Pages

29/10/2013

விஜய் ரசிகர்களின் நல்ல மனம்


இன்று நான் கேள்விப்பட்ட செய்தி ஒரு விஜய் ரசிகனாக எனக்கு  மகிழ்ச்சியை தந்தது. அது என்னவென்றால் மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அஜித்தின் ஆரம்பம் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து பேனர் வைதுள்ளர்னர் என்பதாகும்.


எதிரியையும் வாழ்த்தும் மனப்பான்மை உள்ளவர்கள் நம் தமிழ் மக்கள் என்பது நம் தமிழ் வரலாறுகளை பார்த்தல் நமக்கு தெரியவரும். ஆனால் காலப்போக்கில் நண்பனாக இருந்தால் கூட பிறரை வாழ்த்த நம் மக்களுக்கு மனம் வரவில்லை. அதிலும் எதிரி என்றால் அவன் வாழவே கூடாது அழிந்து போக வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம். அந்தவகையில் விஜய் என்னவோ தேச துரோகம் செய்துவிட்டது போல எப்போதும் அவரை எதிரியாகவே பார்ப்பவர்கள் அஜித ரசிகர்கள்(அஜித் அல்ல) என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் படங்கள் வெளிவரும் முன்பே அதை எதிர்த்து வசங்களை எழுதி பேனர் வைத்து அதை தோல்வி பெற வைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அஜீத் ரசிகர்கள். சமீபத்தில் துப்பாக்கி படம் வெளிவந்து நன்றாக  ஓடிகொண்டிருக்கும் பொது அதை எதிர்த்து கருப்பு தீபாவளி என்று பேனர் வைத்தனர் அஜித் ரசிகர்கள்.

நான் கூட அதே போல ஆரம்பம் படத்துக்கு விஜய் ரசிகர்களும் செய்வார்கள் என்று நினைத்து இருந்தேன் ஆனால் அனைவரும் வியக்கும் வண்ணம் அஜித் படத்துக்கு ஆதரவாக பேனர் வைத்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தங்களையும் தங்கள் தலைவன் விஜயையும் எதிரியாக நினைக்கும் அவர்களின் தலைவன் படத்துக்கு வாழ்த்து பேனர் அடித்து நாங்கள் எதிரியையும் வாழ்த்தும் அன்பு தமிழ் உள்ளங்கள் என்று நிருபிதுவிட்டனர். எதிரியையும் வாழ்த்தும் அன்பு விஜய்  ரசிகர்களில் நானும் ஒருவர் என்று சொல்வதில் எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.



விஜயையும் விஜய் ரசிகர்களையும் தேவையே இல்லாமல் கிண்டல் செய்யும் அஜித ரசிகர்களே இப்பொழுதாவது திருந்துங்கள். 

விஜய்: உன்ன யாரோ பெத்திருக்க என்ன யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தன்பி டா...

அஜித்: நான் எல்லாருக்கும் ப்ரண்டு இப்போ மாறிபோச்சு ட்ரெண்டு இந்த பூமி நம்ம கிரவுண்டு வ அடிப்போம் நல்ல ரவுண்டு....

"தளபதி ரசிகர்கள் என்று சொல்வதில் நாங்கள் பெருமையடைகின்றோம்... "

 " தலையை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்..."

" தமிழனாக வாழவே நாங்கள் பிறந்திருகின்றோம்..."

"  வாழ்க தமிழ்... வளர்க தமிழ்நாடு...



 

2 comments:

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்