக்கு முஸ்லிம் மட்டும் தான் நல்லவர்களாக இருகிறார்கள் மற்ற தமிழர்கள் எல்லாம் கெட்டவர்கள் கேவலமானவர்கள் முஸ்லிம்களை பற்றி மற்றவர் சொல்லிவிட்டால் உடனே இவர்கள் போராடலாம் தமிழனை திட்டினால் தமிழன் கேட்க கொடாது என்பது அவரின் கருத்து. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
அடுத்து சின்மயி இலங்கை ராணுவம் தமிழர்களை கொள்வதை சரி என்று சொன்னதற்கு அப்படியே ஐவரும் ஜால்ரா அடித்தார். அதற்கும் விளக்கம் தந்தார் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முஸ்லிம்களை கொன்றது என்று இதற்கும் அதையே கூறினார். ராமர் பிறந்தார் என்பதற்காக அப்போது அந்த </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
மசூதியை இடித்தது கண்டிப்பாக தவறு தான் முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவர்களை கொன்றதும் இன்று வரை முஸ்லிம்களை தீவிரவாதியாக பார்ப்பதும் தவறு தான் என்பது ஏற்றுகொள்ள கூடிய உண்மை தான். அதே போல் முஸ்லிம்களை இப்படி தவறாக மற்றவர்கள் நினைப்பதற்கு அப்பாவிகளை கொள்ளும் தீவிரவாதிகள் முஸ்லிம் மதத்தை ஆயுதமாக பயன்படுத்துவது தான் காரணம் என்பதும் அதே உண்மை தான். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
அதற்காக பலர் கொள்ளப்படும் போதும் கஷ்டப்படும்போதும் அதற்க்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் முஸ்லிம்களை கொன்றுவிட்டார்கள் இனி யார் செத்தால் என்ன அன்று அவர் நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
நான் இங்கு முஸ்லிம் மதத்தை தவறாக கூறவில்லை ஆனால் அந்த மதத்தை பயன் படுத்தி மக்கள் விளைக்கும் சிலரின் வக்கிர கண்டிக்கிறேன். குரானிலோ திருவிவிலியத்திலோ அல்லது பகவத் கீதையிலோ பிற மனிதர்களை சாகடிக்க வேண்டும் என்றோ அல்லது அவர்கள் மனம் நோகும்படி கேவலமாக பேசவேண்டும் என்றோ குறிப்பிடபட்டுள்ளதா நண்பர்களே? </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
மதம் ஜாதி அனைத்துமே மனிதனால் எழுதப்பட்டவை தானே பகவத்கீதையை கிரிஷ்ணபரமத்மாவா எழுதினர், திருவிவிலியத்தை இயேசு கிறிஸ்துவா எழுதினார் அல்லது குரான் தான் நபிகள் அவர்களால் எழுதப்பட்டதா? அனைத்துமே மனிதன் எழுதியவை தானே மனிதன் எழுதிய அதிலும் கூட நல்ல கருத்துகள் தானே சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையே காரணமாக வைத்து சண்டையிட்டு கொள்வது என்ன நியாயம். வானம் என்ன கிறிஸ்துவர் முஸ்லிம் ஹிந்து என்று பார்த்து தான் மழை தருகிறதா? மரங்கள் மதத்தை பார்த்து தான் சுவாசிக்க காற்று தருகிறதா? இல்லை சூரியன் தான் மதத்தை பார்த்து ஒளி தருகிறதா? உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணி விலங்குகளுக்கு தெரியுமா நீங்கள் என்ன மதம் என்று அவைகள் எல்லாம் மதம் பார்த்து தான் உங்கள் வீட்டில் வளர்கின்றனவா? கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் அறிவு குறைந்த இவைகள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்பொழுது அதே கடவுளால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆறறிவு உள்ள மனிதன் பொதுவாக செயல் படமால் இப்படி மதத்தின் பெயரால் சண்டையிடுவது நியாயமா? தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் குழந்தைக்கு தெரியுமா நாம் இந்த மதத்தில் பிறக்கிறோம் என்று அது பிறந்து பிறகு தானே நீங்கள் அதற்கு ஒரு பெயரை வைத்து மதம் என்னும் நஞ்சை ஊட்டுகிறீர்கள். இதுவரை நடந்தது என்னவேண்டுமானாலும் இருக்கலாம் அதை சொல்லி வரபோகும் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம் நபர்களே இந்த உலகில் வாழும் கொஞ்ச நாளில் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று உறுதி எடுப்போம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/14219325150537696848noreply@blogger.com13