Pages

30/11/2013

இது தமிழ்நாடா இல்லை இலங்கையா?


இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும்  எங்காவது சந்தித்து கொண்டால் அவர்கள் தாய் மொழியில் தான் பேசுவார்கள். இத்தனைக்கும் தெலுங்கு, மலையாளம் எல்லாம் தமிழிலிருந்து சென்றவை தான் இருந்தாலும் கூட மலையாளிகளோ தெலுங்கர்களோ எங்காவது சந்தித்து கொண்டால் அவர்கள் தாய் மொழியில் தான் பேசுவார்கள். ஆனால் உயர்தனிச்செம்மொழி என்று வர்ணிக்கப்படும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தமிழ் பேசுவதையே கேவலமான செயலாக கருதுகின்றனர்.

சரி மொழிபற்றில் தான் இப்படி மக்களுக்குள்ளவது ஒற்றுமையாக இருகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. ஒரு தமிழன் முன்னேறிவிட்டால் அதை பார்த்து பொறாமை படுவதில் முதல் ஆளாக இன்னொரு தமிழன் இருக்கிறான். இப்படி இருந்த தமிழகத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் சேர்ந்து போராடிய ஒன்று தான் இலங்கை தமிழர் பிரச்சனை பலர் இறங்கி போராடாவிட்டாலும் அவரவர் மனதிலாவது இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு பெறவேண்டும் என்று நினைத்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மக்களிடமே இந்த எண்ணம் வந்தாலும் தமிழ் நாட்டை ஆளும் அரசியல் வாதிகளுக்கு இந்த எண்ணம் துளியும் இல்லை என்பது சமீபத்தில் அவர்கள் செய்யும் செயலை பார்த்தால்  தெளிவாக தெரிகிறது.

இலங்கையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த இடங்களை தடம் தெரியாமல் அழித்து வருகிறார் ராஜபக்சே. இந்நிலையில் தமிழ் நாட்டில் உள்ள  தஞ்சாவூரில் இலங்கை போரில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களையும் கொடுமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்றை அமைத்தார் பழநெடுமாறன் அவர்கள். அந்த நினைவு முற்றம் போரில் தமிழர்கள் பட்ட வேதனையை எதிர்காலதமிழர்களுக்கும் நினைவு படுத்தும் வகையில் நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.





தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக ஒரு நல்லது செய்தால் அதை தடுப்பதற்கு தான் தமிழகத்தில் ஒரு கூட்டமே இருகிறதே அது எப்படி இந்த நினைவு முற்றத்தை மட்டும் விட்டுவிடும். நடராஜன் என்பவரின் மீது உள்ள தனிப்பட்ட பகையினை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் மீது காட்டியுள்ளது தமிழக அரசு. இலங்கையில் ராஜபக்சே செய்த அதே போன்றதொரு செயலை தான் இங்கு தமிழக அரசும் செய்திருக்கிறது. இவற்றை பார்க்கும்போது தான் எனக்கு "இது தமிழ்நாடா இல்லை இலங்கையா?" என்று கேட்கதோன்றுகிறது.





தமிழர்களுக்காக போராடுதல், தமிழர்களை பெருமை படுத்தும் வகையில் செயல்களை செய்தல் போன்றவை இலங்கையில் தான் முடியாது ஆனால் இன்று தமிழ் நாட்டிலும் அதே நிலை இருப்பது வருத்தத்திற்குரியது. இலங்கை தமிழர்களுக்காக போராடிய லயோலா கல்லூரி மாணவர்களை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக கைது செய்தது தமிழக அரசு. மாணவர்களை கைது செய்ததை கண்டித்து போராடிய மற்ற மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காலவரையற்ற  விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. தமிழ் நாட்டில் நாட்டில் இருந்துகொண்டு தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசியல் வாதிகளை குறை சொல்வதா இல்லை அவர்கள் செய்யும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் நம்மை போன்ற மக்களை குறை சொல்வதா என்றே தெரியவில்லை.


வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வீர தமிழர்களின் பரம்பரையில் வந்த நம் மக்களுக்கு உணர்சிகள் செத்துவிட்டதா என்ன?... அப்படியிருக்க வாய்ப்பே இல்லையே ஏன் என்றால் உணர்ச்சி செத்தவன் எல்லாவற்றையும்  சகித்துகொள்வான். ஆனால் நம் தமிழ் மக்கள் அவ்வபோது போராட்டம் நடத்திக்கொண்டு தான் இருகிறார்கள். ஆனால் அந்த போராட்டம் எவ்வளவு உயர்ந்த காரணத்திற்காக என்று பார்த்தல் நம் மக்களின் மேன்மை நமக்கு புரிந்து விடும்.

"என் மதம் தான் பெரியது எப்படி எங்கள் மதத்தை தவறாக காட்டலாம்?" ...

 " எங்கள் தலைவர் ரஜினி தான் பெரியவர் கமல் ரஜினியின் ஸ்டைலுக்கு முன்னால் நிற்கமுடியுமா?"...

 "எங்கள் உலகநாயகன் தான் சிறந்தவர் கமலின் நடிப்பிற்கு முன்னால் ரஜினி தூசு"...

" எங்கள் தளபதி தான் சிறந்தவர்  அதிக ஹிட் படங்களை கொடுத்துள்ளார் "...

"எங்கள் தல போல வருமா ?"...

மேலே உள்ளவைகளுக்காக தான் நம் மக்கள் தினமும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைபதிவுகளில் போராடி வருகின்றனர். இந்தகைய உயர்ந்த அவர்களின்  கொள்கைகளில் அவர்கள் வென்று விட்டால் அவர்கள் ஜென்ம பலன் அடைந்தவர்களாகி விடுவார்கள். இதற்காக தான் நம் மக்கள் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். தமிழ் மொழி அழிந்துகொண்டு வந்தால் என்ன... தமிழர்கள் அழிந்தால் என்ன... தமிழ் மக்களின் நினைவு சின்னங்கள் அழிந்தால் என்ன... நம் மக்களுக்கு தேவை அவரவர்க்கு பிடித்த நடிகரின் படம் ஓட வேண்டும் அவரவரின் மதம் வளர வேண்டும்.

மக்களே சிந்தியுங்கள் பொழுதுபோக்கும் சினிமாவும் வேண்டாம் என்று சொலவில்லை. அவை மட்டுமே வாழ்கை என்று நினைப்பதை நிறுத்துங்கள். மூன்று மணிநேர படத்துக்காக உங்கள் மொத்த வாழ்க்கையையும் செலவழிக்காதீர்கள். உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை பாருங்கள் அது தவறில்லை ஆனால் அவர்களுக்காக உங்கள் வாழ்கையையும், நண்பர்களையும், உயிரையும் இழக்காதீர்கள். உங்கள் வாழ்கையை உங்களுக்காக வாழுங்கள். நாம் போராட வேண்டியது ரஜினி கமலுக்காக இல்லை நம் தமிழ் மொழிக்காக, நாம் போராட வேண்டியது விஜய் அஜித்திர்காக  அல்ல நம் உடன்பிறவா சகோதரர்களாகிய நம் தமிழ் மக்களுக்காக, நாம் போராட வேண்டியது மதத்தின் வளர்சிக்காக அல்ல நம் தமிழ் நாட்டின் வளர்சிக்காக.....

சிந்திப்போம் செயல்படுவோம் இணைந்த கைகளால் இமையத்தையும் வெல்லலாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்புரிந்து வெற்றிக்கொடி நாடுவோம்......

07/11/2013

நடிப்பு கடவுள் உலக நாயகன்


முதலில் இன்று  தனது  பிறந்த நாளை கொண்டாடும் நமது உலகநாயகன் கமல் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்...



கமல் அவர்கள் தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்று தனது கலை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு அவர் தொட்ட உயரங்கள் சொல்லி தெரியவேண்டியவை இல்லை. நான் சிறு வயதாக இருக்கும்போது எனக்கு தெரிந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே. டிவியில் பாடல் போடும் போது ரஜினி பாட்டு போட்ட உடன் அடுத்து கமல் பாட்டு போடுவார்கள். சில நேரங்களில் கமல் பாட்டு அடுத்து ரஜினி பாட்டு என்று போடுவார்கள். யார் இவர் ரஜினிக்கு இணையாக இவருக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அப்போது நினைப்பேன். சற்று வளர்ந்த பிறகு நான் பார்த்த முதல் கமல் படம் அபூர்வ சகோதரர்கள் அந்த படம் பிடித்திருந்தது.


அதன் பிறகு சில படங்கள் பார்த்தேன் ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை ஆனால் ரஜினி படங்கள் அனைத்தையும் விரும்பி பார்ப்பேன். கமல் தன் படங்களில் செய்யும் சில நடிப்புகள் அதன் பிறகு பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் படம் முழுவதும் பார்க்கும் எண்ணம் இல்லது இருந்தது. அதன் பிறகு எனது நண்பர்கள் சிலர் கமல் நல்ல நடிகர் என்றும் அவரது பல படங்கள் பல விருதுகளை வாங்கியுள்ளது என்றும் கூறுவார்கள். ஆனால் எனக்கு என்றுமே ரஜினி மட்டும் தான் நடிகர் அவரது ஸ்டைல் போல யாரவது பண்ண முடியுமா என்று தோன்றும்.

பின்னர் வசூல் ராஜா படம் எனது நண்பன் மூலமாக பார்க்க நேர்ந்தது அந்த படமும் அதில் உள்ள காமெடி பிடித்திருந்தாலும் கமல் மேல் நல்ல அபிப்ராயம்  வரவில்லை. இப்படியாக நான் ரஜினிக்கு மட்டுமே ரசிகராக இருந்து அவரை மட்டுமே தமிழ் சினிமாவின் விடிவெள்ளி என்று நினைத்தேன். அதன் பிறகு மற்ற நடிகர்களின் படங்களும் சிலவற்றை பார்க்க ஆரம்பித்தேன். அதிலும் கூட ரஜினி படம் போல அதிரடியாக உள்ள படங்களை மட்டுமே பார்ப்பேன். ரஜினி படங்களுக்கு பின் நான் பார்த்த அதிரடி திரைப்படம் அஜித்தின் அமர்க்களம். அதன் பிறகு அஜித் படங்கள் சிலவற்றை பார்த்தேன் ஆனால் அவற்றில் ஏதும் பிடிக்கவில்லை. பின்னர் நான் விஜயின் திருமலை படம் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பிறகு விஜயின் கில்லி, திருப்பாச்சி போன்ற படங்களை தொடர்ந்து பார்த்தேன். விஜயின் மீது சற்று ஈர்ப்பு வந்தது.

ஆனாலும் ரஜினி தான் என் தலைவர் என்று மற்ற மாணவர்களுடன் பேசுவேன். அப்போதெல்லாம் எனது நண்பர்கள் அனைவருமே ரஜினி ரசிகர்கள் எனவே நாங்கள் பல நேரங்களில் ரஜினி படத்தை பற்றி பேசுவோம். அவருக்கு இணையாக தமிழ் சினிமாவில் யாருமே இல்லை என்று சொல்லி மகிழ்வோம். திடிரென்று சில நண்பர்கள் கமல் ரசிகர்களாக மாறினார்கள். என்னதான் ரஜினி ஸ்டைலாக படம் நடித்தாலும் கமல் போல அவரால் நடிக்க முடியாது என்று எங்களிடம் சண்டைக்கு வருவார்கள். நாங்கள் பலர் ரஜினி ரசிகர்களாக இருப்போம் அவர்களில் ஒருசிலர் தான் இருப்பார்கள் எனவே நாங்கள் அவர்களை சுலபமாக சமாளித்து விடுவோம். அப்படி ஒரு நாள் பேசும்போது எனது நண்பன் கமல் நடித்த அன்பே சிவம் படம் போல ரஜினியின் ஒரு படமாவது இருக்குமா சொல் என்று கேட்டான். நாங்கள் அப்படி ஒரு படம் வந்தாதா என்று திருப்பி கேட்டோம்  அவனால் பதில் பேசமுடியவில்லை.

எனக்கு அப்படி ஒரு படம் வந்தது என்பதே அவன் சொன்ன பிறகு தான் தெரியும். அதன் பின் ஒரு நாள் அன்பே சிவம் படத்தில் கமல் நடித்த ஒரு காட்சி டிவியில் பார்த்தேன் அதில் கமல் தோற்றமும் அவர் முகமும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் அடுத்த நாள் இதை எனது நண்பர்களிடம் சொல்லி ரஜினி ரசிகர்கள் நாங்கள் சேர்ந்து கமல் ரசிகர்களை கிண்டல் செய்தோம். அப்போது ஒருவன் மிக கோவமாக ஒரு காட்சி வைத்து ஏதும் சொல்ல முடியாது அழகான கமல் அதில் படத்துக்காக அப்படி நடித்திருக்கிறார். படம் பாருங்கள் அப்போது தெரியும் என்றனர். என்னடா இவன் ஏதோ ஒரு சூப்பர் ஹிட் படத்தை சொல்வது போல இந்த தோல்வி படத்தை சொல்கிறானே என்று நினைத்து அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வழியாக அதன் CD கிடைத்தது நான் மட்டும் பார்த்தல் கமல் படத்தை பார்க்க முடியாதே போர் அடிக்குமே என்று நினைத்து எனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு பார்த்தேன்.


படம் ஆரம்பித்தது ஒரு ஒரு சில நிமிடங்கள் சென்றது மாதவன் கமலின் முகத்தை பார்த்து தவறாக நினைத்து பின் அவர் அப்படி இல்லை என்று தெரிந்துகொள்வது போல ஒரு காட்சி வந்தது கமல் தோற்றத்தை பார்த்து படத்தை பற்றி தவறாக நினைத்த எனக்காகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது போல இருந்தது. அதன் பின் சில நிமிடங்கள் படம் மிக மெதுவாக சென்றுகொண்டு இருந்தது. எனக்கு போர் அடித்தது மற்ற கமல் படங்களை விட மெதுவாக செல்கிறதே இது எப்படி அவனுக்கு பிடிகிறது என்று நினைத்தேன்.எனது நண்பன் ஒருவன் எழுந்து சென்றுவிட்டான் நானும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். இந்த படத்துக்கு இப்படி ஒரு பில்டப் கொடுத்தானே அதற்காகவது முழுவதும் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் சொல்லி அவனை கிண்டல் செய்ய வேண்டும் என்று நினைத்து பார்க்க ஆரம்பித்தேன். இன்னும் சற்று நேரம் முடிந்த பின் படம் போர் இல்லை என்றாலும் மிக நன்றாக உள்ளது என்று சொல்லுமளவுக்கு இல்லை என்று தோன்றியது கால்வாசி படம் பார்த்த நிலையில் பரவாயில்லை மெதுவாக சென்றாலும் எதோ படத்தில் இருக்கிறது என்று தோன்றியது அதுவரை படத்தை கிண்டல் செய்த எனது மற்ற நண்பர்களும் இப்போது அமைதியாக பார்த்தனர்.

படம் பார்த்து முடிக்கும் போது எங்கள் அனைவர் கண்களிலும் சில துளி நீர் இருந்தது. எனக்கு அதுவரை கமல் மேல் இருந்த அபிப்ராயத்தை அந்த ஒரு படம் மாற்றியது. இப்படி ஒரு படம் தமிழிலா எப்படி இத்தனை  நாள் பார்க்காமல் இருந்தோம். அன்பே சிவம் படத்துக்கு இணையாக நான் அதுவரை  பார்த்த அணைத்து படங்களையும் நினைத்து பார்த்தேன் ஒப்பிடவே முடியவில்லை. இப்படி ஒரு படம் எப்படி தோல்வி அடைந்தது என்ன காரணம் என்று நினைத்து வேதனை அடைந்தேன். அடுத்த நாள் எனது நண்பனை பார்க்கவே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அவனுக்கு அன்பே சிவம் படம் நான் பார்த்தது தெரியாது. பாதியிலேயே எழுந்து சென்ற நண்பன் அவனிடம் சென்று என்னடா படம் எதோ நல்ல இருக்கும்னு சொன்ன படத்தோட ஆரம்பமே பார்க்க முடியல என்று கிண்டல் செய்தான். அதற்கு அவன் நீ முழுதாக பார்த்தாயா என்று கேட்டான். அவன் அந்த மொக்கையை நான் பார்கவில்லை அவன் தான் பார்த்தான் என்று என்னை கை காட்டினான். அப்போது என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் யாரும் வரவில்லை. எனவே என்னிடம் வந்து என்னடா படம் எப்படி இருந்தது என்று சற்று தயங்கிய படியே கேட்டான். எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இவ்வளவு நாள் அவன் சொல்வதை கேலி செய்துவிட்டு இப்போது எப்படி இதை சொல்வது என்று நினைத்தேன். அன்பே சிவம் படத்தை நினைத்து பார்த்தேன் இந்த படத்தை நன்றாக இல்லை என்று சொன்னால் வேறு எந்த படம் தான் பிடிக்கும் என்று சொல்வது என்று தெரியவில்லை. நான் அவனிடம் சரணடைந்துவிட்டேன். நீ சொன்னது சரி தான் படம் சூப்பர் என்று சொன்னேன். அருகிலிருந்த ரஜினி ரசிகன் என்னடா சொல்ற ஆரம்பமே அப்படி இருந்தது எப்படி நல்ல இருக்குனு சொல்ற என்று கேட்டான். நீ படத்தை முழுதாக பார் படம் உனக்கும் பிடிக்கும் என்றேன். நான் சொல்வதை கேட்டு கமல் ரசிகனான எனது நண்பன் என்னை ஆச்சர்யம்மாக பார்த்தான். 

நான் அவனிடம் இது போல வேறு சில நல்ல கமல் படம் இருந்தால் சொல்லுடா பார்க்கலாம் என்றேன். அவன் என் கையை பிடித்துகொண்டு என்னை கட்டியனைதான். இதை பார்த்த எனது ரஜினி ரசிகனான நண்பன் என்னடா ரொம்ப பண்றீங்க நாளைக்கு நான் படம் பார்த்துவிட்டு பேசுறேன்னு சொன்னான். அடுத்த நாள் அவன் கமல் ரசிகனாகவே மாறிவிட்டான். எங்கள் நண்பர்களில் பலருக்கும் கமல் பிடிக்க ஆரம்பித்தது. கமல் பற்றிய செய்திகளை தேடி படிக்க ஆரம்பித்தோம். அதுவரை இருந்த கமல் ரஜினி சண்டை அன்பே சிவம் படத்துக்கு அப்பறம் இல்லாமல் போனது. 

அதன் பிறகு அவரது படங்களும் அவரது செயல்களும் அவரின் மீது அதிகப்படியான ஈர்ப்பை ஏற்படுத்தியது அதுவரை எல்லா நடிகரையும் பெயர் சொல்லி வேலைக்காரனை அழைப்பது போல சொல்வது தான் வழக்கம் ஆனால் கமல் பெயரை மட்டும் கமல் சார் என்று தான் சொல்லுவேன். கமல் நடித்த பல படங்கள் வெளி வரும்போது ஓடாமல் பின்பு பலருக்கும் பிடிக்கும். இதை அவரே நான் ஓட்டபந்தயத்தில் ஓடவில்லை மாரத்தானில் ஓடிக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார். 

எனக்காக ஏதும் ரசிகர்கள் செய்யவேண்டாம் உங்கள் பெற்றோரை பாருங்கள் என்று சொல்லி ரசிகர்களை தன சுய நலத்துக்காக பயன் படுத்தாமல் இருப்பது அவரின் தனிப்பட்ட சிறப்பு ஆகும். அடுத்ததாக தனது உடல் பாகங்கள் அனைத்தையும் தானம் செய்துள்ளார் கமல் இது ஒன்று போதும் அவரின் மனதை புரிந்து கொள்வதற்கு சான்று.ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான். சினிமாதுறையில் உள்ள அனைத்தையும் கற்றவர் கமல். வணிகத்தனமான சில விஷயங்களில் தன்னை ஈடுபடுதிகொல்லாமல் தரமான படத்தை தருவது மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பவர் கமல். நாட்டில் நடக்கும் அணைத்து நிகழ்வுகளுக்கும் தனது கருத்தை முதலில் பதிவு செயபவர் கமல். சாதி மத பேதம் இல்லாமல் மூட நம்பிக்கைகளில் ஈடுபாடு இருப்பது இவரின் தனிப்பட்ட சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த உயர்ந்த மனிதரை வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.



கலைத்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன், நடிப்பு கடவுள், உலகநாயகன் கமல் சார் அவர்களுக்கு என் சார்பாக பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.



02/11/2013

ஆரம்பம் (இதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு)


இது தான் நான் எழுதும் முதல் விமர்சனம் பிழை ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்.....


நான் விஜய் அஜித்தின் படங்கள் எதையும் முதல் காட்சி பார்க்க மாட்டேன் ஏன் என்று உங்களுக்கே தெரியும் இருவருமே எப்போது சொதப்புவார்கள் என்று தெரியாது. எனவே ஆரம்பம் படத்தை ரிசல்ட் தெரிந்து கொண்டு பார்க்கலாம் என்று நினைத்தேன் நானும் விமர்சனம் என்று நெட்டில் தேடினால் அஜித் ரசிகர்கள் மட்டும் தான் விமர்சனம் எழுதியிருகிரார்கள். அவர்கள் படத்தை விட அஜித்தை புகழ்ந்து எழுதியிருகிரார்கள் ஆனால் படம் எப்படி உள்ளது என்று தெளிவாக சொல்லவில்லை. சரி படம் பார்த்துவரும் நண்பர்களை கேட்கலாம் என்று கேட்டால் அதிலும் குழப்பம் தான். அஜித் ரசிகர்கள் படம் சூப்பர் என்று சொல்கிறார்கள். விஜய் ரசிகர்கள் படம் நன்றாக இல்லை என்று சொல்கிறார்கள் பொதுவான சிலர் பில்லா 2 படத்துக்கு இது பரவாயில்லை ஒரு தடவை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். எனக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது என்ன ஆனாலும் சரி படத்தை  பார்த்துவிடுவது என்று முடிவு செய்து பார்த்துவிட்டேன்.

 படத்தை பார்த்தபின்பு இதற்கு விமர்சனம் எழுதலாமா வேண்டாமா என்று எனக்கு குழப்பமாக  இருந்தது என்னடா முதல் விமர்சனம் எழுத போறோம் இதை பாசிடிவாக ஆரம்பித்தால் தானே நன்றாக இருக்கும் என்று நினைத்து எழுத வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் படத்திற்கு அஜித் ரசிகர்கள் எழுதிவரும் விமர்சனங்களை பார்த்தல் இவர்கள் நல்ல படம் பார்த்ததே இல்லையா ஏன் இப்படி எழுதுகிறார்கள் அஜித்தை புகழுகிரார்கள் அது சரி தான் ஆனால் படத்தை ஏன் இப்படி புகழுகிரார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கூட 3 ஸ்டார்கள் தான் தரப்பட்டுள்ளன.
இதற்க்கு ஏன் இவ்வளவு விளம்பரம் என்று நினைத்து எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

இதோ உங்களுக்கு விமர்சனம்...


கதை என்று பார்த்தல் நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் அதே பழைய கதை தான் அதில் ஹேக்கிங் போன்ற சில புது விஷயங்களை ஆங்காங்கே தெளித்து அஜித்தை வைத்து சமாளித்து இருக்கிறார். முதல் பாதியில் ஆர்யா காட்சிகள் எல்லாம் கண்றாவியாக இருகின்றன. அஜித்தை காட்டும்போது மட்டும் நன்றாக இருக்கிறது. அஜித் முதல் பாதியில் ஆர்யாவை கடத்தி செய்யும் வில்லத்தனமான காட்சிகளை பார்த்ததும் ஆஹா அதே கேட்டவன் கதையா என்று யோசிக்க தோன்றியது. ஆர்யா அஜித்தை போலீசில் சிக்கவைத்து விட்டபின் உனக்கு இது தான் முடிவு  என்று சொல்லும்போது அஜித் இனி தான் ஆரம்பம் என்று சொல்கிறார்.




அஜித்தே சொல்லிவிட்டார் இனிமேல் படம் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதும் இல்லை என்றாகிவிட்டது. அஜித்தை போலிஸ் கைதுசெய்தபின் அஜித் யார் இதெல்லாம் ஏன் செய்கிறார் என்று ஒரு பிளாஷ்பேக் காண்பிக்கபடுகிறது. கேப்டன் படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு வந்தது அஜித் போலிஸ் அதிகாரி ரானா அவரது நண்பர் ஒரு தீவிர வாத தாக்குதலில் ரானா இறந்துவிடுகிறார். அதற்கு பின்பு தான் தெரிகிறது புல்லட் ப்ரூப் உடையில் ஊழல் நடந்திருப்பது. அதற்க்கு பழி வாங்க தான் அஜித் இதனையும் செய்கிறார் என்று சொல்லி முடிக்கபடுகிறது. இதை ஆர்யா தெரிந்தகொண்டபின் அஜித்துக்கு உதவுகிறார்.



இதற்கு பின்பு நடப்பவை எதிலும் லாஜிக் இல்லை அஜித் நாடு ரோட்டில் ஒரோ ஆபிசரை கொன்றுவிட்டு ஹாயாக நடந்து வெளி நாடு செல்வார் சுவிஸ் பேங்க் லாக்கரை ஆர்யா சுலபமாக கைப்பற்றுவார். கடைசியில் ஊழல் பணத்தை திருப்பி தர வைத்து ஒரு மெசேஜ் சொல்லி படத்தி முடிகிறார்கள்.இதில் நயன்தார உள்ள ஒரு காட்சி ஆபாசதுக்காக கதைக்கு தேவையே இல்லாமல் தினிக்கபட்டிருகிறது. படத்தில் அஜித்தை தவிர சொல்வதற்கு ஒன்றுமே இல்லை முதல் பாதியில் அஜித்தை நடக்கவிட்டு ஒட்டியிருகிரார்கள். இரண்டாவது பாதியில் அதுவும் இல்லை.

மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் படத்தை அஜீத்துக்காக கொண்டாடலாம்  ஆனால் மற்றவர்கள் ஒரு தடவை பார்க்கும் வகையில் தான் உள்ளது. ரிபிட் ஆடியன்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அஜித் ரசிகர்கள் மட்டும் பார்த்து கொண்டாடும் வகையில் ஒரு ஆவரேஜ் படமாக வந்துள்ளது.

எனது மதிப்பெண்: 40/100

01/11/2013

ஜில்லா-தீபாவளி சிறப்பு


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் ஜில்லா படத்தின் போஸ்டர் தினசரி பேப்பர்களில் வெளியாகியுள்ளது.



இளையதளபதியின் ரசிகர்கள் இந்த போஸ்டரை தளபதி தங்களுக்கு தந்த தீபாவளி பரிசாக நினைத்து கொண்டாடுகின்றனர்.

ஜில்லா படத்தின் கடைசி கட்ட படபிடிப்பு நடந்துவருகிறது. விஜய் இதில் போலிஸ் வேடத்தில் நடிக்கிறார். விஜயுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாது பலரின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இதில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

ஜில்லா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் ஜில்லா என்பது படத்தின் சிறப்பு. அஜித்தின் ஆரம்பம் மற்றும் விஜயின் தலைவா 15 கோடியுடன் இரண்டாவது இடத்தில உள்ளது. கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதாலும் மோகன்லால் படத்தில்  உள்ளதாலும் ஜில்லா கேரளாவில் மம்முட்டி படங்களை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இப்படி தினமும் ஜில்லவை பற்றி செய்திகள் வெளியாவதால் தளபதி ரசிகர்கள் ஜில்லாவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஜில்லா பொங்கலுக்கு வெளியிடப்படுகிறது. அஜித்தின் வீரமும் பொங்கலுக்கு வெளியிடப்படுகிறது. 7 வருடங்களுக்கு பிறகு விஜய் அஜித்தின் படங்கள் ஒன்றாக ரிலிஸ் ஆகிறது. கடைசியாக போக்கிரி மற்றும் ஆழ்வார் படங்கள் ஒன்றாக ரிலிஸ் ஆகின அதில் தளபதியின் போக்கிரி பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...